Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

19 August 2009

மதுரைகார கல்லூரி பெண்களின் கலக்கல்...

|5 comments
இந்த வார அவள்விகடனில் வெளிவந்த எங்க ஊர் காலேஜ் பெண்களின் கலக்கல்களை இங்கு கிளிக்கி பாருங்க....

13 April 2009

கல்யணா கலெக்சன்ஸ்

|4 comments
என்னங்க என்னோட காதல் கலெக்சன்ஸ் படிச்சியிருப்பீங்க.... படிக்காதவங்க இங்கே வந்து படிச்சுக்கோங்க. அட நமக்கு காதல் எல்லாம் வேணாம்பா இந்த காதலே பிடிக்காது எப்படிப்பா காதலில்லிருந்து தப்பிப்பது என்று இங்கே தெரிஞ்சுக்கோங்க...

டைரக்டா கல்லாணம்தான் என் சொல்பவரா நீங்கள்??? உங்களுக்குதான் இந்த பதிவு

பொண்னுபார்க்க போறிங்களா??? இதையும் இதையும் கண்டிப்பா படிச்சுட்டு போங்க

அதுக்கு முன்னாடி இதையும் படிச்சா பொண்னு உங்க கிட்ட என்னென்ன கேள்வி கேப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்

இதெல்லாம் முடிஞ்சுருச்சுப்பா இனிமே திருமணம் தான் அப்படின்னு சொல்லுபரா நீங்கள் முதிலில் திருமணம்ன்னா என்னன்னு இங்கும், இங்கும், இங்கும் தெரிஞ்சுக்கலாம்

கல்யாணம் எல்லாம் முடிஞ்சுருச்சுப்பா அப்படிங்கிறிர்களா??? புதுமண தம்பதிகள் கண்டிப்பாக இதையும் இதையும் படிங்க


மனைவியை எப்படிப்பா கவர்வது என கேட்கிறிர்களா இதை படிங்க

கல்யாணம் எல்லாம் முடிஞ்சுருச்சு ஆனா அவ என்ன பேசுரான்னுதா புரியலா என்பவர்கள் இதை படிங்க

இந்த வயதிலெல்லாமா காதல் வரும் என கண்டிப்பாக நினைப்பீர்கள் இதை படித்தால்...

என்னடா இவன் காதல்ன்றா கல்யாணம்ன்றா ஏதாச்சும் டிரிக் இல்லனா டிப்ஸ் இருக்கும்ன்னு வந்தா இப்படி ஏமாத்துரானேன்னு நினைகுறேங்களா??? கவலைய விடுங்க அடுத்த பதிவு Windows7 இலவசமாக வாழ்நாள் முழுவதும்...

9 April 2009

காதல் கலெக்சன்ஸ்

|2 comments
இப்பெல்லாம் எண்னுடைய நண்பர்கள் பல பேர் பேசாம நானும் அவனை போல லவ் பன்னீர்கலாம் போல என்று ரொம்ப பீல்பண்ணி என்னிடம் சொல்வது உண்டு. இப்போது பெண் கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பு மென்பொருள் வல்லுனர்களை தேடி அலைந்த பெண் வீட்டினர் இப்போது கட்டிட பொரியாளர் மற்றும் மெக்கானிக்கல் பொரியாளர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எது எப்படியோ அவர் அவருக்கென்று என்ன இருக்கிறதோ அது தான்... சரி விஷயத்துக்கு வருவோம்...


பேசாம நானும் லவ் பன்னீர்க்கலாம் என்று நினைப்பவரா நீங்கள் முதலில் காதல்னா என்ன என்று இங்கே தெரிஞ்சுக்கலாம்

காதல்னா என்னானு தெரியும் எப்படி பெண்களை மடக்குவதுனுதானே கேட்குறீங்க??? அதுக்கு பிகர் கரெக்ட் பண்ண இங்கேயும் பெண்கள் மனசை கவர்வது எப்படினு இங்கேயும் தெரிஞ்சுக்கலாம்

சரி பெண்களின் மனசை கவர்ந்து மடக்கியாச்சுப்பா நாளைக்கு ஐ லவ் யூ சொல்லம்னு இருக்கேன் அப்படினு கேட்கிறீக்களா இதை படிச்சுட்டு போங்க

ஐ லவ் யூ எல்லாம் சொல்லாம நான் லெட்டர் மூலமா சொல்லான்னு இருகேனுங்கிறீங்களா அப்படினா இதை படிங்க

அப்படியே ஒரு காதல் கவிதை இருந்தா நல்ல இருக்குமுன்னு நினக்கிறேங்களா??? அப்படினா இதை எழுதுங்க

இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன் அடுத்த பதிவில் பொண்ணு பார்க்க போவதிலிருந்து மணைவியை கவர்வது பற்றி வரை கல்யாண கலெக்சன்ஸ்ல் பார்ப்போம்...

4 January 2009

ரொமான்ஸ் ரகசியங்கள்

|6 comments
சில மாதங்களுக்கு முன்னால் சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக ரொமான்ஸ் ரகசியங்கள் என்ற புத்தகத்தை உங்களுக்காக வழங்குகிறேன்.



ரொமான்ஸ் இந்த வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது? கண்டிப்பாக ஒவ்வொரு தம்பதியரும் நிச்சயம் படித்து உங்களது இல்வாழ்க்கையை கொஞ்சம் கூடுதல் சுவையுடன் ருசிக்கலாம்.



இந்த புத்தகத்தை தொடர்ந்து அவள் விகடனில் வெளிவந்த ஆண்-பெண் அறியவைக்கும் உளவியல் தொடர் மின் புத்தகம் மிக விரைவில் இந்த வலைபூவில் கிடைக்கும்



ரொமான்ஸ் ரகசியங்கள் மின் புத்தகம் பதிவிறக்க


Scribd

Rapid share

Mega upload

24 July 2008

வி‌ண்வெ‌ளி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய அணுகவு‌ம்

|0 comments

உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனா‌ல் ‌திருமண‌ம் நட‌ப்பது இ‌ன்றோ அடு‌த்த மாதமோ அ‌ல்ல 2011‌ல்.

2011‌‌ம் ஆ‌ண்‌டி‌ல் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்‌கிறது அ‌ந்த ‌விள‌ம்பர தகவ‌ல்.

இ‌ங்கேயே ஒரு ‌திருமண‌த்‌தி‌ற்கு ல‌ட்ச‌க்கண‌க்‌கி‌ல் செலவு செ‌ய்‌‌கிறோ‌ம். விண்வெளி‌யி‌ல் எ‌ன்றா‌‌ல்!!!! கட்டணம் எவ்வளவு இரு‌க்கு‌ம்? ரொ‌ம்ப ஒ‌ன்று‌ம் அ‌திக‌ம் இ‌ல்லை வெறு‌ம் ரூ.10 கோடிதா‌ன். 10 கோடி கொடு‌த்து ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் ஜோடி‌‌க்கு விண்வெளியில் சிறிய விண்வெளி ஓடத்தில் திருமணம் இனிதே நடந்தேறும்.

இ‌ந்த 10 கோடி‌யி‌ல் ‌பூ‌மி‌யி‌ல் நட‌க்கு‌ம் ‌திருமண வரவே‌ற்பு, மணம‌க்க‌ளி‌ன் ஆடை, போ‌க்குவர‌த்து செலவு, மணம‌க்களு‌க்கு ‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் பய‌ணி‌ப்பத‌ற்கான 4 நா‌ள் ப‌யி‌ற்‌சி‌க் க‌ட்டணமு‌ம் அ‌ட‌ங்கு‌ம்.

மணமக்களுடன் ‌திருமண‌ம் நட‌த்‌தி வை‌க்க அ‌ய்யரோ அ‌ல்லது பா‌தி‌ரியாரோ உட‌ன் செ‌ல்லலா‌ம். அதை‌த் த‌விர மணம‌க்களுட‌ன் மேலு‌ம் 2 பே‌ர் விண்வெளி திருமணத்தில் பங்கேற்கலாம். அதை‌த் த‌விர ‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் நட‌க்கு‌ம் ‌திருமண‌ம் பூ‌மி‌யி‌ல் நேரடியாக ஒ‌ளிபர‌ப்பு‌‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம்.

திருமணச் சடங்குகளில் பெரும்பாலானவற்றை பூமியில் முடித்துக்கொண்டு உச்சகட்டமாக மாலை மாற்றுவது அல்லது நம்ம ஊர்க்காரர்கள் என்றால் தாலி கட்டுவதை விண்வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இ‌ந்த விண்வெளி திருமணத் திட்டத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் நிறுவனத்துடன் ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜ‌ப்பா‌‌னி‌ன் ‌வி‌ண்வெ‌ளி ‌திருமண‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ப் பா‌ர்‌த்தா‌ல் அடு‌த்தது ‌நில‌விலேயே தே‌னிலவு‌க் கொ‌ண்டாடு‌ம் ‌தி‌ட்ட‌ம் வரு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌மோ...

இந்த வழியாக இந்த பதிவு

4 July 2008

வேகப் பிசாசு!

|0 comments
இந்தியாவில், சூப்பர் பைக்குகளின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. யமஹாவுக்கு அடுத்தபடியாக, இப்போது DUCATIம் சூப்பர் பைக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. DUCATI சூப்பர் பைக்குகளில் பெயர் பெற்றது, 1000 சிசி திறன்கொண்ட 'DUCATI 1098' பைக். இதுவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து இருக்கிறது.


DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,
உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது. 'இந்த பைக்குக்கு, இளம் பெண்களின் லிஃப்ட் தொந்தரவு நிச்சயம் இருக்கும்' என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.



ஸ்டார்ட் பட்டனைத் தட்டியவுடன், கொஞ்சம் தாமதித்துதான் ஸ்டார்ட் ஆகிறது. காரணம், பைக்கினுள் இருக்கும் சென்ஸார்கள், இன்ஜினில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்த பிறகுதான் ஸ்டார்ட்டர் மோட்டாரைச் சுழல அனுமதிக்கிறது. பைக் ஸ்டார்ட் ஆனவுடன் 'கீச்' சத்தம் காதைக் கிழிக்கிறது. சத்ததைக் கேட்டவுடன் தெருநாய்கள் தெறித்து ஓடிவிடும்.



முதல் கியரைத் தட்டியதும் தலையில் 'நங்'கென்று கொட்டியது போல வெறிகொண்டு பறக்கிறது. இந்த பைக்கை, பயபக்தியுடன் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. கிளட்ச்சைப் பிடித்து ஓட்ட உடம்பில் எக்ஸ்ட்ரா சக்தி வேண்டும். 160தீலீஜீ சக்திகொண்ட இந்த வேகப் பிசாசை ஓட்ட 'தில்' நிறைய வேண்டும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.



பிரேக்குகள் பிடித்த நொடியில் நிற்கின்றன. ஆனால், நீண்ட நேரம் ஓட்டினால், இன்ஜின் சூடு கால்களின் தொடை வரை ஏறுகிறது. 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை, வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பைக் ரசிகர்களின் தீராத ஆசை!


நன்றி, விகடன்.

11 June 2008

நீங்கள் வெற்றிகரமான மனிதரா???

|1 comments
ஒரு மிகப் பெரிய தொழிலதிபர். நிற்கக்கூட நேரம் இல்லாதவர். பறந்துகொண்டே இருப்பவர். பல்வேறு இடங்களில் தொழில்! பல தரப்பட்ட தொழில் சந்திப்புகள். வெற்றிகளைத் தவிர வேறு ஏதும் அறியாதவர். அவர் கை வைத்தவை எல்லாம் பொன்னாகும் காலகட்டம்.


இவரது கடல் போன்ற பங்களாவில் நுழைவாயிலை ஒட்டிய அறையில் வயதான அம்மா. உண்ணும் உணவைவிட மருந்து மாத்திரைகளின் அளவு அதிகம் என்கிற நிலையில் உடம்பு.


காலையில், ``அம்மா! போயிட்டு வர்றேன்!'' என்பதோடு சரி. இரவு திரும்ப வெகுநேரமாகிவிடும். அம்மாவுக்கு வாயிற்கதவு திறக்கப்படும் சத்தம்; கார் கதவு சாத்தப்படும் சத்தம் இந்த இரண்டையும் வைத்து மகன் எப்போது வந்தான் என்று அந்த இருட்டிலும் டார்ச்லைட் அடித்து கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வார்.


இந்தத் தொழிலதிபரின் மகன் மற்றும் மகளின் நிலை இன்னும் சுமார். ``ராத்திரிக்கு ராத்திரி ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்து தூங்கிட்டுப் போறாரே, அவரு யாரும்மா?'' என்கிற பிரபல நகைச்சுவைக்கு அடுத்தபடியான நிலை.


இவரை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஊர் வியக்கலாம். ஆனால் ஒரு வெற்றிகரமான மனிதராக எண்ணி வியக்க முடியவில்லை.


குடும்பம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடித்தளம். இது சரியாக அமையாவிட்டால், ஆகாயக்கோட்டைகளைக் கட்டி என்ன பயன்?


நடுத்தரக் குடும்பங்களில்கூட என்ன வாழ்கிறதாம்? உலக அளவிலான கிளைகள் கொண்ட வங்கி ஒன்று நம் நாட்டு வங்கி ஒன்றை சுவீகரித்துக் கொண்டது. இதில் பணிபுரியும் நம்மவர் ஒருவர், காலையில் ஏழரைக்குப் புறப்பட்டுப் போனால் இரவு பத்தரைக்கு வந்து உயிரற்ற உடலாய்ப் பொத்தென்று, பாண்ட்டைக் கூடக் கழற்றாமல் படுக்கையில் விழுவார். பசியைவிட அசதி அதிகம். பொண்டாட்டி பிள்ளைகளைக் கவனிக்க ஏது நேரம்?


இத்தகையவர்களுக்கு ஒரு யோசனை. இவர்களுக்கு நாம் Quantity time (அதிக நேரம்) ஒதுக்கமுடியாது. ஆனால் (தரமான நேரம்) Quality time கொடுக்கமுடியும்.


நேரமற்ற அந்தத் தொழிலதிபர்கூட ஒரு நிமிடமேனும் ஒதுக்கி, ``என்னம்மா! சாப்பிட்டியா? உடம்புக்கு என்ன பண்ணுது? மருமகள் நல்லா கவனிச்சிக்கிட்டாளா? உனக்கு வேறு என்ன தேவை?'' என்று வாஞ்சையான மொழிகளில் அன்பான தொனியில் நான்கு கேள்விகளை மாற்றிப் போட்டும் புரட்டிப்போட்டும் தினமும் கேட்டால் போதும். அம்மாவுக்குக் கொள்ளாது.


``நேரமே இல்லாத புள்ளை. ஆனாலும் பாசத்துக்குக் குறைவில்லை'' என்று, வருகிற போகிறவர்களிடமெல்லாம் மகன் புராணம் பாடுவார்.


``எவ்வளவு வேலையிருந்தாலும் என்கிட்ட நின்னு நாலு வார்த்தை பேசாமப் போகமாட்டான்'' என்றும் சேர்த்துக் கொள்ளத் தவறமாட்டார்.


மலேசியத் தமிழர்கள் பலரிடம் ஒரு நல்ல பழக்கம். பிள்ளைகள் காலையில் பள்ளி, கல்லூரிக்குக் கிளம்புவதற்கு எனச் சாப்பிட அமர்வார்கள் அல்லவா? அப்போது அப்பாவும் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவார். அதெப்படி இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவது என்று கேள்வி கேட்கமாட்டார். பிள்ளைகளிடம் பேசக் கிடைக்கிற நேரம், பிள்ளைகளுடன் செலவழிக்கிற நேரம் இதுமட்டும்தான்.


அம்மா என்றால் காலைத்தொட்டு ஆசீர்வாதம். பிள்ளை என்றால் நெற்றியின் உச்சியில் ஒரு முத்தம். இதற்கு ஆகும் ஒரு நிமிடத்தில் டன் டன்னாய் அன்பை வெளிப்படுத்திவிட முடியுமே!


ஒரு டை கட்டுகிற நேரம்; அதை அவிழ்க்கிற நேரம்; சாக்ஸ், ஷூ மாட்டும்; கழற்றும் நேரம் இருக்கிறதே, இதற்கு ஆகும் ஒரு நிமிடத்தில்கூட குடும்ப உறுப்பினர்களிடம் நம் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்த முடியும்!


இதற்குக்கூட நேரமில்லை என்பவர்களை எப்படி வெற்றிகரமான மனிதர்களாக ஏற்கமுடியும்?.


நன்றி, குமுதம்.

19 May 2008

திருமணத்திற்கு முன்பு...

|1 comments
ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது.

ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது பாரம்பரியமும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். எனவே அவற்றை காதலர்கள் நன்கு சிந்தித்து திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலிக்கும்போது காதலரிடம் இருக்கும் நல்ல குணங்கள் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அவரது கோபம், ஆளுமைத் தன்மையைக் கூட நாம் அப்போது ரசித்திருப்போம். ஆனால், திருமணத்திற்குப் பின்னர் தீய குணங்களை மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தான் பல காதல் திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகிறது. காதலர்கள் நன்கு பக்குவப்பட்டு, தங்களது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் பல சமயங்களில் திருமணம் முடிந்ததும் மனம் மாறி தங்களது பிள்ளைகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதுவரை இல்லாத பிரச்சினைகள் அப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாதல்லவா. ஆம், தங்களது திருமணத்தை ஏற்றுக் கொண்ட பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மகனோ, மகளோ தள்ளப்படுகிறார்கள். அதனால் தம்பதிகளுக்குள்ளேக் கூட பல மனக்கசப்புகள் உருவாகின்றன.

எனவே எந்த நேரத்திலும் தான் கைப்பிடித்தவரை எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத மனவலிமையை காதலர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

அப்படியே தம்பதிகளுக்குள் எந்த பிரச்சினை எழுந்தாலும் அவர்கள் அதை தனது பெற்றோர்களிடம் சொல்லிக்கூட குறைபட்டுக் கொள்ள இயலாது. ஏனெனில் 'நீ தானேத் தேடிக் கொண்டதுதானே' என்று அவர்கள் நம்மைத்தான் கைகாட்டுவர்.

காதலிக்கும்போதே அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காதலித்துவிட்டோம், கண்டிப்பாக அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் காதலர்களாகவே பிரிந்து விடுவதும் நல்ல முடிவுதான், ஏனெனில் திருமணத்திற்குப் பின் மன வருத்தம் வந்து நீதிமன்றத்தின் வாயிலில் கணவன் - மனைவியாக பிரியும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியதில்லை.

அதனால் காதலிக்கும்போது நல்ல காதலர்களாக இருப்பவர்கள் ஊரே மெச்சும் தம்பதிகளாகவும் இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசி, சிந்தித்து முடிவெடுங்கள். இல்லையேல் பாழாவது வேறு எதுவுமல்ல... உங்கள் வாழ்க்கை.
இதுபற்றி ஒரு நகைச்சுவையும் உண்டு,

அதாவது, திருமணத்திற்குப் பின் காதலன் மாறி விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தாள் காதலி.

இப்போது போல் எப்போதும் தனது காதலி இருப்பாள் என்று நம்பினான் காதலன்.

இது இரண்டுமே நடக்கவில்லை என்பதுதான் உ‌ண்மை.