Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

19 August 2009

மதுரைகார கல்லூரி பெண்களின் கலக்கல்...

|5 comments
இந்த வார அவள்விகடனில் வெளிவந்த எங்க ஊர் காலேஜ் பெண்களின் கலக்கல்களை இங்கு கிளிக்கி பாருங்க....

19 January 2009

மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில்

|4 comments
இதை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கைபேசியில் காதல் டிப்ஸ்களுக்கு LOVE என டைப் செய்து ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பசொல்லி SMS வரலாம் அதற்கு வெறும் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். இவை காதலுக்கு மட்டும் இல்லை இது போல தினசரி உங்களுக்கு SMS மூலம் உங்கள் கைபேசிக்கு வரும் தகவல்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு வகை செய்திக்கும் நீங்கள் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கைபேசி பில் ஏகிறிவிடும்.


இந்த அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக www.mytoday.com என்ற முகவரியில் உங்களுது கைபேசி எண்ணை பதிந்துவிட்டால் போதும். நீங்கள் விரும்பும் சேவையை இலவசமாக பெறலாம்.


என்னடா தலைப்பை பற்றி எழுதாமல் என்னமோ சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறான் என்று நினைக்கிறீர்களா??? இது ஒரு இலவச சேவை அதனால் இந்த தலைப்பில் இந்த செய்தி இலவசமாக.


மேலே சொன்ன அதே www.mytoday.com வலைத்தளம் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்களை உடனுக்குடன் உங்கள் கைபேசிக்கு SMS மூலம் தகவல் அனுப்புகிறது. இந்த சேவையை www.m3m.in வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது.


அப்பாடா இனிமேல் நீங்கள் எதிர்பார்க்கும் மின் அஞ்சல் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வந்துள்ளதா என்று இணைய வசதி இல்லாதோர் பிரௌசிங் சென்டர் தேடி உங்கள் பணத்தை செலவிட அவசியம் இல்லை.


இதற்கு www.m3m.in என்ற முகவரியில் உங்களை மின் அஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் பதிவு செய்யவும். உடனே உங்கள் கைப்பேசி எண்ணிற்கு கடவு சொல் அனுப்பிவைக்கப்படும். உடனடியாக உங்கள் கைப்பேசிற்கு ஒரு மின் அஞ்சல் முகவரி தரப்படும். அது உங்கள் கைப்பேசி எண்ணை ஒட்டியே இருக்கும். உதாரணமாக உங்கள் கைப்பேசி எண் 9842112345 என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் மின் அஞ்சல் முகவரி 919842112345@m3m.in என்று இருக்கும்.


இந்த மின் அஞ்சல் முகவரிக்கு(919842112345@m3m.in) உங்கள் மின் அஞ்சல்களின் பிரதிகளை (Copy) Forward செய்யுமாறு உங்கள் மின் அஞ்சலில்(name@gmail.com) செட் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கைப்பேசியில் உடனுக்குடன் வந்துவிடும்.


ஆனால் இந்த சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக. ஒரு வருடம் கழித்து வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். பிறகு பார்த்துக்கொல்லாம்.


மேலே உள்ள இரண்டு சேவைகளும் இந்தியாவில் உள்ள கைப்பேசி எண்ணிற்கு மட்டுமே. NRIகள் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்த நீங்கள் இந்தியா வரும் போது ஒரு Lifetime கார்டையும் ஒரு Second hand or குறைந்த விலை கைப்பேசியையும் வாங்கிகொண்டு சென்றால் உங்களுக்கு பயன் தரும். (ரோமிங்க்கில் இன்கம்மிங் SMS இலவசம்)

6 September 2008

சரியான தீனி

|3 comments
நண்பர் தமிழ் பையன் கடந்த பதிவில் பின்னூட்டத்தில் "உங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய Tamilish.com-ல் பகிரவும்" என்று கூறியிருந்தார். நல்ல விஷயங்கள் பலருக்கும் பயன்படட்டுமே என்ற கூறினார் போலும்.

உடனே அந்த முகவரிக்கு சென்று எனக்கான கணக்கை தொடங்கி எனது வலைப்பக்க முகவரியை அங்கு பகிர்ந்தேன். பகிர்ந்த மறு நொடி உங்கள் பதிவு மாற்றப்பட்டது என்ற தலைப்பில் ஒரு மின் அஞ்சல் வந்தது அதில்

"KRICONS அவர்களுக்கு, வணக்கம்! தங்களின் பதிவுகளை Tamilish-il பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. தாங்கள் Tamilish-க்கு புதியவர் என்பதால் சில தகவல்கள் தர விரும்புகிறேன். 1. தாங்கள் Submit செய்யும் போதும் தங்கள் தளத்தின் Home Page Url (http://www.kricons.co.cc/) submit செய்கிறீர்கள். அதற்கு மாறாக எந்த தலைப்பை submit செய்கிறிர்களோ அந்த URL கொடுக்கவும். உதாரணத்திற்கு \"Firefoxல் Mouseன் விளையாட்டுகள்\" இந்த பதிவு Sumbit செய்யும் போது, இந்த http://www.kricons.co.cc/ URL Submit செய்ய வேண்டாம். அந்த பதிவுக்குரிய பிரத்யேக URL http://kricons.blogspot.com/2008/08/firefox-mouse.html Submit செய்யவும்.அப்போதுதான் tamilish வாசகர்களுக்கு உங்கள் பக்கத்தை படித்து அதை பற்றி விமர்சிக்க வசதியாக இருக்கும். இந்த விளக்கம் தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். Submit சம்பந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு இந்த http://www.tamilish.com/about/en பக்கத்தில் பதில்கள் உள்ளன. அதை பார்க்கவும். மற்றும் Tamilish தளத்தில் அடுத்தவர் பதிவுகளை வாசித்து, வாக்களித்து, உங்கள் கருத்துக்களையும் தெரியபடுத்தவும். மேலும் சந்தேகங்கள் இருந்தால், இந்த mail-க்கு பதில் அனுப்பவும். அல்லது service@tamilish.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும். நன்றியுடன், அருண், Tamilish.com"

என்ன ஒரு அக்கறையுடன் இந்த பதில். ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே நான் கடைசியாக எழுதிய மூன்று பதிவுகளை மட்டும் அந்த வலைத்த்ளத்தில் பகிர்ந்தேன்.

என்ன ஒரு ஆச்சரியம் கடந்த இரு வாரங்களாக எந்த ஒரு புதிய பதிவையும் எழுத முடியவில்லை. அனாலும் எனது பக்கத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 200 பேர். முன்பெல்லாம் சராசரியாக 50 பேர் மட்டுமே. இது எனக்கு உற்ச்சாகமாக உள்ளது.

இதை பார்க்கும் போது நண்பர் பிகேபி ஒரு முறை " உங்கள் வலைப்பக்கத்தில் வருபவர்களுக்கு சரியான தீனி கிடைத்து விட்டால் நிச்சயம் மறுபடியும் வருவார்கள்" எவ்வளவு உன்மை உள்ளது இதில்.

நீங்கள் எதிர் பார்க்கும் தீனியை விட நிச்சயம் கொஞ்சம் அதிகமாகவும் அதே சமயம் ஜீரணிக்கும் படியும் தொடர்ந்து எழுதுவேன்

7 August 2008

ஒலிம்பிக் 2008 விளையாட்டுகளை நேரடியாக பார்க்கலாம்

|0 comments
நாளை ஒலிம்பிக் 2008 விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகப்போகிறது. அந்த நிகழ்ச்சி முழுவதையும் online video streaming technologies மூலம் நேரடியாக காணும் வசதியை சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளது. இப்போதைக்கு இந்த வசதி இந்தியாவில் இல்லை என நினைக்கிறேன். இருந்தாலும் சில முக்கிய நிகழ்வுகளை YOUTUBE வசதி மூலம் காண Google ஏற்பாடு செய்துள்ளது.

Opening ceremony முதல் Closing ceremony வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய உதவியுடன் US, UK, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா நாடுகளில் உள்ளவர்கள் நேரடியாக கண்டுகளிக்கலாம் மற்ற 77 நாடுகளில் உள்ளவர்கள் YOUTUBE வசதி மூலம் காண Google ஏற்பாடு செய்துள்ளது.

Live streaming websites of UK, US, Australia and Canada

இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நியூஜிலாந்த், நைஜீரியா ஆகிய நாடுகள் உட்பட 77 நாடுகளில் உள்ளவர்கள் சில முக்கிய நிகழ்வுகளை YouTube மூலம் Beijing Olympics 2008 தளத்தில் பார்க்கலாம்.

26 July 2008

பல வளைத்தளத்தில் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் செய்ய

|0 comments
நமக்கு பிடித்த மென்பொருள், MP3 பாடல்கள், வீடியோ கோப்புகள், கணினி விளையாட்டு மென்பொருட்கள் போன்றவற்றை உலகில் எந்த மூலையில் உள்ளவரும் பயன் படுத்திக்கொள்ள பயன்படுவதுதான் Rapidshare மற்றும் Megaupload போன்ற வளைத்தளங்கள்.


ஆனால் இதில் எந்த வளைத்தளதில் நீங்கள் பதிவேற்றம் செய்ய என்ற குழப்பமாக உள்ளதா??? அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா??? கவலையை விடுங்கள் இரண்டிலும் ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். என்ண ஆச்சரியமாக உள்ளதா??

ஆம் TinyLoad என்ற வளைத்தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் Rapidshare அல்லது/மற்றும் Megauploadல் உங்கள் கோப்புகளை ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். இதில் மிகப் பெரிய வசதி என்னவென்றால் இதில் பதிவு செய்ய அவசியமில்லை.

Go to TinyLoad

18 July 2008

கைப்பேசி மீது காதல் கொண்டவர்கள் பார்க்கக்கூடாதது

|0 comments
நீங்கள் உங்கள் கைப்பேசியை மீது அதிக அக்கறை வைத்துக்கொள்ள முடியவில்லையா??? இதோ உங்களுக்காகத்தான் இந்த நகர் படம்.


4 July 2008

வேகப் பிசாசு!

|0 comments
இந்தியாவில், சூப்பர் பைக்குகளின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. யமஹாவுக்கு அடுத்தபடியாக, இப்போது DUCATIம் சூப்பர் பைக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. DUCATI சூப்பர் பைக்குகளில் பெயர் பெற்றது, 1000 சிசி திறன்கொண்ட 'DUCATI 1098' பைக். இதுவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து இருக்கிறது.


DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,
உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது. 'இந்த பைக்குக்கு, இளம் பெண்களின் லிஃப்ட் தொந்தரவு நிச்சயம் இருக்கும்' என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.



ஸ்டார்ட் பட்டனைத் தட்டியவுடன், கொஞ்சம் தாமதித்துதான் ஸ்டார்ட் ஆகிறது. காரணம், பைக்கினுள் இருக்கும் சென்ஸார்கள், இன்ஜினில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்த பிறகுதான் ஸ்டார்ட்டர் மோட்டாரைச் சுழல அனுமதிக்கிறது. பைக் ஸ்டார்ட் ஆனவுடன் 'கீச்' சத்தம் காதைக் கிழிக்கிறது. சத்ததைக் கேட்டவுடன் தெருநாய்கள் தெறித்து ஓடிவிடும்.



முதல் கியரைத் தட்டியதும் தலையில் 'நங்'கென்று கொட்டியது போல வெறிகொண்டு பறக்கிறது. இந்த பைக்கை, பயபக்தியுடன் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. கிளட்ச்சைப் பிடித்து ஓட்ட உடம்பில் எக்ஸ்ட்ரா சக்தி வேண்டும். 160தீலீஜீ சக்திகொண்ட இந்த வேகப் பிசாசை ஓட்ட 'தில்' நிறைய வேண்டும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.



பிரேக்குகள் பிடித்த நொடியில் நிற்கின்றன. ஆனால், நீண்ட நேரம் ஓட்டினால், இன்ஜின் சூடு கால்களின் தொடை வரை ஏறுகிறது. 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை, வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பைக் ரசிகர்களின் தீராத ஆசை!


நன்றி, விகடன்.

30 June 2008

மன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை

|0 comments
இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்-லைன் மனோ சிகிச்சை அல்லது ஈ-தெரபி வழங்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிசைகளை விட சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வுகளில் கண்டுபிடித்த விவரங்களை ஜர்னல் ஆஃப் மெடிகல் இன்டர்நெட் ரிசர்ச் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது உலகெங்கும் வளரும் பொருளாதாரங்களால் ஏற்படும் வாழ்நிலை நெருக்கடிகளில் பலர் மனநோய்க்கு உள்ளாகின்றனர். ஆனால் இதற்கான சிகிச்சையை அளிக்க மருத்துவர்களுக்கு போதிய நேரம் இல்லை என்றும், குடும்ப மருத்துவர்களுக்கு நோயை தீர்ப்பதற்க்கான ஆதாரங்களும் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வில் பணியற்றிய கெர்ரி ஷான்ட்லி என்பவர் கூறியுள்ளார். உதாரணமாக மனஅழுத்தம், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் "பேனிக் ஆன்-லைன்" என்று அழைக்கப்படும் இ-தெரபி மூலம் வெகுவாக குணமடைந்து வருவதாக அந்த பத்திரிக்கை அறிக்கை ஆய்வை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 30% பேர் இத்தகைய மன நோயிலிருந்து முழுவதும் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதற்கட்ட மனநோயான மன அழுத்தம், மன உளைச்சல், மனப் பதட்டம், டென்ஷன் உள்ள ஒரு 96 பேரை ஆன்-லைன் பேனிக் தெரபிக்கு உட்படுத்தியது. இவர்கள் 12 வாரங்களில் குணமடைந்தனர்.

இந்த ஆன்-லைன் சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மனோவியல் நிபுணர் தொலைபேசி மூலம் பேசி பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். பிறகு தொடர்ச்சியான பல ஆன்-லைன் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு 6 மாத காலம் தொடர் மருத்துவ கண்காணிப்பும் நடத்தப்படுகிறது.

அதாவது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும், ஆன்-லைன் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், உட்கார்ந்த இடத்திலேயே சொற்ப செலவில் நோய்களுக்கு சிகிச்சை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த ஆன்-லைன் சிகிச்சை நிரூபித்துள்ளது.

22 June 2008

தேடும் கலை...

|0 comments
நம் எல்லொர் வழ்க்கையிலும் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒண்றை தேடியே தீருவோம். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி ஏதோ தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். இணையத்திலும் அதை நாம் விட்டுவைக்கவில்லை. இப்போது இணையத்தில் தேட மிகவும் பயன் படுத்தப்படும் தேடுதளம் google. இந்த தளத்தில் எப்படி தேடுவது என்று பலருக்கு தெரிவதில்லை அதனால் அவர்கள் வேண்டிய விடை கிடைக்காமல் வேறு எங்கேங்கோ சென்று கடைசியில் அவர்கள் தேட வந்ததையே மறந்து விடும் நிலமைக்கு தள்ளப்படுகின்றர். சரி... விஷயத்திற்கு வா என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

இதோ வந்துட்டேன்... google.com "தேடுவது எப்படி" என்று டைப் செய்து கிடைத்த சுட்டிகளின் இரண்டு உங்களுக்காக.

சுட்டி-1 சுட்டி-2

இவை தவிற பிற சுட்டிகளும் பிற நுனுக்கங்களும் உங்களுக்கு தெரிந்ததை கூறலாம். அதுவும் இந்த பதிவில் பதியப்படும்.

13 June 2008

கணினி வைரஸை தடுக்க புதிய வழி

|0 comments
2001-ம் ஆண்டு கோட் ரெட் என்ற வைரஸ் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை 14 மணி நேரத்தில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது. தவிரவும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு உலகம் முழுதும் இழப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஓஹியோ மாகாண தொழில் நுட்ப வல்லுனர்கள் கோட் ரெட் வகை வைரஸ்களை தடுக்க புதிய உத்திகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரசை அதன் துவக்க இயக்கத்திலேயே கண்டுபிடித்து விடுவது, அது பல நெட்வொர்க்குகளுக்கு செல்வதற்கு முன்னரே கண்டுபிடித்து விடுவது என்பதே அந்த உத்திகள்.

இந்த வைரஸ்கள் மிக வேகமாக பரவக்கூடியது. ஜன்க் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நெட்வொர்க்கில் இவை வந்து குவியும் தன்மையுடையது. மேலும் கணினி நெட்வொர்க்கை நிரப்பி அதனை ஷட் டவுனும் செய்து விடும் ஆபத்து மிக்கவை இந்த வைரஸ்.

நெட்வொர்க்குகளில் உள்ள கணினியிலிருந்து எவ்வளவு எண்ணிக்கை ஸ்கேன்கள் வெளியில் செல்கின்றன என்பதை கண்காணிக்கும் மென்பொருளை ஓஹியோ பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு கணினி அளவுக்கதிகமாக ஸ்கேன்களை வெளியே அனுப்பினால் அந்த கண்னி வைரஸ் தாக்குதல் கண்டுள்ளது என்று அடையாளம் காணப்படும். உடனடியாக கணினி நிர்வாகிகள் அதனை ஆஃப் லைனிற்கு எடுத்துச் சென்று வைரசை கண்காணிக்கலாம்.

கூகிளில் நாம் தேடுதல் போல்தான் இந்த ஸ்கேனை கண்டுபிடிக்கும் முறையும் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

வித்தியாசம் என்னவெனில் ஒரு வைரஸ் தாக்கிய கணினியிலிருந்து குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான ஸ்கேன்கள் வெளியேறும். ஆனால் எவ்வளவு ஸ்கேன்கள் என்ற அளவை தீர்மானிப்பது கடினம்.

இதற்காக கணித மாதிரிகளையும் ஓஹியோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு நேரத்தில் எவ்வளவு ஸ்கேன்கள் செல்லலாம் என்பதை இது வரையறுத்து விடும்.

இதுவரை வந்துள்ள வைரஸ் ஒழிப்பு தொழில் நுட்பங்களை விட இது திறம்பட வேலை செய்யும் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

9 June 2008

வேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்...

|1 comments
இணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.

பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது. மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.

பிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

நாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.

ஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.

வலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.




நிறுவனங்களும், வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்களும் தற்போது தேடல் எந்திரம் மூலம் பிளாக்குகளுக்கு வலை விரிக்கிறது. வலைப்பதிவுகள் ஒருவர் குணாதிசயத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் ஒருவரது சிந்தனைகள் வெளிப்படும் வலைத்தளத்திலிருந்து ஒரு நிறுவனத்தின் பணிப் பண்பாட்டிற்கு அந்த நபர் சிறந்தவரா இல்லையா என்று கண்டு கொள்ளலாம் என்று ஒரு மேலை நாட்டு வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் சமீபமாக இரண்டு நபர்களை அவர்களது வலைப்பதிவுத் தளங்களை பார்த்தே பணித் தேர்வு செய்துள்ளது.

வேலை வாய்ப்பின் சிறந்த கருவியாக மாறும் வலைப்பதிவுத் தளங்கள் உங்களுக்கு பொருத்தமான நிறுவனத்தையும் அடையாளம் காட்டக்கூடியது. அதனால் வலைப்பதிவை நன்றாக பராமரிப்பது அவசியம். அனாவசியமான சச்சரவுகளையும் அக்கப்போர் பேச்சுக்களையும் பதிவு செய்வதை தவிர்த்து. ஆரோக்கியமான விஷயங்களை எழுதினால் வேலை வாய்ப்புக்கான ஒரு வாசலாகவே அது அமையும்.

தற்போது வேலைக்காகவே பிளாக் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் ஆங்காங்கே பெருகத் தொடங்கியுள்ளன.

7 June 2008

மெடிக்ளைம் பாலிசி

|0 comments
அவசர காலத்தில் மருத்துவச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோருமே மெடிக்ளைம் எடுக்கிறார்கள். ஆனால், இன்ஷ¨ரன்ஸ் நிறுவனங்கள் செய்யும் குழப்பங்கள் இந்த மெடிக்ளைம் பக்கம் மக்களை வரவிடாமல் செய்கின்றன. ஆனால், சமீபத்தில் உச்சநீதிமன்றம் மெடிக்ளைம் தொடர்பாகக் கொடுத்திருக்கும் தீர்ப்பு குழப்பங்களைத் தவிர்க்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது.


யுனைடெட் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தில் 1995-ம் ஆண்டு மெடிக்ளைம் எடுத்த ஒருவர், ஒழுங்காக பிரீமியம் செலுத்தி வந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதயநோய் தொடர்பாக சிகிச்சை


எடுத்த அவர், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்துகொண்டிருக்கிறார். அதற்கான மருத்துவ க்ளைமை இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் கொடுத்திருக்கிறது. அதன்பிறகு 2001-02 காலகட்டத்தில் இந்த நோய் தொடர்பாக சிகிச்சை எடுத்ததோடு 2002-ல் பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். ஆனால், அதற்கான க்ளைமைத் தர மறுத்ததோடு, 2003-ல் அவர் பாலிசியை புதுப்பிக்கச் சென்றபோது மறுத்தும்விட்டது இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம்.


அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில்தான், 'மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டியது அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடமை. பாலிசி எடுப்பதற்கு முன் நோய் இருந்ததாகச் சொல்லி க்ளைம் கொடுக்க மறுப்பதோ, முந்தைய சிகிச்சைகளைக் காரணம் காட்டி பாலிசியைப் புதுப்பிக்க மறுப்பதோ கூடாது' என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது.


இந்தத் தீர்ப்பு பற்றியும் மெடிக்ளைம் பெறுவது பற்றியும் பொதுத்துறை இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற தியாகராஜனிடம் கேட்டோம். இப்போது எஸ்.பி.டி. இன்ஷ¨ரன்ஸ் பார்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.


''பாலிசி எடுப்பவர்கள் எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்கும் என்பதைக் கவனத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். எப்போதுமே புதிதாக பாலிசி எடுப்பவர்கள், அதை எடுப்பதற்கு முன் உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறும்போது க்ளைம் பெறமுடியாது.


பாலிசி எடுத்த பிறகும் கூட குறிப்பிட்ட காலத்துக்கு நோய்க்கான சிகிச்சைக்கு க்ளைம் பெறமுடியாது. இதற்கான அடிப்படைக் காரணமே, 'அந்த குறுகியகாலத்தில் நோயின் தாக்குதல் ஏற்பட்டிருக்க முடியாது. அது பாலிசி எடுக்கும் முன்பே உள்ள நோயின் தாக்கமாகத்தான் இருக்கும்' என்பதுதான்! பாலிசி எடுக்கும்போது ஒருவருக்கு ரத்தக்கொதிப்பு இருக்கிறது, இதனால் பாலிசிகாலத்தில் அது ஹார்ட் அட்டாக் வர வழி வகுக்கும் எனமுடிவு செய்து நிறுவனம் பாலிசி தர மறுக்கவோ அல்லது அதற்கு க்ளைம் தரவோ மறுக்கமுடியாது. ஏனென்றால் ஹார்ட் அட்டாக் ரத்தக்கொதிப்பினால்தான் வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.


ஏற்கெனவே பாலிசி எடுத்து அதை புதுப்பித்துக்கொண்டிருப்பவர் புதுப்பித்த அடுத்தநாளே சிகிச்சைக்குச் செல்லலாம். க்ளைம் உண்டு. இந்த வழக்கில் க்ளைம் மறுக்கப்பட்டவர் இந்த வகையைச் சேர்ந்தவர். அதனால், அவருக்கு பாலிசிக்கு முன்புள்ள நோய் என்பது செல்லுபடியாகாது.


ஆனால், நிறுவனம் அனுமதித்த சிகிச்சை பெறும் நோய்களுக்கான பட்டியலில் உள்ளவற்றுக்கு மட்டுமே மேலே சொன்னவை பொருந்தும். இதைத்தவிர, சிகிச்சை பெறமுடியாத நோய்கள் பட்டியல் எதுவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் தியாகராஜன்.


நன்றி, விகடன்.

5 June 2008

புதிய யமஹா பைக்...

|3 comments
இப்போது பைக் பிரியர்கள் எங்கே சந்தித்து கொண்டாலும் முதலில் பேசுவது... யமஹா ஆர்15 பைக் பற்றித்தான். இளைஞர்களின் உற்சாகத்துக்கு மேலும் பலம் சேர்ப்பது போல, யமஹா நிறுவனம் சென்னையில் இந்த புதிய ஆர்15 பைக்கை காட்சிக்குவைத்திருக்கிறது. இந்தக் கனவு பைக்கில் 'அட' போட வைக்கும் சமாசாரங்கள் ஏராளம்!


சென்னையில் இருக்கும் யமஹா டீலர்கள் அத்தனை பேரும், இந்தக் கனவு


பைக்குக்கான முன்பதிவை ஆரம்பித்துவிட்டதை அடுத்து, ஷோரூம்களில் செம கூட்டம்!


இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வாகனத்தின் பவர் என்னவென்று தெரியாது. விலை எவ்வளவு எனத் தெரியாது. எப்போது விற்பனைக்கு வரும் என்றுகூட யாருக்கும் தெரியாது! இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க, களத்தில் இறங்கிச் சேகரித்த தகவல்கள் இதோ...


ஏரோடைனமிக் டிசைன், கிளிப் ஆன் ஹேண்டில்பார், ஸ்போர்ட்ஸ் பைக் ஃபேரிங், 150சிசி பைக்குகளில் முதன்முறையாக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், பின்பக்கமும் டிஸ்க் பிரேக், ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், ஆயில் கூல்டு இன்ஜின் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, இந்த யமஹா ஆர்15. இவ்வளவு வசதிகள் இருப்பதால், இதன் விலை சென்னையில் ஒரு லட்ச ரூபாய் என்று யமஹா தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.


சென்னையில் இந்த ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் யமஹா ஆர்15 விற்பனைக்குக் கிடைக்கும். 'இந்த பைக்கின் சக்தி என்ன என்பதை இடியே விழுந்தாலும் இப்போதைக்குச் சொல்ல மாட்டோம்' என அடம்பிடிக்கிறார்கள் யமஹா நிறுவனத்தினர். இதன் சக்தி 20 - 22 bhp இருக்கும் என வெளியே பேச்சுகள் இருந்தாலும், நமக்குக் கிடைத்த தகவலின்படி இதன் சக்தி 16 bhp இருக்கும் எனத் தெரிகிறது.


இந்த பைக்கின் வருகையால், டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி 160 எஃப்ஐ பைக்கை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த பைக்குடன் போட்டிபோடுவதற்காக பஜாஜ் நிறுவனமும் பல அதிரடித் திட்டங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறது!

நன்றி, விகடன்.

2 June 2008

மதுரைக்காரங்க எல்லாரும் மறக்காம படிங்க...

|10 comments
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகரமான மதுரை ஒரு மெட்ரோ நகரமாக மாறும் என்பதற்கு சில நம்பத்தகுந்த காரணங்கள்...


1.ரூபாய் 100 கோடி முதலீட்டில் மல்டிபிலேக்ஸ், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் ஆர்கேடுகள் ETL கான்வெண்ஸன் சென்டர் மற்றும் ஷாப்பிங்மால் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..


2. சுமார் 2500 ஏக்கர் நிலம் மதுரைக்கு அடுத்துள்ள இளியார்பதி கிராமத்தில் சிப்காட் கையகப்படுதியுள்ளது.


3. மதுரைக்கு தெற்குபகுதியில் உள்ள சோலங்குரினி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் நிலம் ஆர்.ஆர் இண்டஸ்டிரீஸ் மற்றும் ஐடி டவுன்ஷிப்ற்காக கையகப்படுதப்பட்டுள்ளது. முதல் கட்ட வேலைக்கா வரைபடம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வேலை தொடங்ப்பட உள்ளது. அதில் 18000 குடியிருப்புகள் கொண்ட அப்பார்மென்ட், ஒரு மருத்துவமனை, இரண்டு மல்டிபிலேக்ஸ் மற்றும் இரண்டு மிகப்பெறிய ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளன. மேலும் 8மாடிகள் கொண்ட ஐடி பார்க் ஒண்றும் கட்டப்பட உள்ளன. மொத்த மதிப்பீடு ரூபாய்.4500 கோடி.

4. ELCOT நிறுவனம் 2000-10000 ஏக்கரில் மதுரையில் இண்டஸ்டிரியல் சிட்டி தொடங்கப்பட உள்ளது.

5. ரேஸ் கோட் சாலையில் சுமார் 1,60,000 ச.அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமான G+3 ஷாப்பிங் மால் சுமார் 500அடி முன்பக்க காலி இடத்துடன் கட்டப்பட உள்ளது.


6. சுமார் 100ஏக்கரில் டெக்ஸ்டைல் பூங்கா மதுரையில் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூபாய்.35 கோடி.


7. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் Fortune ITC Welcome குரூப்ஸ் உடைய ரிசாட்ஸ் தொடங்கப்பட உள்ளது.


8. மதுரைக்கு வெளியே சினிமாக்ஸ் மற்றும் அட்லாப்ஸ் மல்டிபிளக்ஸ் அரங்குகள்.


9. பாரமெளன்ட் பைளட் பயிற்சிப்பள்ளி மதுரையில் தொடங்கப்பட உள்ளது.


10. புது நத்தம் சாலையில் பென்டாஸாப்ட்டுடைய விளையாட்டு தீம் பார்க் மற்றும் மாயாஜால் தீம் பார்க் மல்டிபிளக்ஸ் உடன் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.200 கோடி.


11.மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சிறுவர்களுக்கான அறிவியல் கோளரங்கம் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.25லட்சம்.


12. ஹேலிகாப்டர் போக்குவரத்து ராமேஸ்வரத்திலிருந்து கொடைக்கானலிற்க்கு முதல் கட்டமாக தொடங்கப்பட உள்ளது. பின்பு பழனி, கன்னியாகுமாரி, கோவை போன்ற இடங்களுக்கு தொடங்கப்பட உள்ளது.


13. மதுரைலிருந்த்து 20கி.மீ தொலைவில் வடமலையான் மருத்துவமனை டிரஸ்ட் மற்றும் கமூதி நாடார் சங்கம் இனைந்து காமராஜ் நினைவு மருத்துவ கல்லூரி சுமார் 150 ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது. 300 படுக்கை வசதியுடன் முதல் தர மருத்துவமனை மற்றும் 150 M.B.B.S. இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு வருடத்தில் அனைத்து வேலைகளும் முடிவடையும். 2009ல் அட்மிஷன் தொடங்கப்பட உள்ளது.


14.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கம் பழைய அன்னா பேருந்துந்துநிலையத்தில் தொடங்கப்பட உள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட G+6 கட்டிடம். ரூ.35கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


15. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு எதிற்புறம் சுமார் 260 ஏக்கரில் ஐடி தொழில்நுட்ப பூங்கா அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது.


16. அவனியாபுரம் ரிங் ரோடு அருகில் சுமார் 125 ஏக்கரில் 15000 குடியிருப்புகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட் 9மாடிகளுடன் மிகப் பிரமாண்டமான கட்டிடத்துடன் ஷஹாரா சிட்டி ஹோம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளது.


17. அரிஹாந்த் பவுன்டேஷன் மதுரையில் குடியிருப்பு டவுன்ஷப்பிக்கா 21ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளது.


18. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்திய ஆஸ்திரேலியா சூரிய ஆற்றல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


19.ரிலயன்ஸ் பிரஷ் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 11பழைய திரையரங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவை அனைதும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட காய்கரி மற்றும் இரைச்சி மார்கட் ஆக தொடங்கப்பட உள்ளது.


20. COGNIZANT, IBM, DLF , INFOSYS ஐடி பார்க் தொடங்கப்பட உள்ளது. மேலும் இவை தமிழ் நாட்டில் தென்பகுதியில் உள்ள கல்லூரிகளுடன் டைஅப் வைத்து கொள்வதற்க்காக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.


21. மாட்டுதாவனி அருகே சுமார் 1,00,000 ச.அடியில் ஐடி பார்க் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.


22. அரவிந்த் கண் மருத்துவமனை கண் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் (Ophthalmic university) தொடங்கப்பட உள்ளது.


23. கூடல் நகர் அருகில் மிகப்பிரமாண்டமான வெர்ஹவுசிங் காம்பிளக்ஸ் 5ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது.


24. இரண்டு தனியார் நிறுவனங்கள் மதுரையில் இடங்களை வாங்கி குவித்துள்ளனர். 1. சென்னையை சேர்ந்த CEEDEEYES நிறுவனம். 2. துபாய்யை சேர்ந்த ETA ஸ்டார் நிறுவனம்.


25. நவ2007 முதல் பாஸ்போர்ட் அலுவலகம் மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது.


26. ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் திரையரங்கம் GV நிறுவனம் வாங்கி மிக விரைவில் GV ஸ்டுடியோ சிட்டி தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், இரண்டு 3 நட்ஷத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், சென்னயை சில்க் மற்றும் ஹோட்டல் சரவணா பவன் தொடங்கப்பட்டு உள்ளது.


27. ரூ.3கோடி மதிப்பீட்டில் YMCA இன்டர்னேஷனல் சென்டர் தொடங்கப்பட்டு உள்ளது.


28. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் 80 அறைகளுடன் AITKER SPENCE ஹோட்டல் தொடங்கப்பட்டு உள்ளது.


29. சுமார் 30ஏக்கர் நிலம் கோச்சடையில் டைடல் பார்க்கிற்ககா ஒதுக்கப்படுள்ளது.


30. மாடகுலத்தில் சிறுநீரக டையாலசிஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்பட்டு உள்ளது.


31. அப்போலோ மருத்துவமனை, மதுரை மற்றும் BASKERSFIELD , கலிபோர்னியா இணைந்து சகல வசதிகளுடன் கூடிய இரத்தம் மற்றும் புற்றுநோய் மையம் தொடங்கப்பட உள்ளது.


32. உலக தரத்துடன் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் கேர் சென்டர் தொடங்கப்பட உள்ளது.


33. சுமார் 10கோடி செலவில் வண்டியூரில் உள் சறுக்கு விளையாட்டரங்கம் மற்றும் பார்க் தொடங்கப்பட உள்ளது.


33. மதுரையில் பூக்கள் ஏற்றுமதிக்காக அக்ரி ஏற்றுமதி ஜோன் தொடங்கப்பட உள்ளது.


34. ஹ்ச் சி எல் நிறுவனம் டிஜிட்டல் லைப் ஸ்டைல் வளாகத்தை தொடங்க உள்ளது.


35. சுமார் 120கோடி மதிப்பீட்டில் தோப்பூரில் AIIMS மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.


36. மதுரை மாநகராட்சியால் விலங்கியல் பூங்கா அழகர்கோவில் அருகில் தொடங்கப்பட உள்ளது.


37. இந்தியாவில் உள்ள அனைத்து முன்னனி நகை கடைகளும் மதுரையில் தன் கிளைகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது.


மேலும் இதில் சொல்லப்படாத சில விரிவாக்கங்களும் சில தொழில் நுட்ப பூங்காக்களும் சில மருத்துவமனைகளும் அமைக்கப்படலாம்.


இதை போல் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...

1 June 2008

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

|2 comments
செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.

அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.

அதாவது வாடிக்கையாளர்கள் பேக்-அப் தேவையான தரவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுபிறகு ஜிபிஆர்எஸ் வழி சர்வரை அடையும் அதன் பிறகு ஒரு டிஜிட்டல் அறையில் சேமிக்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும்.


இது பாதுகாபானதே. ஏனெனில் பயனர் அடையாளம் மற்றும் பாஸ்வேர்டு இருந்தால் மட்டுமே இந்த தகவலை அணுக முடியும். ஒவ்வொருவரும் இந்த சேவையை தங்கள் செல்பேசியிலேயே ஏற்படுத்தி கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அல்லது செல்பேசி இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் மூல்மாகவோ கோரிக்கை அனுப்பி இந்த சேவையை செல்பேசியில் உருவாக்கிக் கொள்ளலாம்.

சிம் கார்டிலிருந்து தரவுகளைப் பெறும் மென்பொருளைக் காட்டிலும் இந்த மென்பொருள் அதிக பயனுள்ளது. அதாவது இதில் அழிக்கப்பட்ட தரவுகளை கூட வாடிக்கையாளர்கள் செல்பேசி தொலையும் பட்சத்தில் திரும்பப் பெறலாம். தங்கள் தொலைந்த செல்பேசியில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்கள், அழித்த தகவல்கள் என்று அனைத்தையும் செல்பேசி தொலைந்தாலும் ஒரு நெட்வொர்க் வசதி மூலம் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் ஒரு செல்பேசி சாதனத்திலிருந்து வேறு செல்பேசி சாதனத்திற்கு மாறினால் கூட தகவல்களை எந்தவித சிரமமும், தடையும் இன்றி புதிய செல்பேசிகளில் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த தரவு மீட்பு பயன்பாட்டுச் சேவையை பயன்படுத்தும் 3வது நிறுவனம் பார்தி ஏர்டெல் ஆகும். மலேசியாவின் மேக்சிஸ், இந்தோனேஷியாவின் இந்தோஸாட் ஆகிய 2 நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

28 May 2008

கூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்

|2 comments
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.


""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கர்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''


இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.


லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.


கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது


நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?


கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

நன்றி, தயாளன்.

27 May 2008

பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்!

|0 comments
இளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 22 கோச்சுகளில் ஒரு கோச்சை மட்டும் விசேடமாக மாற்றி, ஹனிமூன் கோச் என மாற்றியுள்ளனர். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். இதுதவிர 4 பேர் செல்லக் கூடிய வகையிலான 3 கூபே பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பேர் இந்த கோச்சில் பயணிக்க முடியும்.

இந்தக் கோச்சில் மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கு ஒரு ஜோடிக்கு ரூ. 2,750 கட்டணமாகும்.இந்த கோச் முழுவதும் தரையில் ரெட் கார்பெட் விரித்துள்ளனர்.

வெப்ப நிலைக்கேற்ப தானாக மாறிக் கொள்ளும் வகையிலான ஏசி, டீப்பாய், லெட்டர் பேடுகள், படுக்கை, கம்பளி, சோப், பட்டன் விளக்குள் என ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அத்தனையும் இந்த கோச்சில் அடக்கம்.

பெல் அடித்தால் ஓடி வந்து உபசரிக்க அட்டென்டர்களும் உண்டு.விரைவில் டிவி, எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளையும் சேர்க்கவுள்ளனராம். மேலும் ரயில் எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதியும் செய்யப்படவுள்ளதாம்.

26 May 2008

மதுரை...

|0 comments
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. சுமார் 2500 ஆண்டுகள் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. பாண்டிய மன்னர்களின் பேர் சொல்லும் தலைநகரமாக விளங்கியது. 550 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் ஒப்பற்ற இடம். வற்றாத நதியாக விளங்கும் வைகையின் கரையில் அமைந்துள்ள மதுரைக்கு வையகத்துள் என்றுமே சிறப்பிடம்தான். தூங்கா நகரம் என்ற சிறப்புப்பெயரும் மதுரைக்கு உண்டு.



மதுரையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
மதுரையின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். திராவிடர்களின் கட்டிட கலைக்கு ஒரு மாபெரும் சான்று. இக்கோவிலை முதலில் அமைத்தது குலசேகர பாண்டியமன்னன் ஆவான். அக்காலத்தில் கதம்பவனம் என்ற பெயரில் காட்டுப்பகுதியாக மதுரை இருந்ததாம். அப்போது ஒரு கதம்பமரத்தின் அடியில் சுயம்புலிங்கத்தை வைத்து இந்திரன் வழிபடுவதைக்கண்ட விவசாயி தனஞ்செயன் என்பவர், இதை குலசேகர பாண்டியமன்னனின் காதில் போட, அதிசயப்பட்டுப்போன மன்னன் உடனடியாக இந்திரன் வழிபட்டதாக சொல்லப்பட்ட பகுதியில் காடுகளை அகற்றி கோவில் அமைத்தான், அதைத்தொடர்ந்து உருவானதே மதுரை நகரம் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை அமைத்தது குலசேகர பாண்டிய மன்னன் என்றாலும் அதை மேலும் அழகுப்படுத்தி தற்போதைய வடிவத்துக்கு காரணமாகவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாயக்க மன்னர்கள் ஆவர். சுமார் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் கோவில் வளாகம் அமைந்துள்ளது.12 கோபுரங்கள் அழகுற காட்சி அளிக்கின்றன. இதில் தென்பகுதியில் உள்ள பிரதான பிரம்மாண்ட கோபுரத்தில் மட்டும் 1500 சிற்பங்கள் கலை வேலைப்பாடுகளுடன் கவர்ந்திழுக்கின்றன கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அக்கால கட்டிட கலைக்கு அசைக்கமுடியாத சான்றாக விளங்குகிறது. இதில் தூண்களின் எண்ணிக்கை மட்டும் 985 ஆகும். ஒரு முறை மீனாட்சி கோவிலுக்குள் வலம் வந்து விட்டாலே போதும். கண்முன் பார்க்கும் ஆதாரங்கள், நம்மை குலசேகர பாண்டியனின் காலத்திற்கே கொண்டு சென்று விடும். அழகர் கோவில்
மதுரையில் இருந்து சுமார் 21கி.மீ தூரத்தில் உள்ள விஷ்ணு கோவில்தான் அழகர் கோவில். இங்குள்ள அழகான சிற்பங்கள் மேலும் மேலும் பார்க்க தூண்டும்.



பழமுதிர்ச்சோலை
அழகர்கோவிலில் இருந்து சுமார் 2கி,மீ தூரத்தில் உள்ள குன்றுதான் பழமுதிர்ச்சோலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று.



திருமலைநாயக்கர் மகால்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். 1636ம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்ய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் இங்கு இசை, நடன நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வந்துள்ளன. இம்மண்டபத்தின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் செய்யப்பட்டுள்ள மரவேலைப்பாடுகளும், இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தூண்களும் கற்பனைக்கும் எட்டாத கலைக்கவிதைகள். ஒவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4மீட்டர் சுற்றளவும் கொண்டது. திருமலை நாயக்கர் கட்டிய இம்மகாலின் பழைய வடிவம் இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பிரம்மாண்டமானது என்பதும் கூடுதலான ஒரு ஆச்சரியத்தகவல்.



திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று என்பதால் எப்போதும் இங்கு முருகனுக்கு அரோகரா சரணகோஷம்தான்.



இவற்றுடன் கூடல் அழகர் கோவில், கோச்சடை அய்யனார் கோவில், ஷ்ரீஅரவிந்தர் அன்னை தியான மண்டபம், திருமோகுர் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், ராமகிருஷ்ண மடம் என பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவும், பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் முளைப்பாரி விழாவும் மதுரையில் பிரசித்தம்.



உணவு, தங்குமிடம், போக்குவரத்து
தமிழக பாரம்பரிய உணவு வகைகளை மதுரையில் ஒரு பிடிபிடிக்கலாம். மல்லிப்பூ இட்லி (ரொம்பவே மிருதுவானது), சாம்பார், பலவகைச்சட்னி மதுரையின் தனி ருசி. தங்குமிடங்களை பொறுத்த வரை அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற ஹோட்டல்கள் உள்ளன. விமானநிலையம், ரயில் நிலையம் உள்ளதால் எந்தப்பகுதியில் இருந்தும் மதுரைக்கு வந்து விடலாம். அழகான சாலை வசதியும் உண்டு. சென்னையில் இருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் உள்ளது.



யப்பா....இப்பவே கண்ணைக்கட்டுதே...ங்கிறீங்களா. போடுங்க மதுரைக்கு ஒரு விசிட்டை.

22 May 2008

இனிமையான கனவுகள் காணுங்கள்

|0 comments

கனவுகள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம்பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.




ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன.அதாவது மனிதனின் மூளையில் பதிவாகியிருக்கும் விஷயங்கள்தான் அவ்வப்போது அவனது உறக்கத்தில் வரும் கனவாகிறது என்கிறது அறிவியல்.ஒ‌வ்வொரு கனவு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பல‌ன் இரு‌க்‌கிறது. அதுவு‌ம் எந்தெந்த நேரத்தில் எந்த மாதிரியான கனவு கண்டாலும் அதற்கான ஒரு பலன் இருக்கிறது என்கிறது சாஸ்திரம்.



நள்ளிரவில் காணும் கனவு ஓராண்டுக்குள் பலிக்கும், விடியல் நேரத்தில் காணும் கனவு உடனே பலிக்கும், பகல் கனவு பலிக்காது என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம்.கனவில் விலங்குகளைப் பார்த்தால், தெய்வங்களைப் பார்த்தால், திருமணம் நடந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் என்பதையும் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் படித்துள்ளோம். பொதுவாக கனவுகள் கருப்பு - வெள்ளைகளாகத்தான் இருக்கும். கண் பார்வை குறைபாடு இருப்பவர்களின் கனவுகளில் உருவங்கள் இருக்காது. அவர்களது கனவில் பேச்சுக் குரல் மட்டுமே இருக்கும்.‌ பூனைகளும் கனவு காண்பதாகக் கூறப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை. கடைசியாக தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் எண்ணும் எண்ணங்கள் தான் பல சமயங்களில் கனவுகளாக வருகின்றன. நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை மனக் கண்ணில் பார்ப்பதே கனவு எனப்படுகிறது. நாம் காணும் அனைத்து கனவுகளும் நமது நினைவில் நிற்பதில்லை. புதிதாக நாம் செல்லும் ஓரிடத்தை ஏற்கனவே பார்த்ததுபோன்ற ஒரு எண்ணம் தோன்றும். அது கனவி‌ல் க‌ண்ட இடமாகவு‌ம் இருக்கலாம். ஒருவர் இறந்துப்போவது போன்று கனவு கண்டால் அவருக்கு ஆயுள் கெட்டி என்று எண்ணிக் கொள்ளலாம். உறங்கச் செல்வதற்கு முன்பு இனிமையான நிகழ்வுகளை அசைபோட்டபடி கடவுளை வணங்கிவிட்டு உறங்கச் செல்வதன் மூலம் இனிமையான கனவுகளை காணலாம். மன‌தி‌ற்கு‌ப் ‌பிடி‌த்தமான மெ‌ன்மையான பாட‌ல்களை‌க் கே‌ட்டபடியு‌ம் உற‌ங்க‌ச் செ‌ல்லலா‌ம். ந‌ல்ல உ‌ற‌க்கமு‌ம் வரு‌ம். அ‌தி‌ல் அருமையான கனவுகளு‌ம் வரு‌ம்.



இதுபோன்று கனவைப் பற்றி சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் நீங்கள் படித்துமுடித்து உறங்கிவிட்டால் யார் பொறுப்பு.அதற்காக இத்துடன் முடித்து விடுகிறோம். கனவுகள் பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை அளிக்கலாம்.

20 May 2008

காஃபியின் கதை

|0 comments

காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது.

எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன.

அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதிகளை உட்கொண்டு உற்சாகமாக இருந்ததால், மோக்கா எனப்படுகிறது. அது தற்போது காஃபியுடன் தவிர்க்க இயலாத சொல்லாகி விட்டது. 'கஃபே கேன்ஸ்' எனப்படும் காஃபிக் கடைகள் முதன்முதலில் புனித நகரமான மெக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் அரேபியா நாட்டின் சதுரங்கம் விளையாடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எப்போதுமே மகிழ்ச்சியில் களைக்கட்டி கொண்டிருக்கும் பிரபலமான இடங்களில் காஃபியின் இனிமை வேகமாக பரவியதால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு காஃபி விற்பனையாகும் கடைகள் புது வளர்ச்சியும், தனித்தன்மையையும் அடைந்தன.

அதன்பிறகு டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாடுகளின் காலனிகளின் மூலமும் மற்ற இடங்களுக்கும் காஃபியின் மகத்துவம் பரவ ஆரம்பித்தது. 1683 ஆம் ஆண்டு வெனிஸ் நகரின் பிரபல பியாசா சான் மார்கோ பகுதியில் உள்ள கேஃப் ஃப்ளோரியன் கடையில்தான் முதன்முதலாக ஈரோப்பியன் காஃபி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அந்த இடம் காஃபிக்கு பெயர்பெற்ற இடமாகவே உள்ளது.

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு சந்தையான, லாயிட்ஸ் ஆஃப் லண்டன் நிறுவனமே ஒரு காஃபி கடையாகவே முதலில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 1688 ஆம் ஆண்டு எட்வர்ட் லாயிட்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் காப்பீடு செய்யும் கப்பல்களின் பட்டியல்களை தயாரிப்பது இவரது பணியாகும். 1668 ஆம் ஆண்டில் தான் தென் அமெரிக்க மக்களால் காஃபி சுவைக்கப்பட்டது.

1773 ஆம் ஆண்டு போஸ்டன் டீ பார்ட்டி, கிரீன் டிராகன் எனப்படும் காஃபி அவுஸில்தான் திட்டமிடப்பட்டது. இன்று நிதி மாவட்டம் என்றழைக்கப்படும் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள காஃபி கடைகளில்தான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சும், பேங்க் ஆஃப் நியூயார்க்கும் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

1720 - ஆம் ஆண்டுகளில் முதன்முதலாக தென் அமெரிக்காவில் காஃபி பயிரிடப்பட்ட நிகழ்ச்சி, காஃபி வரலாற்றில் மிக முக்கிய தருணம் எனலாம். 60 வேறுபட்ட நாடுகளில், பெரும்பாலும் வளரும் நாடுகளில் காஃபி உற்பத்தி செய்யப்பட்டாலும், வளர்ந்த நாடுகளான ஐரோப்பியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தான் காஃபி அதிகளவில் அருந்தப்படுகிறது.

காஃபியை மிக அதிகமாக தயாரிக்கும் நாடு பிரேசில், காஃபிக்கு மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நாடு அமெரிக்கா. காஃபியின் தலைசிறந்த ஆறு தயாரிப்பாளர்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது

காஃபி பற்றி மேலும் சுவையான தகவலுக்கு http://www.indiacoffee.org/