Showing posts with label ஆலோசனை. Show all posts
Showing posts with label ஆலோசனை. Show all posts

19 October 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

|4 comments

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.


இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்
று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.


தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.


இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.


2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.


சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.


இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.


ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.


நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.


ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.


ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.


கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.


இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.


எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.


கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். “மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.


மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.


2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.


அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.


அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.


பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:


• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.


சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.


இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.


தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.


அன்புடன்

கோவை. சா.காந்தி,

9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111

13 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4

|11 comments
பகுதி-1 பகுதி-2 பகுதி-3
பொதுவானவை
நீங்கள் உங்கள் Profile பகுதியில் கண்டிப்பாக உங்கள் புகைபடத்தையோ அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த படத்தையோ வைக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒரு பிளாக்கை Followசெய்யும் போது முன்னால் தெரிவீர்கள். அதாவது எனது பிளாக்கில் தற்போது 59பேர் Follow செய்கிறார்கள். நீங்கள் 60 நபராக Follow செய்ய நினைத்தால் புகைபடம் இருந்தால் மட்டுமே முன் பக்கத்தில் காண்பிக்கும். புகைபடம் இல்லாமல் இருந்தால் கடைசியாகதான் காண்பிக்கும். அதனால் உடனே புகைபடத்தை உங்கள் Profileல் நிறுவுங்கள்.

3. Go to TOP Arrow

இப்போதெல்லாம் சில பிளக்களில் வலது பக்கமாக கீழே நீங்கள் படத்தில் உள்ளது போல ஒரு Arrowவை பார்க்கலாம். எனது பிளாக்கிலும் உள்ளது. இதற்கு Go to TOP Arrow என்று சொல்வார்கள். உங்கள் பிளாக்கில் Go to TOP என்ற ஒரு பட்டனை நிறுவவதால் உங்கள் பிளாக்கின் கீழ்பகுதி வரை சென்று படிக்கும் வாசகன் (???!!!) எளிதாக மேல் பகுதிக்குசெல்ல உதவும். அதற்கு நீங்கள் கீழே உள்ள Codeயை Layoutல் Page elementல் Add Gadgetல் Html or JavaScriptல் போட்டுக்கொள்ளவும்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" target="_self" title="Back to Top"> <img src="http://www.ranegrouppune.com/images/top-arrow.jpg"/> </a>


4.Favorite Icon

Favorite Icon என்பது உங்கள் Browserல் Address barல் உங்கள் பிளாக்கின் முகவரியை அடையாளமாக காட்டும் ஒரு சிறிய படம். இது பொதுவாக blogspot.comக்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் உங்கள் விருப்பம் போல இதை மாற்ற கீழே உள்ள Codeஐ படத்தில் உள்ளது போல Layoutல் Edit HTMLல் ]]></b:skin> மற்றும் </head>ற்கு இடயில் ஒட்டவும். இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி என்ற இடத்தில் எந்த படம் உங்கள் FavIcon ஆக வர வேண்டும் என்று நினைக்கிறேர்களே அந்த படத்தின் முகவரி. நம்ம தமிழ்நெஞ்சம் அவரோட படத்தியே வைத்திருப்பார். நீங்கள் கொடுக்கும் படம் அனிமேசனாக இருந்தால் உங்கள் FavIcon அனிமேசனாக காட்சிதரும். 18000மேற்பட்ட அனிமேசன் FavIconகளை பெற நீங்கள் இந்த தளத்திற்கு செல்லலாம்

<link href="'<span" style="color: rgb(255, 102, 0);">இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி</span>' rel='shortcut icon' type='image/x-icon'/><br><link href="'<span" style="color: rgb(255, 102, 0);">இங்கு-உங்கள்-படத்தின்-முகவரி</span>' rel='icon' type='image/gif'/>


இந்த தொடர் கண்டிப்பாக உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் கொடுத்தவை எல்லாம் ஏதோ கல்லூரிக்கு சென்றது கற்றது இல்லை. எல்லாம் நம்ம அண்ணாச்சி கொடுத்தது தான். யாரு அந்த அண்ணாச்சி என்று கேட்கிறேர்களா அதாங்க நம்ம Google அண்ணாச்சி. என்ன கேட்டாலும் கொடுக்கிறவர்.

12 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3

|19 comments
பகுதி-1 பகுதி-2

ஏற்கனவே பிளாக்கில் சிலர் செய்யும் பொதுவான சில தவறுகளை அல்லது எனக்கு தவறு என்று தோன்றியதையும் பார்த்துவிட்டோம். இனிமேல் உங்கள் பிளாக்கை சின்ன சின்ன HTML மற்றும் சில Codeகளை கொண்டு எப்படி மெருகூட்டலாம் என்று பார்போம். முதலில் உங்கள் பிளாகினுள் நுழைந்தவர் வெளியே போகாதவாறு செய்யவேண்டும். அதற்கான சில Codeகளை பற்றி பார்போம்.

1. படங்கள்
நீங்கள் பதிவில் படங்களை வைத்திருப்பீர்கள் அதை கிளிக்கி பெரிதாகிபார்க்க உங்கள் வாசகன் ஆசைபடுவான். அதை கிளிக்கினால் உங்கள் பிளாக் முகவரியில் இருந்து வெளியேறி படத்தின் முகவரிக்கு சென்று படத்தை காட்டும். இதனால் மீண்டும் உங்கள் பதிவிற்கு வாசகன் வருவது சந்தேகமே. அதனால் அந்த படங்களை வேறு முகவரிக்கு செல்லாமல் பார்க்க உதவுவதுதான் நண்பன் TVS50 கொடுத்த Code.

<script src='http://tvs50.110mb.com/imgbox/imgload.js' type='text/javascript'/>

இந்த Codeயை Layoutல் உள்ள Edit HTML பகுதியில் உள்ள <head> ற்க்கு கீழே ஒட்டவும்(Paste செய்யவும்). இதனால் உங்கள் வாசகன் உங்கள் முகவரியை விட்டு வெளியேறாமலயே அந்த படத்தை ரசிக்கலாம்.

2.Linkகள்
அடுத்ததாக உங்கள் பிளாக்கில் உள்ள லின்க்களை கிளிக்குவதால் உங்கள் வாசகன் உங்கள் முகவரியை விட்டு வெளியே செல்ல வாய்பை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம். அனால் அந்த ஒவ்வொரு லின்க்கை கிளிக்கும்போதும் தனித்தனியாக வேறு Windowவிலோ அல்லது Tabயிலோ திறக்கும்படி செய்தால் உங்கள் முகவரியை விட்டு வெளியேராமல் உங்கள் வாசகன் இருப்பான். அதற்கு <base target='main'/> இந்த Codeயை Layoutல் Edit Justify FullHTML பகுதியில் சென்று <head>கீழே ஒட்டவும். அவ்வளவுதான் இனி உங்கள் பதிவில் உள்ள ஒவ்வொரு லின்கும் இனிமேல் தனி Windowவில் தான் திறக்கும்.

ஆனால் இப்படி எல்லா லின்க்கையும் நீங்கள் தனி Windowவில் திறப்பதால் சில சமயம் வாசகன் எரிச்சல் ஆகவும் வாய்பிருக்கிறது. அதானால் சில குறிப்பிட்ட லின்க்களை அதே Windowவில் திறக்க நீங்கள் விரும்பினால் அந்த Linkன் முடிவில் target="_self சேர்த்துகொள்ளவும். உதாரணமாக <ahref="http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=kricons">Surveyமூலம் சம்பாதிக்க/a> இந்த Link அதே Windowவில் Open செய்ய <ahref="http://www.AWSurveys.com/HomeMain.cfm?RefID=kricons"target="_self>Surveyமூலம் சம்பாதிக்க/a>. இவ்வாறு மாற்ற வேண்டும்.

இன்னமும் வரும்.

11 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2

|11 comments
என்னுடைய உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1 படித்து உங்கள் பிளாகில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்து கொஞ்சம் மெருகூட்டியதுபோல் தெரிகிறது. அதில் சில பொதுவான கருத்தகள் விடுபட்டுள்ளன அவற்றை முதலில் பார்த்துவிட்டு பின்பு HTML மாயாஜலத்திற்கு செல்வோம்.



சில பொதுவானவை

1-5 இங்கு சென்று படிக்கவும்

6. எப்போதுமே உங்கள் Profileயை மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி வைக்கவேண்டாம். இதனால் நீங்கள் பின்னூட்டம் இடும்போது உங்களின் பிளாக்கை மற்றவர் பார்த்து படிப்பதை நீங்களே தடுப்பதுபோல ஆகிவிடும்.

7. உங்கள் பிளாக்கினுள் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த பாட்டையோ அல்லது வேறு எந்தவிதமான ஒலியோ தானாக வரும் படி செய்யாதிர்கள். இதனால் அமைதியான சூழ்நிலையில் உங்கள் பிளாக்கினுள் நுழைந்தால் படிப்பவர் அல்லோல பட்டுவிடுவார்.(எனக்கு பல முறை அனுபவம்)

8. உங்கள் பிளாக்கின் Templateயை பின்பகுதி (Back Ground) கண்டிப்பாக வெள்ளை நிறத்திலேயும் எழுத்துகள் கறுப்பு நிறத்திலேயும் இருப்பது நலம். இதனால் எழுத்துகள் உடனடியாக பார்வைக்கு தெரியும்.

9. நீங்கள் இப்போது தான் பிளாக் எழுத ஆரம்பித்துள்ளிர்கள் என்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டாம். சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமாக சொலிவிடவும். இதனால் உங்கள் வாசகர்கள் உங்கள் எழுத்தை பார்த்து மலைப்படியாமல் படித்துவிட்டு செல்வார்கள்.

10. உங்கள் பிளாகின் முகவரி அனைவரும் நினைவில் வைத்து கொள்ளும் மாறு இருக்கவேண்டும். குறிப்பாக பிளாகின் பெயரில் - _ போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அதாவது kricons-technology அல்லது kricons_technology போன்று இருக்ககூடாது

11.எழுத்து பிழை உங்கள் பிளாக்கின் மெருகை குறைப்பதாக நினக்கவேண்டாம். இங்கு உங்கள் பிளாக்-ஐ படிப்பவர் அனைவரும் தமிழரே. அவர்கள் புரியும் நீங்கள் சொல்லவந்ததை.

இப்போதைக்கு (உங்க போதைக்கு நாங்க தான் கிடைச்சோமா?) இதை கடைபிடித்தாலே உங்கள் பிளாக்-ஐ மெருகூட்டலாம். இங்கு நான் எழுதியது எல்லாமே ஏதோ நானே யோசிச்சு எல்லாம் எழுதவில்லை. எல்லாம் சில தமிழ் பிளாக்கில் எனக்கு தவறு என்று தோன்றியதைதான் இங்கு சுட்டிகாட்டியுள்ளேன். இந்த தவறு உங்கள் பிளாக்கிலும் இருக்கலாம். அதை நீக்கி மெருகூட்டுங்கள்.

சரி தவறை பார்த்தாச்சு இனி சரியை பற்றி அதாவது HTML மாயாஜாலங்களை சேர்ப்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

9 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1

|15 comments
இந்த பரந்து விரிந்த வலையுலகில் பெரும்பாலான பிளாக்கர்கள் மென்பொருள் வல்லுனர்களே. ஒரு சிலரே என்னை போல வேறுதுரை வல்லுனர்கள்(வல்லுனரா நீயா???). எப்படி இருந்தாலும் வலையுலகிற்கு வந்து விட்டால் எழுத்துக்கள் தான் பேசும். உங்கள் பதவியோ வேலையோ இங்கு ஒண்றும் செல்லாது.

சில மென்பொருள் வல்லுனர்கள் தங்கள் பிளாக்கில் பல விதமான கோடிங்களை கொண்டு தங்கள் பிளாக்கை மெருகூட்டியிருப்பார்கள். நானும் ஒண்றும் உங்களுக்கு சளைத்தவன் இல்லை என்னும் அளவுக்கு வேறு துரை சார்ந்தவர்கள் தங்களின் பிளாக-ஐ வடிவமைத்திருப்பார்கள். இன்னும் சில மென்பொருள் வல்லுனர்களே தங்கள் பிளாக்-ஐ எப்படி மெருகூட்டுவது என்று தெரியாமல் இருப்பார்கள். எதோ எனக்கு தெரிந்த சில சின்ன சின்ன விஷயக்களை இதில் தந்துள்ளேன்.


உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட

முதலில் பொதுவான விஷயங்களை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்
1. பின்னூட்டத்தில் இருக்கும் Word வெரிபிகேசனை எடுத்து விடவும். இதனால் உங்களுக்கு பின்னூட்டம் இடுபவர் சலிப்படையாமல் பின்னூட்டம் எழுதுவார்.

2. நீங்கள் டைப் செய்யும் போது அடுத்த வரிக்கு செல்லா Enter தட்ட வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த Paragarph செல்ல மட்டுமே enter தட்டினால் போதுமானது. இதனால் உங்கள் வரிகள் அழகாக தெரியும்.

3. கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு ஒரு முறை இடைவெளி விட வேண்டும். இது படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும் பார்க்கவும் அழகாகவும் இருக்கும்.

4. நீங்கள் புது Template மாற்றும் போது எல்லா Linkகளும் சரியாக வேலை செய்கிறதா என்று பல முறை சரிபார்த்த பின்பே மாற்றவும். ஒரு பதிவாளரின் பிளாக்கில் Comment இடும் வசதியே இல்லை. அந்த அளவிற்கு அந்த Template உள்ளது.

5.குறிப்பாகா நீங்கள் கவனிக்க வேண்டியது RSS Link, தேதி காண்பிக்கும் பகுதி. ஒரு பதிவரின் வலையில் தேதி தெரியும் பகுதியில் இன்னமும் undefined என்றே தெரிகிறது. அதை நீங்கள் Settings சென்று Formatting பகுதியில் மாற்றலாம்.

இதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்பவர்கள் தெரியாத உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அவரின் பிளாக்கை மெருகூட்ட கற்றுக்கொடுங்கள். இங்கு சொன்னவை எல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான். அடுத்த பகுதியில் பிளக்கர்களுக்கு பயன் படும் முக்கியமான் HTML Coding பற்றி பகுதி-2ல் பார்போம்.