Showing posts with label செல்போன். Show all posts
Showing posts with label செல்போன். Show all posts

8 May 2009

அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும்

|7 comments
தலைப்பை பார்த்துட்டு இது அரசியல் பதிவுன்னு நினைச்சா தயவு செய்து நீங்கள் படிக்க வேண்டாம். எங்க ஊர்ல அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும் கலை கட்டிக்கிட்டுருக்கு. அதனால என் பதிவிற்க்கு ஒரு இரண்டு நாள் விடுமுறை அழிக்கலாம்ன்னு நினைத்தேன். (இங்க பார்ரா..) இருந்தாலும் ஒருவாரமா தொடர்ந்து பதிவு எழுதிட்டு திடீர்ன்னு இப்படி செஞ்சா நல்லா இருக்காதுன்னு அந்த அழகிரியே தப்பு தப்பு அந்த அழகரே கனவுல வந்து சொன்னார். அதனால ஒரு ஒப்பேத்தல் பதிவு தான் இது.


நீங்கள் Iphone வாங்கலாம்ன்னு யோசிக்கிறீங்களா. அப்ப கண்டிப்பா கீழ் உள்ள நகர் படத்தை பார்த்துட்டு போங்க.



ஆனால் இந்தமாதிரி கைபேசி சாத்தியமா இல்லையான்னு தெரியல ஆனா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுது.

30 July 2008

கைபேசியில் உங்கள் வளைத்தளம்...

|0 comments
உலகம் போகும் வேகத்திற்க்கு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். அதனால் தான் எனது வலைப்பக்கத்தை இனி உங்கள் ஐபோனிலும் படிக்கலாம். எனது கைப்பேசி வளைப்பதிவின் முகவரி http://kricons.mofuse.mobi. துரதிஷ்டவசமாக S40 ஜாவா மற்றும் S60 சிம்பையன் தொழிநுட்பம் பயன் படுத்தப்பட்ட கைப்பேசிகளில் எந்த யுனிகோட் எழுத்துக்களும் தெரிவதில்லை. வெறும் சிரு சிரு கட்டங்களாக தெரியும். அனால் ஐ-போன் மற்றும் Windows கைப்பேசியில் எனது பதிவை அழகாக படிக்கலாம். Windows கைபேசியை பயன்படுத்துபவர்கள் தமிழ் யுனிகோட் எழுத்து தெரிய இந்த பக்கத்தில் செல்லலாம்.


சரி நீங்கள் பிளாக்யை கைப்பேசி பதிவை செய்துவிட்டீர்கள்!!!. நான் எப்படி செய்வது என்று கேட்பது புரிகிறது. இதோ வழி.
இந்த தளத்திற்க்கு செல்லுங்கள். உங்களுக்கான ஒரு கணக்கை துவங்க்குங்கள். உங்கள் கைப்பேசி தளத்திற்க்கான் பெயரை தேர்ந்தெடுங்கள். உங்கள் வளைத்தளத்தின் RSS முகவரியை டைப்பிடுங்கள். அவ்வளவு தான் உங்கள் பிளாகிற்க்கான் கைபேசி வளைத்தளம் ரெடி. நிங்கள் USAவில் இருந்தால் கைப்பேசியில் SMS மூலமாக உங்களுக்கு கைப்பேசி வளைத்தளதிற்க்கான் Linkயை அனுப்புகிறார்கள். வரைவில் அனைத்து நாடுகளிலும் எதிர்பார்க்கலாம்.

18 July 2008

கைப்பேசி மீது காதல் கொண்டவர்கள் பார்க்கக்கூடாதது

|0 comments
நீங்கள் உங்கள் கைப்பேசியை மீது அதிக அக்கறை வைத்துக்கொள்ள முடியவில்லையா??? இதோ உங்களுக்காகத்தான் இந்த நகர் படம்.


8 July 2008

செல்பேசி பயனர்களை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

|0 comments
நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.

தற்போது இந்த எஸ்.எம்.எஸ் பயன்படுத்தி ஹேக்கர்கள் (Hackers), செல்போன் பயனாளர்களை சொந்த நிதி விவரங்களை திரட்டுவது உள்ளிட்ட மோசடி வேலைகளில் கவனம் செலுத்தக் கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளது.

சமீபத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு செல்பேசி பயனாளருக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ல் பிரபல நிறுவனத்தின் மொபைல் பரிசுப் போட்டியில் தங்களுக்கு சுமார் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகையைப் பெற ஒரு சர்வதேச தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு அந்த எஸ்.எம்.எஸ். தெரிவித்தது. முதலில் உற்சாகமடைந்த அந்த நபர், பிறகு யோசித்துப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் எந்தப் பொருளையும் தாம் பயன்படுத்தாத போது எதற்கு இதுபோன்று எஸ்.எம்.எஸ். வருகிறது என்று சந்தேகம் கொண்டார்.

இச்சம்பவம் தற்போது செல்போன் பயனாளர்களை எச்சரிக்க உதவி புரிந்துள்ளது. அதாவது இதுபோன்ற நம்பிக்கையூட்டி செல்போன் வாடிக்கையாளர்களை ஏதாவது எண்ணை தொடர்பு கொள்ளச் செய்து தகவல்களைப் பெற்று கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு மோசடிகளில் ஈடுபடலாம் என்று செக்யூரிட்டி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கார்ட்னர் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுபோன்ற மோசடிகளால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட ஒரு தனி நபர் 1,244 டாலர்கள் வரை நஷ்டமடைகிறார் என்று தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகபட்ச எல்லைகளை தொடவுள்ள நிலையில் இந்த மோசடிகள் கணினித் துறையிலிருந்து செல்போன்களுக்கு மாறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட வடஇந்தியருக்கு வந்த அந்த ஏமாற்று எஸ்.எம்.எஸ். இதற்கு முன்னோடி என்று ஏஷியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லா தலைவர் ரோஹாஸ் நாக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு எண்ணின் தரவுகளை மற்றொரு நபருக்கு தெரிவிப்பது பற்றிய விதிமுறைகள் இந்யாவில் மிக பலவீனமாக இருக்கிறது என்றும் இந்த துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

வரும் காலங்களில் புதுவகை செல்பேசிகள் ஒரு முழு அளவிலான கணினிப் பயன்பாடுகளாகவே மாறும் சூழ்நிலையில் இது போன்ற அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சேவை வழங்குவோரின் உதவியுடன், புதிய விதிமுறைகளையும், கண்டுபிடிப்புத் தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

18 June 2008

எந்த காதால் ஹலோ???

|0 comments
கடந்த மாதம் நண்பர் பிகேபி அவர்கள் இடது காதால் ஹலோ... என்கிற பதிவில் இடது காதால் மட்டுமே ஹலோ சொல்லுங்கள் என்று அவருக்கு வந்த மின் அஞ்சல் படத்தையும் வெளியிட்டு அதனால் எற்ப்படும் பாதிப்பையும் பற்றி எழுதியிருந்தார். அதை மறுத்து நண்பர் கார்திக்கேயன் அவர்கள் அப்படி எல்லாம் இல்லை எந்த காதால் ஹலோ சொன்னாலும் 10மணி நேரத்திற்க்கு மேல் பேசுபவர்களுக்கு தான் தான் அந்த பாதிப்பு வரும் என்றும் இந்தியாவி அதை பற்றிய அறிவு கம்மி என்றும் கூறியிருந்தார். இப்பேது தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இதற்க்குறிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. அதற்குறிய சுட்டிகள் சுட்டி1 சுட்டி2.

அதேபோல் இப்போதெல்லம் சிட்டுக்குருவிகளை பார்க்க முடிவதில்லை. (வேண்டுமென்றால் குருவி படம் பார்க்கலாம்). தேனீக்களும் குறைந்து வருவதாக தகவல். இவை அனைத்தும் செல்போன் கோபுரங்களின் மூலம் வரும் கதிர் வீச்சுகளினால் தான். தேன் கூட்டை கழைக்க முன்பெல்லாம் தீப்பந்தம் எடுத்துக்கொண்டு செல்வார்கள் இப்போது ஒரு செல்போனை எடுத்துக்கொண்டு சென்றால் அத்தனை தேனீக்களும் பறந்துவிடுமாம்...


எது எப்படி இருந்தாலும் செல்போன் பேசுபவர்களுக்கு பேசிக்கொண்டேதான் இருக்கப்போகிறர்கள். முன்பு குளிர் பானங்களில் பூச்சி கொல்லி மருந்து கலந்துள்ளதாக சொன்னார்கள் அதற்க்கா என்ன குளிர்பானங்கள் குடிப்பதையா விட்டுவிட்டர்கள்...

17 June 2008

பார்வையற்றவர்களுக்கான செல்போன்

|0 comments
செல்போன் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான ஸ்பைஸ், பார்வையற்றவர்கள் எளிதாகபயன்படுத்தும் வகையிலான புதிய செல்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதனைத் தெரிவித்த ஸ்பைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் கவுல், இதற்கான பணியில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறினார்.

பார்வையாற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், பிரெய்லி (braille) நம்பர் பேட் கொண்ட இந்த வகை செல்போன் அடுத்த 3 மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் லைப்டைம் ப்ரிபெய்டு இணைப்புடன் கூடிய ரூ.599 செல்போனை நவீன் கவுல் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 75 கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த புதிய செல்போனில் 3 மணி நேரம் தொடர்ந்து பேசும் அளவுக்கு பேட்டரி சக்தி உள்ளது. ஸ்பீக்கர் வசதியுள்ள இந்த போனில் 9 நம்பர்களை ஸ்பீட் டயல் வசதியில் வைத்துக் கொள்ள முடியும்.

1 June 2008

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

|2 comments
செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.

அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.

அதாவது வாடிக்கையாளர்கள் பேக்-அப் தேவையான தரவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுபிறகு ஜிபிஆர்எஸ் வழி சர்வரை அடையும் அதன் பிறகு ஒரு டிஜிட்டல் அறையில் சேமிக்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும்.


இது பாதுகாபானதே. ஏனெனில் பயனர் அடையாளம் மற்றும் பாஸ்வேர்டு இருந்தால் மட்டுமே இந்த தகவலை அணுக முடியும். ஒவ்வொருவரும் இந்த சேவையை தங்கள் செல்பேசியிலேயே ஏற்படுத்தி கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அல்லது செல்பேசி இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் மூல்மாகவோ கோரிக்கை அனுப்பி இந்த சேவையை செல்பேசியில் உருவாக்கிக் கொள்ளலாம்.

சிம் கார்டிலிருந்து தரவுகளைப் பெறும் மென்பொருளைக் காட்டிலும் இந்த மென்பொருள் அதிக பயனுள்ளது. அதாவது இதில் அழிக்கப்பட்ட தரவுகளை கூட வாடிக்கையாளர்கள் செல்பேசி தொலையும் பட்சத்தில் திரும்பப் பெறலாம். தங்கள் தொலைந்த செல்பேசியில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்கள், அழித்த தகவல்கள் என்று அனைத்தையும் செல்பேசி தொலைந்தாலும் ஒரு நெட்வொர்க் வசதி மூலம் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் ஒரு செல்பேசி சாதனத்திலிருந்து வேறு செல்பேசி சாதனத்திற்கு மாறினால் கூட தகவல்களை எந்தவித சிரமமும், தடையும் இன்றி புதிய செல்பேசிகளில் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த தரவு மீட்பு பயன்பாட்டுச் சேவையை பயன்படுத்தும் 3வது நிறுவனம் பார்தி ஏர்டெல் ஆகும். மலேசியாவின் மேக்சிஸ், இந்தோனேஷியாவின் இந்தோஸாட் ஆகிய 2 நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.