Showing posts with label கலகல. Show all posts
Showing posts with label கலகல. Show all posts

9 April 2009

காதல் கலெக்சன்ஸ்

|2 comments
இப்பெல்லாம் எண்னுடைய நண்பர்கள் பல பேர் பேசாம நானும் அவனை போல லவ் பன்னீர்கலாம் போல என்று ரொம்ப பீல்பண்ணி என்னிடம் சொல்வது உண்டு. இப்போது பெண் கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பு மென்பொருள் வல்லுனர்களை தேடி அலைந்த பெண் வீட்டினர் இப்போது கட்டிட பொரியாளர் மற்றும் மெக்கானிக்கல் பொரியாளர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எது எப்படியோ அவர் அவருக்கென்று என்ன இருக்கிறதோ அது தான்... சரி விஷயத்துக்கு வருவோம்...


பேசாம நானும் லவ் பன்னீர்க்கலாம் என்று நினைப்பவரா நீங்கள் முதலில் காதல்னா என்ன என்று இங்கே தெரிஞ்சுக்கலாம்

காதல்னா என்னானு தெரியும் எப்படி பெண்களை மடக்குவதுனுதானே கேட்குறீங்க??? அதுக்கு பிகர் கரெக்ட் பண்ண இங்கேயும் பெண்கள் மனசை கவர்வது எப்படினு இங்கேயும் தெரிஞ்சுக்கலாம்

சரி பெண்களின் மனசை கவர்ந்து மடக்கியாச்சுப்பா நாளைக்கு ஐ லவ் யூ சொல்லம்னு இருக்கேன் அப்படினு கேட்கிறீக்களா இதை படிச்சுட்டு போங்க

ஐ லவ் யூ எல்லாம் சொல்லாம நான் லெட்டர் மூலமா சொல்லான்னு இருகேனுங்கிறீங்களா அப்படினா இதை படிங்க

அப்படியே ஒரு காதல் கவிதை இருந்தா நல்ல இருக்குமுன்னு நினக்கிறேங்களா??? அப்படினா இதை எழுதுங்க

இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன் அடுத்த பதிவில் பொண்ணு பார்க்க போவதிலிருந்து மணைவியை கவர்வது பற்றி வரை கல்யாண கலெக்சன்ஸ்ல் பார்ப்போம்...

6 July 2008

'எங்கே தேடுவேன்?'

|0 comments
அது ஒரு தேசத்தின் தலைநகரம்.அங்கே ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்தது. வரிசையாகப் பல ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு பகுதியில், கொஞ்சம் வித்தியாசமான ஓவியங்கள் இரண்டு அருகருகே தொங்கின.


வேறொரு தேசத்தில் இருந்து வந்திருந்த பெரிய மனிதர் ஒருவர் அந்த ஓவியங்களைப் பார்த்தார்.

அதில் ஓர் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தார்.

‘‘இது யார்?’’

‘‘இவர்தான் கோரோசோவ்!’’

பெரிய மனிதருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘‘கோரோசோவ்... வா... அப்படின்னா?’’

‘‘இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா... இதுவரை கேள்விப்பட்டதில்லையா?’’ ‘‘இல்லையே...!’’

‘‘இவர் ஒரு பெரிய மேதை!’’

‘‘அப்படியா...?’’

‘‘ஆமாம்... நீராவி எந்திரம், ரயில் இன்ஜின், ரேடியோ, விமானம் எல்லாம் கண்டுபிடித்தவர் இந்த கோரோசோவ்!’’

‘‘ஓ... அப்படியா? சரி... அடுத்த படத்தில் இருப்பவர்?’’ & பெரிய மனிதர் கேட்டார்.

‘‘மஞ்சு கௌங்கி!’’

‘‘இவரது பெருமை என்னவோ?’’

‘‘கோரோசோவைக் கற்பனை செய்து படைத்தவரே இவர்தான்!’’ கேட்டவர் குழம்பிப் போய் வெளியே வந்து விட்டார்.


நண்பர்களே... நம் பெரியவர்கள் ஆண்டவனையும் இப்படித்தான் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். ஓர் உருவத்தைக் காட்டி, ‘இவர்தான் கடவுள். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவர் இவரே!’ என்கிறார்கள்.
‘சரி! இவரைப் படைத்தவர் யார்?’ என்று ஒரு கணம் யோசித்தால், அவர் ஒரு சிற்பியாக இருப்பார் அல்லது ஓவியராக இருப்பார். சரி... அப்படியானால் கடவுளை எப்படிப் பார்ப்பது? எங்கே பார்ப்பது?


இந்தக் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் தெளிவாக பதில் சொல்கிறார்:

‘‘ஆலயத்தில் உள்ள சிலைகளில் கடவுளைப் பார்ப்பவன் பக்தியின் அடிமட்டத்திலேயே நிற்கிறான். அடுத்தவரது துன்பத்தைப் போக்குவதில் கடவுளைப் பார்ப்பவன், ஆகாயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறான்!’’


நன்றி, விகடன்.

28 June 2008

அந்த "வயிறு" யார் தெரியுமா?

|0 comments
ஒரு போட்டி நடந்தது. என்ன போட்டி தெரியுமா? ஒரே மூச்சில் நூறு இட்லிகளைச் சாப்பிட வேண்டும். பல பேர் பாதியிலேயே விலகிக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். இவன் சாப்பிடச் சாப்பிட... இன்னொருவன் ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் ஒரு இட்லிக்கு ஒரு கோடு வீதமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இடமில்லை. அதைப் பற்றி, சாப்பிடுகிறவனுக்குக் கவலை இல்லை. கோடு போடுகிறவனுக்குத்தான் கவலை! சாப்பிடுகிறவன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கோடு போடுகிறவன் கரும்பலகையைக் கவலையோடு பார்த்தான். 99 கோடுகள் போட்டாயிற்று. இன்னொரு கோட்டுக்கு இடமில்லை. யாருக்கும் தெரியாமல் ஏற்கெனவே போட்ட சில கோடுகளை அழித்துவிட்டு... மறுபடியும் தொடர்ந்து போட ஆரம்பித்தான். ‘நூறு இட்லிகள், சாப்பிடும் போட்டி என்பது நூறையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. சாப்பிடுகிறவனைப் பரிதாபமாகப் பார்த்தான் கோடு போடுகிறவன். சாப்பிடுகிறவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனுக்குக் கோடுகளைப் பற்றிக் கவலை இல்லை. ஆகவே, அவன் அண்ணாந்து பார்க்கவே இல்லை. இது கோடு போடுகிறவனுக்கு வசதியாகப் போயிற்று சாமர்த்தியமாக ஒரு கோட்டை அழிப்பது... மறுபடி அதன் மீதே இன்னொரு கோடு போடுவது... இப்படியே சமாளித்துக் கொண்டிருந்தான். அந்த சாப்பாட்டு ராமன், இது தெரியாமல் மதியம் வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கடைசியாக ஒரு கட்டத்தில் அவன் ஏதோ யோசிக்க ஆரம்பித்தான். கோடு போடுகிறவன் கேட்டான்: என்ன யோசிக்கிறே..? நீ செய்யறது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு! நான் ஒழுங்காத்தானே கோடு போட்டுக்கிட்டு வர்றேன்! சாப்பிடுகிறவன் சொன்னான்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... எல்லாக் கோட்டையும் அழிச்சுடு... மறுபடியும் முதல்லேயிருந்து வரலாம்!

நண்பர்களே... அதிர்ச்சியடையாதீர்கள்.


எல்லையில்லாமல் இட்லிகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிற அந்த வயிறு யார் தெரியுமா? அதன் பெயர்: பேராசை!


சா அதி சொல்கிறார்: பேராசைக்காரனுக்கு உலகமெல்லாம் தந்தாலும்கூட பசி தீராது. மனத் திருப்தியுள்ளவனுக்கு ஒரு துண்டு ரொட்டியே போதுமானது!