Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

1 July 2013

கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free

|2 comments
இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்கள் ஆகி விட்டது. (அது தான் வந்துட்டேல்ல அது என்ன விட்டது.... விட்டது... மேட்டருக்க வாப்பா). இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் அனேகமாக பல பேரிடம் ஸ்மார்ட் போன் அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை உங்களுக்கு கொடுக்கிறேன். 

நம்ம இந்தியாவில் ஏறத்தால அனைத்து வீட்டுகணினிகளும் வின்டோஸில் இயங்கும் மென்பொருட்களை யாரும் பணம் கொடுத்து வாங்குவதாக தெரியவில்லை (என்னது பணமா?!). எல்லாமே மென்பொருட்களையும் பணம்கொடுத்துதான் வாங்க வேண்டும் என்றால் இந்த அளவிற்க்கு கணினி விற்பனை ஆகியிருக்காது என்று தான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட எல்லா மென்பொருட்களுக்கும் இலவசமாக நம் கணினியில் இயங்க நம்மாள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளான். அதன் பெயர் தான் CRACK அல்லது KEYGEN.அதை பற்றி எல்லாம் சொல்லவேண்டும் என்றால் அதை எல்லாம் தட்டச்சு செய்ய நேரம் கிடையாது. சுருக்கமாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவி அதை ஆக்டிவேட் செய்யவேண்டும். அதை ஆக்டிவேட் செய்ய மென்பொருள் தயாரித்த நிறுவணத்திற்க்கு கட்டணம் செலுத்திய உடன் அவர்கள் தரும் ரகசிய எண் தருவார்கள். அதை கொண்டு அந்த மென்பொருளை நாம் உபயோகிக்க முடியும். சரி சரி இதல்லாம் எங்களுக்கு தெரியும் மேட்டருக்க வாப்பா என்பது என்காதில் விழுகிறது.

கணினியில் உள்ளது போல நம்  ஆண்ட்ராய்டு போனிலும் ஏதாவது இருந்தால் நான்றாக இருக்குமே என்று தோன்றி Googleல் தேடினேன். (Googleக்கு எதிராக Googleலேயே தேடுவதா!!!) அதன் விளைவாகதான் இந்த பதிவு.

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Play Storeல் சென்று 4Shared என்று தேடி அந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவவும். உங்களுக்கு 4Sharedல் கணக்கு இருந்தால் அதையே உபயோகிக்கலாம் அல்லது ஒரு புதிய கணக்கை துவங்கவும். அவ்வளவு தான் உங்கள் வேலை இனி உங்களுக்கு வேண்டிய கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இந்த 4Sharedல் தேடவும். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய மென்பொருள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். 

உதாரணமாக 4Shared Pro என்ற மென்பொருளை ரூ.99 கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் நான் சொன்ன படி தேடி பதிவிறக்கினால் இலவசம். 

இதே போல Rs.953.00 மதிப்புள்ள Next Launcher 3D என்ற மென்பொருளும் இலவசமாக பெறலாம். (வச்சான்டா ஆப்பு)




19 October 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

|4 comments

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.


இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்
று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.


தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.


இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.


2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.


சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.


இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.


ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.


நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.


ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.


ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.


கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.


இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.


எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.


கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். “மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.


மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.


2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.


அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.


அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.


பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:


• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.


சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.


இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.


தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.


அன்புடன்

கோவை. சா.காந்தி,

9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111

3 February 2012

கற்போம் (தொழிநுட்ப இணைய மாத இதழ்) Feb 2012 Karpom (Internet Monthly Magazine for Technology)

|0 comments



 



4 January 2012

கற்போம் (தொழிநுட்ப இணைய மாத இதழ்) Jan 2012 Karpom (Internet Monthly Magazine for Technology)

|0 comments

6 May 2009

புகைபடங்களை நகர்படமாக மாற்ற

|8 comments
புகை வண்டியை இப்பொது தொடர் வண்டி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது போல டிஜிட்டல் படங்கள் தான் இப்பொதெல்லாம். ஆனால் இன்னும் புகைப்படம் என்றே சொல்கிறோம்.(டிஜிட்டல் படங்களுக்கு தமிழ் வார்த்தை என்ன பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்).

இப்போதெல்லாம் எந்த ஒரு விஷேசமானாலும் போட்டோகிராபர்கள் இருந்தாலும் நம் நண்பர்கள் ஆள்ளாளுக்கு ஒரு டிஜிட்டல் கேமிராவை தூக்கிகொண்டு வந்து விடுகின்றனர். அப்படி டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைபடங்களை நீங்கள் Orkutலோ Picasaவிலோ போட்டுவிடுவார்கள் . கணினி மற்றும் இணைய வசதி உள்ளவர்கள் தான் அதை பார்க்க முடியும். இன்னும் சிலர் CDயிலோ அல்லது DVDயிலோ அதை பதிந்து வைப்பார்கள். அதையும் கணினி வசதியுடன் தான் பார்க்க முடியும். ஒரு சில பிளேயரில் தான் புகைபடத்தையும் பார்க்கும் வசதி உள்ளது.

இனிமேல் நீங்கள் எடுத்த புகைபடங்களை அட்டகாசமாக ஒரு நகர் படத்தைபோல பின்னனி இசையுடன் தயாரிக்கலாம். இதற்கு உங்கள் கணினியில் Windows Media Played 10 இருக்க வேண்டும். Windows Media Played 10 இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போ இங்கு பதிவிறக்கிகோங்க. அந்த புகைபடங்களை நகர்படமாக்கும் மென்பொருள் இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போ இங்கு பதிவிறக்கிகோங்க. இதில் ஒவ்வொரு படத்துக்கும் நீங்கள் தலைப்பும் இடலாம். மேலும் பல வசதிகள் உள்ளது. அனுபவிச்சாதான் தெரியும்.



ஒரு தமிழ் பிளாகரின் கடமையை ஆற்றியதற்கான சான்றைபார்க்க படத்தை கிளிக்குங்கள். கடமையை ஆற்றுங்கள்


4 May 2009

மிகப் பெரிய கோப்புகளை மின் அஞ்சல் அனுப்ப

|13 comments
இன்றைய உலகில் மின் அஞ்சல் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசித்துபார்கவே பயமாக உள்ளது. (மின் அஞ்சல் இல்லாமல் ஒரு நாள் அல்லது கணினி இல்லாமல் ஒரு நாள் என்று யாரவது ஒரு பதிவு போடலாம்). இந்த மின் அஞ்சல் அனைத்தும் இலவச சேவை என்பது சிறப்பு. (மின் அஞ்சல் அனைத்தும் கட்டணமானால் இன்னொரு பதிவும் போடலாம்).


இப்படி இலவச சேவை அளிக்கும் மின் அஞ்சல் தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. முதலில் ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டுமே இலவச மின் அஞ்சல் உபயோகிப்பாளர்காளுக்கு கொடுத்தார்கள். இப்போது எந்த மின் அஞ்சல் தளத்தை எடுத்தாளும் Unlimited இடத்தை கொடுக்கிறார்கள். இப்படி Unlimited இடத்தை கொடுக்கும் அவர்கள் 10MB அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும்.

அப்படி மிகப்பெரிய கோப்புகளை அனுப்ப சிலர் megaupload மற்றும் rapidshare போன்ற தளங்களை பயபடுத்துவார்கள் ஆனால் இது இவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். அதானால் இவர்கள் அறிமுகப்படுத்தியது தான் Filemail.com

இதன் சிறப்பு அம்ஸம் என்ன வென்றால், இதில் நீங்கள் Register செய்ய வேண்டியதில்லை. இதில் மூன்று வகையான சேவைகளை நமக்கு அளிக்கிறார்கள். இலவச சேவை இதில் நீங்கள் 2GB அளவுள்ள கோப்புகளை அனுப்பலாம். ஆனால் இதில் அதிகபட்சம் அந்த கோப்பு 3நாட்களுக்கு மட்டுமே Downlaod லிங்க் வேலை செய்யும் என்பது ஒரு கவலையான விஷயம்.

பிரிமியம் சேவை மற்றும் கார்பரேட் சேவை அளிக்கிரார்கள். நமக்கு இலவசமே போதும் என்கிறவர்கள்தான் இந்தியாவில் அதிகம் என நினைக்கிறேன். இருந்தாலும் கட்டண சேவையான பிரிமியம் சேவயை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் கார்பரேட் சேவை பற்றி தெரிந்து கொள்ள இங்கும் செல்லலாம். நீங்கள் இந்த பக்கதிற்க்கு செல்வதால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை.

Go to Filemail


3 May 2009

யூத்ஃபுல் விகடனுக்கு சில யோசனைகள்

|8 comments
ஏற்கனவே இந்த பிளாக்கில் Tamilishற்கு சில யோசனைகள் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்க இங்க வந்து படிச்சுக்கோங்க. என்னடா இவன் ஒரே யோசனையா சொல்கிட்டு இருக்கானே இவனுக்கு யாராச்சும் ஒரு யோசனை கூட சொல்ல மாட்ராங்களேன்னு நினைக்கிறீஙளா??? உடனே ஒரு பதிவை போடுங்க. (தலைப்பு KRICONS போன்றவர்களுக்கு யோசனை). உலகத்திலேயே இலவசமாகவும் Cheepஆகவும் கிடைக்கும் ஒன்னே ஒன்னு யோசனை தான். (சரி மேட்டருக்கு வா). சரி இப்போ யூத்ஃபுல் விகடனுக்கு எதோ எனக்கு தோன்றிய சில யோசனைகள். (குறிப்பாக பிளாக் பக்கத்திற்கு மட்டும்)

1. குட்... Blog பகுதியை சில வகைகளாக பிரிக்கலாம். அதாவது தொழில்நுட்பம், கவிதை, கதை, கட்டுரை, மொக்கை போன்றவற்றில் குறைந்தது இரண்டு பிளாக்களை ஒவ்வொரு பிரிவிலும் வெளியிடலாம்.

2. குட்... Blog பகுதியின் கீழேயே Blogs கார்னரின் Linkயை கொடுக்கலாம். இதனால் புதிதாக வருபவர்கள் மற்ற பிளாக்களை படிக்க வருவார்கள்.

3. Blogs கார்னர் பகுதியிலும் வகைகளாக பிரித்துக்கொடுத்தால் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும். யாருக்கு எந்த வகை பிடிக்கிறதோ அந்த Blogயை படிக்க அவ்ர்களுக்கு வசதியாக இருக்கும்.

4. யூத்ஃபுல் விகடன் மூலமாக ஒரு பிளாக் எத்தனை முறை படிக்கப்பட்டது என்ற விவரத்தை Blogs கார்னர் பகுதியில் Blogன் அருகிலேயே தெரியுமாரு செய்யலாம். இதனால் பலருக்கு பிடித்த Blog பலரும் படிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திகொடுக்கலாம்.

5. ஒரு மாதத்தில் அதிகமாக யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த வளைபதிவாளரை ஒவ்வொரு மாதமும் கெளரவிக்கலாம்.

உங்களுக்கு தெரிந்த யோசனைகளையும் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.



1 May 2009

டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க

|10 comments
எனது மடிக்கணியில (அதுதாங்க LAPTOP) மொத்தமே 40GB தாங்க.(இப்போ என்கிட்ட இருக்கிற Pen Driveவே 32GB) 6வருடங்களுக்கு முன் வாங்கியது. விலை 40K சொச்சம். (சரி இப்ப அதெல்லாம் எதுக்கு இங்க சொல்ற). அப்படி 40GB இருக்கிற Driveல 5GB இடம் ஒரே கோப்பே இரண்டு இடங்களில் இருந்ததால் நிரப்பியுள்ளது. முக்கியமாக MP3 ஆடியோ மற்றும் Image கோப்புகளே.

அதாவது நன்பன் ஒருவன் புதிய பாடல்கள் அடங்கிய MP3 DVD வாங்கிட்டு வந்துருப்பான். அதில் உள்ள பாட்டுகள் சிலவட்றை ஒரு Folderல் Copy செய்து வத்திருப்பேன். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய MP3 DVD கிடைக்கும். மீண்டும் Copy வேறு ஒரு Folderல். இப்படியே சில பாடல்கள் இரண்டு முறை Copy செய்யப்பட்டிருக்கும். அதே போல தான் சில புகைப்படங்களும். நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட டூப்ளிகட் கோப்புகளை கண்டுறிந்து அழிக்க ஏதாவது மென்பொருள் கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இது போல உங்கள் கணினியிலும் கண்டிப்பாக நூற்றுக்கணக்கான ஏன் சில கணினிகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் கூட இருக்கலாம்.

தற்செயலாக கண்ணில் சிக்கியதுதான் இந்த Duplicate Cleaner மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள் என்பது மேலும் சிறப்பு. இதில் நீங்கள் எந்த கோப்புகளை மட்டும் தேட வேண்டும் என்று குறிப்பிடலாம். உதாரணமாக Image File மட்டும் தேட வேண்டும் என்றாலோ அல்லது ஆடியோ கோப்புகளை மட்டும் தேட்ட வேண்டும் என்றாலோ அதற்கு தனியாக Options உள்ளன. இது கண்டுபிடித்து கொடுக்கும் Duplicate புகைப்பட கோப்புகளை அழிப்பதற்கு முன்னால் அதை Preview பார்க்கும் வசதி உள்ளது.

Duplicate Cleaner பதிவிறக்க

இங்கு கண்டிப்பாக கிளிக்க வேண்டாம்


28 April 2009

Gtalkல் ஒளிந்துகொள்ள

|5 comments
ஏற்கனவே Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு பதிவில் பார்த்தோம். இப்போது Gtalkல் எப்படி ஒளிந்துகொள்வது என்று பார்ப்போம். Gmailல் தான் Invisible Mode உள்ளது. அதுவும் சமீபத்தில்தான் அதையும் கொண்டுவந்தார்கள். இன்னும் Gtalkல் அந்த வசதி கொண்டுவரவில்லை.

Gtalkல் invisible mode வசதியை பெற நீங்கள் GTalk Labs Edition பதிவிறக்க வேண்டும். அதை இங்கு பதிவிறக்கலாம். உங்கள் பழைய GTalk தனியாகவும் GTalk Labs Edition தனியாகவும் இருக்கும். GTalk Labs Editionல் Invisible mode மட்டும் தான் உள்ளது தவிற மற்றபடி உங்களுக்கு Gtalkல் கிடைக்கும் வசதிகளான Voice chat கிடைக்கவில்லை.



இந்த கவலையை போக்கவும் ஒரு மென் பொருள் உள்ளது. (அப்புறம் ஏண்டா அதை சொல்லை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது) அதில் நீங்கள் முழுவதும் ஒழிந்துகொள்ள முடியாது. என்ன புரியவில்லையா??? அதில் எப்போதுமே Idelயாக இருக்கலாம். அதை நீங்கள் GTalkலேயே பயன் படுத்தலாம். அந்த மென்பொருளின் அளவும் வெறும் KBகளில் மட்டுமே. மிகவும் பயனுள்ளது. இங்கு அந்த மென்பொருளை பதிவிறக்கலாம்.




நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை
இதையாவது கிளிகுங்கள்

24 April 2009

Tamilishற்கு சில யோசனைகள்

|20 comments
இன்றைய தமிழ் வலைபதிவர்களின் உலகில் தமிழிஷ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தெரியாதவர்கள் இங்கு கிளிக்கி தெரிந்துகொள்ளாம் ஏற்கனவே என் முந்தைய பதிவில் தமிழிஷ் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படி ஒரு வலைதளம் இல்லை என்றால் இன்றைய வலைபதிவர்கள் பலர் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்திருக்ககூடும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல சேவையை தமிழிஷ் வழங்கிவருகிறது. இந்த சேவயை இன்னும் எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று எதோ எனக்கு தெரிந்த சில யோசனைகளை இந்த பதிவின் மூலம் தெரிவிக்கிறேன். நீங்களும் உங்கள் யோசனைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

1. தமிழிஷ்ன் முதல் பக்கத்தில் பிரபலமான அதாவது அதிக வாக்குகள் பெற்ற இடுக்ககளை 12மட்டுமே இப்போது காண்பிக்கப்படுகிறது. அதை 20 அல்லது 25 ஆக உயர்தலாம்.

2. தமிழிஷ்ல் பெரும்பாலும் தற்போது பிளாகுக்ளே(Blogs) பகிரப்பட்டு வருகிறது. அதானால் தமிழ்மணத்தில் உள்ளது போல Feedயை பயன்படுத்தி தானாகவே பகிரும் வசதியையும் கொடுக்கலாம்.

3. ஒரு இடுக்கயை Submit செய்யும் போது தானாகவே அந்த இடுக்கைக்கான தலைப்பை மற்றும் அந்த இடுக்கையின் முதலில் உள்ள சில வரிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தால். இதனால் சுலபமாக இரண்டு கிளிக்கில் ஒரு புது இடுக்கையை Submit செய்யலாம். (No Typing Required)

4. தமிழ்மணத்தில் உள்ளது போல அதிக வாக்குகள் பெரும் வலைபதிவருக்கு நட்சத்திர பதிவராக அறிமுகம்செய்து கௌரவிக்கலாம்.

5. Bloggerயை தவிற Wordpress போன்றவற்றிக்கும் வோட்டளிப்பு பட்டையை வசதியை கொடுக்கலாம்.

இப்போதைக்கு என் மனதில் தோன்றிய சில யோசனைகளை கூறியுள்ளேன். உங்களுக்கு இது போல தோன்றினால் பின்னூட்டத்தில் அவசியம் கொடுக்கவும்.

16 April 2009

விண்டோஸ் 7 இலவசமாக வாழ்நாள் முழுவதும்

|12 comments
பெரும்பாலானோர் இப்போது விண்டோஸ் விஸ்டா பயன்படுத்த தொடங்கிவிடனர். சிலர் இப்போதுதான் பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள் சிலர் இன்னும் விண்டோஸ் XPயை தான் பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இன்னமும் நம் ஊரில் DTP வேலைக்காக விண்டோஸ் 98 பயன்படுத்துவது உண்டு! அவர்களை கேட்டால் விண்டோஸ் 98 போல சுலபமாக எதுவும் இல்லை என்பார்கள். இன்னும் சிலர் இரண்டும் வைத்திருப்பார்கள்.

அது போல விண்டோஸ் XP இப்போது நிறைய பேர் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். XPயை பழைய கணினியிலும் நிறுவலாம். ஆனால் விண்டோஸ் Vista அல்லது இனிமேல் வரும் விண்டோஸ் 7 யை நிறுவ நீங்கள் புதுக்கணியைதான் வாங்கவேண்டும்.

விண்டோஸ் Vistaவை நிறுவ உங்கள் கணினியில் இருக்க வேண்டியவைகளை இங்கு தெரிந்துகொள்ளாம். விண்டோஸ் 7 உங்கள் கணினியில் நிறுவ நிச்சயம் விண்டோஸ் Vistaவின் கணினி தேவையை விட உங்கள் கணினியில் செயல்பாடு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.

எண்னோட கணினியில Vistவே நிறுவ முடியல இதுல 7 வேறயா என்று புலம்புவது தெரிகிறது. கவலைய விடுங்க... உங்கள் விண்டோஸ் XPயை அப்படியே விண்டோஸ் 7 ஆக மாற்றக்கூடிய மென்பொருள்தான் Seven Remix XP. இதை உங்கள் XP கணினியில நிறுவிட்டீங்கனா போதும். உங்கள் கணினியே அழகாகும்.

Download Seven Remix XP

5 April 2009

உங்கள் Blogன் மதிப்பு...

|11 comments
நேற்று இரவு தூக்கம் வரவில்லை சரி நமக்கு தான் இணையம் இருக்கிறேதே என்று வழக்கம்போல் எனது வேலையை தொடங்கினேன். நமது சர்க்கரை வலைப்பதிவின் Templateயை பார்த்து எனது நாக்கில் எச்சி ஊரியது ( இத எல்லாமா எழுதுவ?). சரி நானும் எனது Blogன் Templateயை மாற்றுவோம் என்று நினைத்து( அங்க ஆரம்பித்தது தான் வினை) பல Blog Templateயை பதிவிறக்கினேன். அப்படி மாற்றும் போது கடைசியாக உள்ள எனது Templateன் HTML Code பதிவிறக்காமால் விட்டுவிட்டேன். நேற்று இரவு முழுவதும் எனது வலைப்பதிவு பலவித மாடல்களில் வலம் வந்தது... ( ஏதோ பல மாடல் கார் வந்த மாரி சொல்ர!) எந்த Templateம் எனது Blogல் உள்ள Widgetகளுக்கு பொருத்தமாக இல்லை. நேரம் நள்ளிரவு தாண்டியது இனிமேலும் இணையத்தில் இருந்தால் நல்லதல்ல (யாருக்கு?) என்று எதோ ஒரு Templateயை செட் செய்து தூங்க்கப்போனேன். அப்போது தான் நினைத்தேன் டேய் அந்த சர்க்கரை பதிவை எழுதுர நண்பர் சுரேஷ் ஒரு மென்பொருள் வல்லுனர் நீ ஒரு கட்டிட பொரியாளர் உனக்கு எதுக்குடா அவரோட Templateயை பார்த்து எச்சி ஊரனும். எந்த அளவுக்கு நீ Blog Design பன்னதே பெரிய விஷயம் இருக்குர Template யே போதும்ன்னு நினைச்சேன். காலையில் ஒரு வழியாக எனது Blog Template designயை கொண்டுவந்து விட்டேன். அதன் விளைவாகத்தான் இந்த பதிவு.

(என்னாட இவன் தலைப்பை பத்தி சொல்லாம இப்படி சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ரானேன்னு பார்க்குறேங்களா?? அட விகடன், குமுதம் அதில் எல்லாம் இப்படிதான் தலைப்பை பற்றி கடைசியாகத்தான் வரும்.)

இப்படி இணையைதில் தேடும் போது கிடைத்ததுதான் இந்த பக்கத்தில் வலதுபுறம் பார்க்கும் எனது Blogன் விலை. இந்த Blog ன் மதிப்பு $564.54. சந்தோசமாக இருந்தது. நீங்களும் உங்களின் Blogன் மதிப்பை தெரிந்துகொள்ள கிளிக்குங்கள். இதெல்லாம் சரி இந்த ரேட்க்கு இந்த Blogயை வாங்க யாராவது இருந்தா தெரிவிக்கவும்

19 January 2009

மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில்

|4 comments
இதை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கைபேசியில் காதல் டிப்ஸ்களுக்கு LOVE என டைப் செய்து ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பசொல்லி SMS வரலாம் அதற்கு வெறும் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். இவை காதலுக்கு மட்டும் இல்லை இது போல தினசரி உங்களுக்கு SMS மூலம் உங்கள் கைபேசிக்கு வரும் தகவல்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு வகை செய்திக்கும் நீங்கள் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கைபேசி பில் ஏகிறிவிடும்.


இந்த அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக www.mytoday.com என்ற முகவரியில் உங்களுது கைபேசி எண்ணை பதிந்துவிட்டால் போதும். நீங்கள் விரும்பும் சேவையை இலவசமாக பெறலாம்.


என்னடா தலைப்பை பற்றி எழுதாமல் என்னமோ சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறான் என்று நினைக்கிறீர்களா??? இது ஒரு இலவச சேவை அதனால் இந்த தலைப்பில் இந்த செய்தி இலவசமாக.


மேலே சொன்ன அதே www.mytoday.com வலைத்தளம் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்களை உடனுக்குடன் உங்கள் கைபேசிக்கு SMS மூலம் தகவல் அனுப்புகிறது. இந்த சேவையை www.m3m.in வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது.


அப்பாடா இனிமேல் நீங்கள் எதிர்பார்க்கும் மின் அஞ்சல் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வந்துள்ளதா என்று இணைய வசதி இல்லாதோர் பிரௌசிங் சென்டர் தேடி உங்கள் பணத்தை செலவிட அவசியம் இல்லை.


இதற்கு www.m3m.in என்ற முகவரியில் உங்களை மின் அஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் பதிவு செய்யவும். உடனே உங்கள் கைப்பேசி எண்ணிற்கு கடவு சொல் அனுப்பிவைக்கப்படும். உடனடியாக உங்கள் கைப்பேசிற்கு ஒரு மின் அஞ்சல் முகவரி தரப்படும். அது உங்கள் கைப்பேசி எண்ணை ஒட்டியே இருக்கும். உதாரணமாக உங்கள் கைப்பேசி எண் 9842112345 என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் மின் அஞ்சல் முகவரி 919842112345@m3m.in என்று இருக்கும்.


இந்த மின் அஞ்சல் முகவரிக்கு(919842112345@m3m.in) உங்கள் மின் அஞ்சல்களின் பிரதிகளை (Copy) Forward செய்யுமாறு உங்கள் மின் அஞ்சலில்(name@gmail.com) செட் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கைப்பேசியில் உடனுக்குடன் வந்துவிடும்.


ஆனால் இந்த சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக. ஒரு வருடம் கழித்து வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். பிறகு பார்த்துக்கொல்லாம்.


மேலே உள்ள இரண்டு சேவைகளும் இந்தியாவில் உள்ள கைப்பேசி எண்ணிற்கு மட்டுமே. NRIகள் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்த நீங்கள் இந்தியா வரும் போது ஒரு Lifetime கார்டையும் ஒரு Second hand or குறைந்த விலை கைப்பேசியையும் வாங்கிகொண்டு சென்றால் உங்களுக்கு பயன் தரும். (ரோமிங்க்கில் இன்கம்மிங் SMS இலவசம்)

3 October 2008

MS OFFICE கோப்புகளை எளிதாக PDFயாக மாற்றலாம்

|5 comments
சில பதிவுகளுக்கு முன்பு சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை உங்களுக்காக PDF வடிவில் கொடுத்திருந்தேன். அதை எப்படி PDF வடிவில் மாற்றினீர்கள் என பலரும் கேட்டார்கள். நான் PDFஆக மாற்றியது ஒரு மென்பொருளை கொண்டு ஆனால் இப்போது மிகவும் சுலபமாக Microsoft plug in கொண்டு PDFஆக மாற்றலாம்.

இந்த Plug in யை நிறுவியவுடன் Save As மெனுவில் புதியதாக “Save as PDF or XPS” என்று ஒரு option இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் Microsoft Office கோப்பயை திறக்கவும் Save As PDF மூலம் எளிதாக நீங்கள் விரும்பும் படி மாற்றலாம்.

இந்த Plug in Microsoft Office Access 2007, Microsoft Office Excel 2007, Microsoft Office InfoPath 2007, Microsoft Office OneNote 2007, Microsoft Office PowerPoint 2007, Microsoft Office Publisher 2007, Microsoft Office Visio 2007, Microsoft Office Word 2007 ஆகிய மென்பொருட்களில் வேலை செய்யும்.

Download Microsoft Office Save As PDF or XPS Plug in

நீங்கள் Microsoft Office 2007 யை பயன் படுத்தவில்லையா???

உங்களுக்காகத்தான் இந்த மென்பொருள்

4 August 2008

PC Tools Spyware மென்பொருள் இலவசமாக...

|0 comments
WestPac Banking Corporation என்ற நிறுவனம் நமக்காக PC Tools Spyware Doctor, Privacy Guardian and Firewall Plus ஆகிய வைரஸை அழிக்கும் மென்பொருளை ஒரு வருடம் இலவசமாக வழங்குகிறது. PC Tools Spyware Doctor என்பது ஒரு மிகசிறந்த வைரஸை அழிக்கும் மென்பொருட்களில் ஒன்றாகும். இந்த மென்பொருளை ஒருவருடத்திற்க்கு இலவசமாக பெற கீழ்கண்டவற்றை செய்தால் போதும்.

1.இந்த வளைத்தளத்திற்க்கு செல்லவும்.

2."Download security software - Free for the first 12 months" என்ற லின்கை கிளிக்கினால் அது செல்லும் பக்கத்தில் உங்களுக்கு காட்டும் மூன்று இலவச மென்பொருட்களையும் செலெக்ட் செய்து, Signup செய்யவும்.

3. உடனே உங்களுக்கு ஒரு அந்த மூன்று இலவச மென்பொருளின் லின்க்ஸும் மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


இதன் மூலம் உங்களுடைய கணினியை ஒரு வருடத்திற்க்கு இலவசமாக வைரஸ் இல்லாமல் பாதுகாக்கலாம்.

1 August 2008

Vista டிப்ஸ் மற்றும் டிரிக்குகள் இலவசமாக

|2 comments
Microsoft நிறுவனம் தனது Vistaவை பயன் படுத்துபவர்களுக்காக இலவசமாக சில டிப்ஸ் மற்றும் டிரிக்குகளை வழங்குகிறது. அதை PDF வடிவில் பெற இங்கு கிளிக்குங்கள். நீங்கள் USAவில் வசிப்பவரானால் உங்களுக்கு அதை காகித வடிவிலும் உங்களுடைய முகவரிக்கு அனுப்பிவைக்கிறார்கள். அதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அது முற்றிலும் இலவசம் தான் ஆனால் அதற்க்கு கூரியர் தொகை மட்டும் செலுத்தவேண்டும். Vistaவை பயன்படுத்துபவர்கள் இந்த புத்தகத்தை கட்டாயமாக் படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த புத்தகம் Windows Vistaவை பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் மேலும் பல விஷயங்களை Windows Vistaவை பற்றி அறிந்துகொள்ளாம்

PDFவடிவில் புத்தகத்தை பதிவிறக்க

அல்லது
பேப்பர்வடிவில் புத்தகத்தை பெற (USA Only)


குறிப்பு: படத்திற்க்கும் பதிவிற்க்கும் சம்மந்தமில்லை

26 July 2008

பல வளைத்தளத்தில் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் செய்ய

|0 comments
நமக்கு பிடித்த மென்பொருள், MP3 பாடல்கள், வீடியோ கோப்புகள், கணினி விளையாட்டு மென்பொருட்கள் போன்றவற்றை உலகில் எந்த மூலையில் உள்ளவரும் பயன் படுத்திக்கொள்ள பயன்படுவதுதான் Rapidshare மற்றும் Megaupload போன்ற வளைத்தளங்கள்.


ஆனால் இதில் எந்த வளைத்தளதில் நீங்கள் பதிவேற்றம் செய்ய என்ற குழப்பமாக உள்ளதா??? அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா??? கவலையை விடுங்கள் இரண்டிலும் ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். என்ண ஆச்சரியமாக உள்ளதா??

ஆம் TinyLoad என்ற வளைத்தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் Rapidshare அல்லது/மற்றும் Megauploadல் உங்கள் கோப்புகளை ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். இதில் மிகப் பெரிய வசதி என்னவென்றால் இதில் பதிவு செய்ய அவசியமில்லை.

Go to TinyLoad

22 July 2008

YouTube நகர் படங்களை மென்பொருள் இல்லாமல் பதிவிறக்கலாம்

|2 comments
இப்போதல்லாம் எதற்கெடுத்தாலும் மென்பொருள் வந்து விட்டது. அதை எல்லாவற்றையும் நிறுவ நம் கணினியில் தான் இடமில்லை. கணினியில் நிறுவி தேவையற்ற இடத்தை நிறப்பவும் சிலருக்கு பிடிப்பதில்லை. அனால் நாம் நினைப்பது மென்பொருளில்லாமல் நம் கணினியில் கிடைத்தால் எப்படியிருக்கும்.


இதே போல் தான் மிக விரைவான ஆன்லைன் அகராதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இப்போது YouTube நகர் படங்களை எந்தவித மென்பொருள் இல்லாமல் பதிவிற்க்கலாம். அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த KissYouTube or KeepVid or Vixy தளங்களுக்கு செல்லுங்கள் உங்களுக்கு பிடித்த YouTubeயின் முகவரியை கொடுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த அந்த நகர் படத்தை இப்போது நீங்கள் பதிவிறக்கலாம்.

Vixy.net
Vixy ல் நீங்கள் உங்களுக்கு பிடித்த நகர் படங்களை பல வித Formatல் பதிவிறக்கும் வசதி உள்ளது. YouTube வீடியோ formatலிருந்து AVI/MOV/MP4/MP3/3GP போன்ற formatலிம் பதிவிறக்கலாம்



KissYouTube

இதில் நீங்கள் மிக விரைவாக உங்கள் YouTube வீடியோவை flv formatல் பதிவிறக்கலாம். இதில் YouTube வீடியோவின் முகவரிக்கு முன்னால் kiss சேர்த்து முகவரியை டைப்பினால் போதும். உதாரணமாக YouTubeயின் முகவரி http://www.youtube.com/watch?v=7sn40JvmglE என்றால் http://www.kissyoutube.com/watch?v=7sn40JvmglE என்று டைப்பினால் போதும். அந்த YouTube வீடியாவை flv Formatல் பதிவிறக்கலாம். ஆனால் அந்த வீடியோவை பார்க்க FLV Player தேவை.
அதை இங்கு பதிவிறக்கலாம்

20 July 2008

நிமிடத்திற்கு ஒரு கணினி திரை

|5 comments
நாம் நம் கணினியை ஆன் செய்யதவுடன் நம் கண்களுக்கு இதமாக நம் எண்ணப்படி கணிணி திரையை அமைத்துக்கொள்ள பலருக்கு விருப்பம். ஆனால் தினம் ஒரு திரையை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமம் என்று என்ன வேண்டாம் உங்களுக்காகவே பல மென்பொருட்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலாமானதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகில் படங்களுக்கு பிரபலமான வளைத்தளங்களில் முதல்மையானது Flickr மற்றும் அதற்கு அடுத்தபடியாக Photobucket. Flicker போன்ற சில தளங்களிலிருந்து புதிய படங்களை இந்த மென்பொருள் உடனுக்குடன் உங்கள் கணினி திரைக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. இதில் உள்ள செட்டிங்கள் மூலம் எந்த வளைத் தளதிலிருந்து உங்களுக்கு படங்கள் வேண்டும் எனவும், எத்தனை நிமிடத்திற்கு, மணிநேரத்திற்கு, நாளுக்கு ஒரு முறை உங்கள் கணினி திரை மாற வேண்டுமெனவும் வைத்துக்கொள்ளலாம்.

இதில் உங்கள் தி்ரை ஒரு படம் தெரியும் படியும் பல படங்களின் Thumbnail தெரியும்படியும் வைத்துக் கொள்ளலாம்.

இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட மென் பொருளை இங்கு பதிவிறக்கலாம்

18 July 2008

கைப்பேசி மீது காதல் கொண்டவர்கள் பார்க்கக்கூடாதது

|0 comments
நீங்கள் உங்கள் கைப்பேசியை மீது அதிக அக்கறை வைத்துக்கொள்ள முடியவில்லையா??? இதோ உங்களுக்காகத்தான் இந்த நகர் படம்.