15 June 2008

மதுரை மிக விரைவில்...

எனது மதுரை மிக விரைவில் மெட்ரோ நகரம் ஆகும் என்ற பதிவையும் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-1 பதிவையும் படித்திருப்பீர்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-2வை வெளியிடும் முன்னால் அந்த இரண்டு பதிவில் உள்ள படி மதுரை மெட்ரே நகரமாக மாறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது!

கடந்த 10வருடங்களாக மதுரை தத்தனேரி பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பாலம் கட்டி முடிக்க இரண்டு மூன்று வருடம் கூட ஆகலாம்.

கடந்த 5வருடங்களாக மதுரை பெரியார்நிலையத்திலிருந்து எல்லீஸ்நகர் செல்லும் பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் தான் ஒரு வழியாக ஒரு வழி மட்டும் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. மற்றொரு வழி கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மதுரை பெரியார்நிலையத்தில் அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலம் கடந்த 10வருடங்களாக பூட்டப்படுள்ளது.

மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதை கீழ்பாலம்(Subway) கடந்த 6வருடங்களாக பூட்டப்படுள்ளது.

மதுரையில் காளவாசல் மற்றும் கோரிப்பளையம் சந்திப்பில் உள்ள Signalகளை தவிர வெறு எந்த சந்திப்பிலும் போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை, விதி முறைகளை மீறுபவர்கள் (Signal Jumping) மீது அங்குள்ள காவல் துறையினர் கன்டிப்பதில்லை.

மதுரையில் வாகனங்களை நிறுத்தும் (Parking) வசதி சரியாக கடைப்பிடிக்கபடுவதில்லை.
இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடங்களில் நாண்கு மற்றும் மூண்று சக்கர வாகனங்கள் நிறுத்துவது.

மதுரை கீழ வாசல் பகுதியில் உள்ள சில கடைகள் காமராஜர் சாலையின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரத்மித்துள்ளனர். இது வரை அதை யாரும் கண்டுகொள்ளாவில்லை.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள தெருக்களை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

அரசியல் தலைவருக்கு பிறந்த நாள் என்றால் அவ்வளவுதான் மதுரை முழுவதும் கட் அவுட் வைத்து போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சல் தான். அரசியல் தலைவருக்கு மற்றும் இல்லாமல் தங்கள் வீட்டு விசேஷத்திற்கும் சில பணம் படைத்தவர்கள் சில முக்கிய சந்த்திப்புகளில் முழுவதும் கட் அவுட் வைத்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்கின்றனர். இதை தடுக்க யாரும் முன் வரவில்லை.

மேற்கூறிய அனைத்து பாலம் வேலைகளையும் துறிதப்படுத்தி சம்மந்த்ப்பட்டவர்களை முடுக்கி விட்டு நடவெடிக்கை எடுக்கலாம்.

பெரியார்நிலையத்தில் அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதையை உபயேகிக்க இப்போழுது சாலையை கடக்க பயன் படுத்தும் வழியை அடைத்து (சாலையை கடக்க அங்கு ஒரு காவல் துறையை வேறு நியமிக்கப்பட்டுள்ளார்) நடைபாதை மேம்பாலத்தை திறக்கலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கடுமையான (லஞ்சம் வாங்கமல்) தண்டனைகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

சாலை ஆக்கிரமிப்பை தடுக்க கோவையில் உள்ளது போல் வாகன நிறுத்ததை ஒவ்வொரு மாதமும் மாறி மாறி அமைக்கலாம்.

மேலும் இது போல் பல வித நடவெடிக்கைகள் மூலம் மதுரையை மெட்ரோ நகரமாக்க முதல் அடித்தளத்தளதை அமைக்கலாம் அப்போது தான் நம் மதுரை மெட்ரோ நகரமாக விரைவில் எதிர்பார்க்கலாம்.

2 comments:

  • Anonymous says:
    17 June 2008 at 10:45 pm

    The good analysis. Madurai people should change their mentality otherwise madurai will not chagne.
    You can see more selfish people in madurai, compare with other metro. You missed one major worst thing, that is drunk and drive. Wine shop Near Laksmi sundaram hall and near Athikulam checkpost has more custormers and all come by two wheelers. After taking liquor they will fly. Rajaji hospitals ortho block is filled with male patients, all by this type of accidents. Most of the autorikshaw drivers use liquor and ganja during driving. simply I feel madurai is the city of fools and frauds.


    senthil kumar.M

  • KRICONS says:
    17 June 2008 at 11:02 pm

    செந்தில் ஏன் ஏன் இந்த அளவுக்கு கோபம் மதுரை மக்கள் மீது... நீங்கள் சொல்வதும் உண்மை தான். இருந்தாலும் "city of fools and frauds" இது கொஞ்சம் அதிகம் தான்.