2 June 2008

மதுரைக்காரங்க எல்லாரும் மறக்காம படிங்க...

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகரமான மதுரை ஒரு மெட்ரோ நகரமாக மாறும் என்பதற்கு சில நம்பத்தகுந்த காரணங்கள்...


1.ரூபாய் 100 கோடி முதலீட்டில் மல்டிபிலேக்ஸ், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் ஆர்கேடுகள் ETL கான்வெண்ஸன் சென்டர் மற்றும் ஷாப்பிங்மால் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..


2. சுமார் 2500 ஏக்கர் நிலம் மதுரைக்கு அடுத்துள்ள இளியார்பதி கிராமத்தில் சிப்காட் கையகப்படுதியுள்ளது.


3. மதுரைக்கு தெற்குபகுதியில் உள்ள சோலங்குரினி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் நிலம் ஆர்.ஆர் இண்டஸ்டிரீஸ் மற்றும் ஐடி டவுன்ஷிப்ற்காக கையகப்படுதப்பட்டுள்ளது. முதல் கட்ட வேலைக்கா வரைபடம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வேலை தொடங்ப்பட உள்ளது. அதில் 18000 குடியிருப்புகள் கொண்ட அப்பார்மென்ட், ஒரு மருத்துவமனை, இரண்டு மல்டிபிலேக்ஸ் மற்றும் இரண்டு மிகப்பெறிய ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளன. மேலும் 8மாடிகள் கொண்ட ஐடி பார்க் ஒண்றும் கட்டப்பட உள்ளன. மொத்த மதிப்பீடு ரூபாய்.4500 கோடி.

4. ELCOT நிறுவனம் 2000-10000 ஏக்கரில் மதுரையில் இண்டஸ்டிரியல் சிட்டி தொடங்கப்பட உள்ளது.

5. ரேஸ் கோட் சாலையில் சுமார் 1,60,000 ச.அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமான G+3 ஷாப்பிங் மால் சுமார் 500அடி முன்பக்க காலி இடத்துடன் கட்டப்பட உள்ளது.


6. சுமார் 100ஏக்கரில் டெக்ஸ்டைல் பூங்கா மதுரையில் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூபாய்.35 கோடி.


7. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் Fortune ITC Welcome குரூப்ஸ் உடைய ரிசாட்ஸ் தொடங்கப்பட உள்ளது.


8. மதுரைக்கு வெளியே சினிமாக்ஸ் மற்றும் அட்லாப்ஸ் மல்டிபிளக்ஸ் அரங்குகள்.


9. பாரமெளன்ட் பைளட் பயிற்சிப்பள்ளி மதுரையில் தொடங்கப்பட உள்ளது.


10. புது நத்தம் சாலையில் பென்டாஸாப்ட்டுடைய விளையாட்டு தீம் பார்க் மற்றும் மாயாஜால் தீம் பார்க் மல்டிபிளக்ஸ் உடன் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.200 கோடி.


11.மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சிறுவர்களுக்கான அறிவியல் கோளரங்கம் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.25லட்சம்.


12. ஹேலிகாப்டர் போக்குவரத்து ராமேஸ்வரத்திலிருந்து கொடைக்கானலிற்க்கு முதல் கட்டமாக தொடங்கப்பட உள்ளது. பின்பு பழனி, கன்னியாகுமாரி, கோவை போன்ற இடங்களுக்கு தொடங்கப்பட உள்ளது.


13. மதுரைலிருந்த்து 20கி.மீ தொலைவில் வடமலையான் மருத்துவமனை டிரஸ்ட் மற்றும் கமூதி நாடார் சங்கம் இனைந்து காமராஜ் நினைவு மருத்துவ கல்லூரி சுமார் 150 ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது. 300 படுக்கை வசதியுடன் முதல் தர மருத்துவமனை மற்றும் 150 M.B.B.S. இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு வருடத்தில் அனைத்து வேலைகளும் முடிவடையும். 2009ல் அட்மிஷன் தொடங்கப்பட உள்ளது.


14.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கம் பழைய அன்னா பேருந்துந்துநிலையத்தில் தொடங்கப்பட உள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட G+6 கட்டிடம். ரூ.35கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


15. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு எதிற்புறம் சுமார் 260 ஏக்கரில் ஐடி தொழில்நுட்ப பூங்கா அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது.


16. அவனியாபுரம் ரிங் ரோடு அருகில் சுமார் 125 ஏக்கரில் 15000 குடியிருப்புகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட் 9மாடிகளுடன் மிகப் பிரமாண்டமான கட்டிடத்துடன் ஷஹாரா சிட்டி ஹோம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளது.


17. அரிஹாந்த் பவுன்டேஷன் மதுரையில் குடியிருப்பு டவுன்ஷப்பிக்கா 21ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளது.


18. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்திய ஆஸ்திரேலியா சூரிய ஆற்றல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


19.ரிலயன்ஸ் பிரஷ் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 11பழைய திரையரங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவை அனைதும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட காய்கரி மற்றும் இரைச்சி மார்கட் ஆக தொடங்கப்பட உள்ளது.


20. COGNIZANT, IBM, DLF , INFOSYS ஐடி பார்க் தொடங்கப்பட உள்ளது. மேலும் இவை தமிழ் நாட்டில் தென்பகுதியில் உள்ள கல்லூரிகளுடன் டைஅப் வைத்து கொள்வதற்க்காக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.


21. மாட்டுதாவனி அருகே சுமார் 1,00,000 ச.அடியில் ஐடி பார்க் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.


22. அரவிந்த் கண் மருத்துவமனை கண் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் (Ophthalmic university) தொடங்கப்பட உள்ளது.


23. கூடல் நகர் அருகில் மிகப்பிரமாண்டமான வெர்ஹவுசிங் காம்பிளக்ஸ் 5ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது.


24. இரண்டு தனியார் நிறுவனங்கள் மதுரையில் இடங்களை வாங்கி குவித்துள்ளனர். 1. சென்னையை சேர்ந்த CEEDEEYES நிறுவனம். 2. துபாய்யை சேர்ந்த ETA ஸ்டார் நிறுவனம்.


25. நவ2007 முதல் பாஸ்போர்ட் அலுவலகம் மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது.


26. ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் திரையரங்கம் GV நிறுவனம் வாங்கி மிக விரைவில் GV ஸ்டுடியோ சிட்டி தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், இரண்டு 3 நட்ஷத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், சென்னயை சில்க் மற்றும் ஹோட்டல் சரவணா பவன் தொடங்கப்பட்டு உள்ளது.


27. ரூ.3கோடி மதிப்பீட்டில் YMCA இன்டர்னேஷனல் சென்டர் தொடங்கப்பட்டு உள்ளது.


28. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் 80 அறைகளுடன் AITKER SPENCE ஹோட்டல் தொடங்கப்பட்டு உள்ளது.


29. சுமார் 30ஏக்கர் நிலம் கோச்சடையில் டைடல் பார்க்கிற்ககா ஒதுக்கப்படுள்ளது.


30. மாடகுலத்தில் சிறுநீரக டையாலசிஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்பட்டு உள்ளது.


31. அப்போலோ மருத்துவமனை, மதுரை மற்றும் BASKERSFIELD , கலிபோர்னியா இணைந்து சகல வசதிகளுடன் கூடிய இரத்தம் மற்றும் புற்றுநோய் மையம் தொடங்கப்பட உள்ளது.


32. உலக தரத்துடன் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் கேர் சென்டர் தொடங்கப்பட உள்ளது.


33. சுமார் 10கோடி செலவில் வண்டியூரில் உள் சறுக்கு விளையாட்டரங்கம் மற்றும் பார்க் தொடங்கப்பட உள்ளது.


33. மதுரையில் பூக்கள் ஏற்றுமதிக்காக அக்ரி ஏற்றுமதி ஜோன் தொடங்கப்பட உள்ளது.


34. ஹ்ச் சி எல் நிறுவனம் டிஜிட்டல் லைப் ஸ்டைல் வளாகத்தை தொடங்க உள்ளது.


35. சுமார் 120கோடி மதிப்பீட்டில் தோப்பூரில் AIIMS மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.


36. மதுரை மாநகராட்சியால் விலங்கியல் பூங்கா அழகர்கோவில் அருகில் தொடங்கப்பட உள்ளது.


37. இந்தியாவில் உள்ள அனைத்து முன்னனி நகை கடைகளும் மதுரையில் தன் கிளைகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது.


மேலும் இதில் சொல்லப்படாத சில விரிவாக்கங்களும் சில தொழில் நுட்ப பூங்காக்களும் சில மருத்துவமனைகளும் அமைக்கப்படலாம்.


இதை போல் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...

10 comments:

  • Rajeswari says:
    25 March 2009 at 5:22 pm

    சந்தோசமான விசயம்....தகவல்களுக்கு நன்றி

  • Anonymous says:
    25 March 2009 at 6:44 pm

    இதெல்லாம் வந்தால் மதுரை மாநகரின் பழைய டாம்பீகம் போய்விடுமே சார்...
    சென்னையைப் போலவே நில விலையுயர்வு மற்றும் இன்ன பிற சங்கதிகளோடு மதுரையை நினைத்து பார்க்க சற்று வருத்தமாக இருக்கிறது...

  • Suresh says:
    25 March 2009 at 8:14 pm

    Valthukkal

    vithiyasamana pathivu thalaiva

    Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha vote panunga :-)

    Kandipa ungaluku pidikum endru nambugiran.
    http://sureshstories.blogspot.com

  • venkatesh says:
    25 March 2009 at 9:57 pm

    sir, idellam varanum nu daaan romba naala kaathutu irukkom...

  • KRICONS says:
    25 March 2009 at 10:49 pm

    நன்றி ராஜேஷ்வரி...

  • This comment has been removed by the author.
    KRICONS says:
    25 March 2009 at 10:51 pm

    This comment has been removed by the author.

  • KRICONS says:
    25 March 2009 at 10:51 pm

    என்ன பண்றது ஸ்ரீராம் சார்... ஒண்றை இழந்து தான் மற்றொண்றை பெற முடியும்.

  • KRICONS says:
    25 March 2009 at 10:57 pm

    நன்றி தலைவா சுரேஷ்...

    அது எப்படி எங்களின் ஆசிர்வாதத்தில் உங்கள் பதிவா???

    பொதுவாக நான் இனிப்பு அதிகம் சாப்பிடுவேன். இனி உங்களின் வலைபதிவை அதிகம் பார்ப்பேன் என் நினைகிறேன்...

    கலக்குரேயே தலைவா...

  • KRICONS says:
    25 March 2009 at 11:01 pm

    வெங்கடேஷ் காத்திருந்து கிடைப்பதில் தான் சுவை அதிகம்..

  • வடுவூர் குமார் says:
    9 May 2009 at 7:29 pm

    ஆமாம்,இவர்களுக்கு கொடுக்க தண்ணீர் வைகையில் இருக்கா? இல்லை வேறெங்காவது கை வைக்கனுமா?