30 July 2008

கைபேசியில் உங்கள் வளைத்தளம்...

|0 comments
உலகம் போகும் வேகத்திற்க்கு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். அதனால் தான் எனது வலைப்பக்கத்தை இனி உங்கள் ஐபோனிலும் படிக்கலாம். எனது கைப்பேசி வளைப்பதிவின் முகவரி http://kricons.mofuse.mobi. துரதிஷ்டவசமாக S40 ஜாவா மற்றும் S60 சிம்பையன் தொழிநுட்பம் பயன் படுத்தப்பட்ட கைப்பேசிகளில் எந்த யுனிகோட் எழுத்துக்களும் தெரிவதில்லை. வெறும் சிரு சிரு கட்டங்களாக தெரியும். அனால் ஐ-போன் மற்றும் Windows கைப்பேசியில் எனது பதிவை அழகாக படிக்கலாம். Windows கைபேசியை பயன்படுத்துபவர்கள் தமிழ் யுனிகோட் எழுத்து தெரிய இந்த பக்கத்தில் செல்லலாம்.


சரி நீங்கள் பிளாக்யை கைப்பேசி பதிவை செய்துவிட்டீர்கள்!!!. நான் எப்படி செய்வது என்று கேட்பது புரிகிறது. இதோ வழி.
இந்த தளத்திற்க்கு செல்லுங்கள். உங்களுக்கான ஒரு கணக்கை துவங்க்குங்கள். உங்கள் கைப்பேசி தளத்திற்க்கான் பெயரை தேர்ந்தெடுங்கள். உங்கள் வளைத்தளத்தின் RSS முகவரியை டைப்பிடுங்கள். அவ்வளவு தான் உங்கள் பிளாகிற்க்கான் கைபேசி வளைத்தளம் ரெடி. நிங்கள் USAவில் இருந்தால் கைப்பேசியில் SMS மூலமாக உங்களுக்கு கைப்பேசி வளைத்தளதிற்க்கான் Linkயை அனுப்புகிறார்கள். வரைவில் அனைத்து நாடுகளிலும் எதிர்பார்க்கலாம்.

28 July 2008

உலகின் மிக வேகமான பி்ரெளசர்

|5 comments

உலகின் மிக வேகமான பிரெளசரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது apple நிறுவனத்தின் மென்பொருள். இதில் உங்கள் கணினியில் நிறுவினால் உங்கள் கணினியே அழகாகிறது. நீங்கள் பார்க்கும் வளைத்தளத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் மிக அழகாக தெரிகின்றன. குறிப்பாக யுனிகோட் எழுத்துக்கள் மிகவும் அழகாக தெரிகின்றன. (Firefoxல் கொஞ்சம் அசிங்கம்தான்)


இதில் உள்ள மிகப்பெரிய பிளஸ், இதில் ஒரு வளைத்தளம் safari பழைய வெர்சனில், Internet Explorerரில், Fier Foxல் மற்றும் ஐ-போனில் எவ்வாறு தெரியும் என்றும் சில Settingகளை வைத்துப் பார்க்கலாம்


இதில் மிகப்பெரிய மைனஸ் இதில் ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்யும் போது Firefoxயை போல Pause வசதி இல்லை. அது போன்ற சில சில மற்றங்களை செய்த்தால் நிச்சயம் இந்த Safari அந்த Firefoxயை மிஞ்சும்.

Download Safari

இதில் உள்ள  இருந்த ஹாக்(HACK). இந்த ஹாக் இப்போது வேலை செய்யவில்லை. அனால் சில இலவச பத்திரிக்கைகளை இதில் படிக்கலாம். அந்த ஹாக் தெரிந்தவர்கள் கூறலாம்.

உலகின் பிரபலமான நாளிதழ்கள் PC Magazine, MIT Technology Review, Popular Mechanics, MacWorld, Lonely Planet, Reader’s Digest, etc  போன்றவற்றை எப்படி இலவசமாக படிப்பது என்று உங்களுக்கு சொல்கிறேன். மேலும் இதில் உள்ள High-resolution படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கலாம்.

எப்படி??? 


சஃபாரி பிரொளசரை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு  go to Edit -> Preferences -> Advanced and check the option that says "Show Develop menu in menu bar."

பிறகு Developயை கிளிக் செய்து User Agentல் Mobile Safari 1.1.3 - iPhoneயை செலெக்ட் செய்யவும்.

அவ்வளவுதான் உங்கள் சஃபாரியிலிரு்ந்து zinio.com/iphone திறக்கவும். பிறகு உங்களுக்கு பிடித்த நாளிதழ்களை இலவசமாக படிக்கலாம்

26 July 2008

பல வளைத்தளத்தில் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் செய்ய

|0 comments
நமக்கு பிடித்த மென்பொருள், MP3 பாடல்கள், வீடியோ கோப்புகள், கணினி விளையாட்டு மென்பொருட்கள் போன்றவற்றை உலகில் எந்த மூலையில் உள்ளவரும் பயன் படுத்திக்கொள்ள பயன்படுவதுதான் Rapidshare மற்றும் Megaupload போன்ற வளைத்தளங்கள்.


ஆனால் இதில் எந்த வளைத்தளதில் நீங்கள் பதிவேற்றம் செய்ய என்ற குழப்பமாக உள்ளதா??? அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா??? கவலையை விடுங்கள் இரண்டிலும் ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். என்ண ஆச்சரியமாக உள்ளதா??

ஆம் TinyLoad என்ற வளைத்தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் Rapidshare அல்லது/மற்றும் Megauploadல் உங்கள் கோப்புகளை ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். இதில் மிகப் பெரிய வசதி என்னவென்றால் இதில் பதிவு செய்ய அவசியமில்லை.

Go to TinyLoad

24 July 2008

வி‌ண்வெ‌ளி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய அணுகவு‌ம்

|0 comments

உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனா‌ல் ‌திருமண‌ம் நட‌ப்பது இ‌ன்றோ அடு‌த்த மாதமோ அ‌ல்ல 2011‌ல்.

2011‌‌ம் ஆ‌ண்‌டி‌ல் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்‌கிறது அ‌ந்த ‌விள‌ம்பர தகவ‌ல்.

இ‌ங்கேயே ஒரு ‌திருமண‌த்‌தி‌ற்கு ல‌ட்ச‌க்கண‌க்‌கி‌ல் செலவு செ‌ய்‌‌கிறோ‌ம். விண்வெளி‌யி‌ல் எ‌ன்றா‌‌ல்!!!! கட்டணம் எவ்வளவு இரு‌க்கு‌ம்? ரொ‌ம்ப ஒ‌ன்று‌ம் அ‌திக‌ம் இ‌ல்லை வெறு‌ம் ரூ.10 கோடிதா‌ன். 10 கோடி கொடு‌த்து ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் ஜோடி‌‌க்கு விண்வெளியில் சிறிய விண்வெளி ஓடத்தில் திருமணம் இனிதே நடந்தேறும்.

இ‌ந்த 10 கோடி‌யி‌ல் ‌பூ‌மி‌யி‌ல் நட‌க்கு‌ம் ‌திருமண வரவே‌ற்பு, மணம‌க்க‌ளி‌ன் ஆடை, போ‌க்குவர‌த்து செலவு, மணம‌க்களு‌க்கு ‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் பய‌ணி‌ப்பத‌ற்கான 4 நா‌ள் ப‌யி‌ற்‌சி‌க் க‌ட்டணமு‌ம் அ‌ட‌ங்கு‌ம்.

மணமக்களுடன் ‌திருமண‌ம் நட‌த்‌தி வை‌க்க அ‌ய்யரோ அ‌ல்லது பா‌தி‌ரியாரோ உட‌ன் செ‌ல்லலா‌ம். அதை‌த் த‌விர மணம‌க்களுட‌ன் மேலு‌ம் 2 பே‌ர் விண்வெளி திருமணத்தில் பங்கேற்கலாம். அதை‌த் த‌விர ‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் நட‌க்கு‌ம் ‌திருமண‌ம் பூ‌மி‌யி‌ல் நேரடியாக ஒ‌ளிபர‌ப்பு‌‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம்.

திருமணச் சடங்குகளில் பெரும்பாலானவற்றை பூமியில் முடித்துக்கொண்டு உச்சகட்டமாக மாலை மாற்றுவது அல்லது நம்ம ஊர்க்காரர்கள் என்றால் தாலி கட்டுவதை விண்வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இ‌ந்த விண்வெளி திருமணத் திட்டத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ராக்கெட் நிறுவனத்துடன் ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜ‌ப்பா‌‌னி‌ன் ‌வி‌ண்வெ‌ளி ‌திருமண‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ப் பா‌ர்‌த்தா‌ல் அடு‌த்தது ‌நில‌விலேயே தே‌னிலவு‌க் கொ‌ண்டாடு‌ம் ‌தி‌ட்ட‌ம் வரு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌மோ...

இந்த வழியாக இந்த பதிவு

22 July 2008

YouTube நகர் படங்களை மென்பொருள் இல்லாமல் பதிவிறக்கலாம்

|2 comments
இப்போதல்லாம் எதற்கெடுத்தாலும் மென்பொருள் வந்து விட்டது. அதை எல்லாவற்றையும் நிறுவ நம் கணினியில் தான் இடமில்லை. கணினியில் நிறுவி தேவையற்ற இடத்தை நிறப்பவும் சிலருக்கு பிடிப்பதில்லை. அனால் நாம் நினைப்பது மென்பொருளில்லாமல் நம் கணினியில் கிடைத்தால் எப்படியிருக்கும்.


இதே போல் தான் மிக விரைவான ஆன்லைன் அகராதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இப்போது YouTube நகர் படங்களை எந்தவித மென்பொருள் இல்லாமல் பதிவிற்க்கலாம். அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த KissYouTube or KeepVid or Vixy தளங்களுக்கு செல்லுங்கள் உங்களுக்கு பிடித்த YouTubeயின் முகவரியை கொடுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த அந்த நகர் படத்தை இப்போது நீங்கள் பதிவிறக்கலாம்.

Vixy.net
Vixy ல் நீங்கள் உங்களுக்கு பிடித்த நகர் படங்களை பல வித Formatல் பதிவிறக்கும் வசதி உள்ளது. YouTube வீடியோ formatலிருந்து AVI/MOV/MP4/MP3/3GP போன்ற formatலிம் பதிவிறக்கலாம்



KissYouTube

இதில் நீங்கள் மிக விரைவாக உங்கள் YouTube வீடியோவை flv formatல் பதிவிறக்கலாம். இதில் YouTube வீடியோவின் முகவரிக்கு முன்னால் kiss சேர்த்து முகவரியை டைப்பினால் போதும். உதாரணமாக YouTubeயின் முகவரி http://www.youtube.com/watch?v=7sn40JvmglE என்றால் http://www.kissyoutube.com/watch?v=7sn40JvmglE என்று டைப்பினால் போதும். அந்த YouTube வீடியாவை flv Formatல் பதிவிறக்கலாம். ஆனால் அந்த வீடியோவை பார்க்க FLV Player தேவை.
அதை இங்கு பதிவிறக்கலாம்

20 July 2008

நிமிடத்திற்கு ஒரு கணினி திரை

|5 comments
நாம் நம் கணினியை ஆன் செய்யதவுடன் நம் கண்களுக்கு இதமாக நம் எண்ணப்படி கணிணி திரையை அமைத்துக்கொள்ள பலருக்கு விருப்பம். ஆனால் தினம் ஒரு திரையை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமம் என்று என்ன வேண்டாம் உங்களுக்காகவே பல மென்பொருட்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலாமானதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகில் படங்களுக்கு பிரபலமான வளைத்தளங்களில் முதல்மையானது Flickr மற்றும் அதற்கு அடுத்தபடியாக Photobucket. Flicker போன்ற சில தளங்களிலிருந்து புதிய படங்களை இந்த மென்பொருள் உடனுக்குடன் உங்கள் கணினி திரைக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. இதில் உள்ள செட்டிங்கள் மூலம் எந்த வளைத் தளதிலிருந்து உங்களுக்கு படங்கள் வேண்டும் எனவும், எத்தனை நிமிடத்திற்கு, மணிநேரத்திற்கு, நாளுக்கு ஒரு முறை உங்கள் கணினி திரை மாற வேண்டுமெனவும் வைத்துக்கொள்ளலாம்.

இதில் உங்கள் தி்ரை ஒரு படம் தெரியும் படியும் பல படங்களின் Thumbnail தெரியும்படியும் வைத்துக் கொள்ளலாம்.

இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட மென் பொருளை இங்கு பதிவிறக்கலாம்

18 July 2008

கைப்பேசி மீது காதல் கொண்டவர்கள் பார்க்கக்கூடாதது

|0 comments
நீங்கள் உங்கள் கைப்பேசியை மீது அதிக அக்கறை வைத்துக்கொள்ள முடியவில்லையா??? இதோ உங்களுக்காகத்தான் இந்த நகர் படம்.


16 July 2008

உங்கள் பயர்பாக்ஸில் கட்டாயம் இருக்க வேண்டியவை

|3 comments


நீங்கள் இப்போதுதான் பயர்பாக்ஸ் பிரெளசரை பயன்படுத்துகிறேர்களா??? நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.


இல்லையென்றால் பயர்பாக்ஸ் பிரெளசரை இங்கு இலவசமாக பதிவிறக்கலாம்.


இப்போது உலகின் மிகவும் சிறப்பான பிரெளசரில் குறிப்பிடத்தக்கது பயர்பாக்ஸ். சில தினங்களுக்கு முன்பு இந்த மென்பொருள் நிறுவனம் மென்பொருள் பதிவிறக்கத்தில் கின்னஸ் சாதணை எல்லாம் நிகழ்த்தியது. சரி விஷயத்திற்க்கு வருவோம். இந்த பயர்பாக்ஸ் பிரெளசரில் அனைவரையும் கவர்ந்த விஷயம் plug-insதான். ஆயிரக்கணக்கான plug-insல் உள்ளன.


முக்கியமான ஐந்து Plug-insகள் மட்டும் இதோ உங்களுக்காக.


1.IETab
நீங்கள் Internet Explorerயை விரும்பினாலும் வெறுத்தாலும் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. துரதிஷ்டவசமாக சில வளைத்தளங்கள் அதில் மட்டும் தான் ஒழுங்காய் தெரியும். அதற்க்கான தீர்வு தான் இந்த plug-ins. பயர்பாக்ஸில் ஒரு வளைத்த்ளம் சரியாக தெரியவில்லை என்றால் Statusbarல் ஒருசிறிய ஐக்கான் இருக்கும் அதை கிளிக்கினால் பயர்பாக்ஸ் தானகவே அது Internet Explorerல் அந்த வளைத்தளம் எவ்வாறு தெரியுமோ அதை பயர்பாக்ஸிலேயே பார்க்கலாம்


2. Autocopy
நீங்கள் செலக்ட் செய்த TEXTடுகளை உடனடியாக கிளிப்போர்டில் காப்பி செய்து நீங்கள் Mouseன் மிடில் பட்டனை அழுத்தும் போது Pasteசெய்கிறது. இதனால் Ctrl + C & Ctrl + V போன்ற தேவையற்ற கீபோர்டு சாட்கட்கள் தேவையில்லை.


3.GMailManager
நீங்கள் GMailலில் கணக்கு வைத்துள்ளிர்களா நிச்சயம் உங்களுக்கு இந்த plug-ins மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதில்
• ஒரே ஒரு கிளிக்கில் நிறைய GMail கணக்குகளை Login செய்யலம்
• ஒரே ஒரு கிளிக்கில் உங்களுடைய GMailன் Inboxயை ஓப்பன் செய்யலாம்
• உங்களுக்கு வந்த கடைசி 10மெயில்களை பட்டியலிடுகிறது.
• புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு அலார்ட் செய்கிறது
• வேண்டுமென்றால் புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு ஒலி அலார்ட் செய்கிறது


4.Fireuploader
Flickr, Google Picasa Albums, YouTube, Facebook and Box.net. போன்ற தளங்களில் உங்களுடைய Fileகளை Upload விரைவாக செய்யலாம்.


5.Piclens
இணையதில் நீங்கள் தேடும் படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.


Quick links to download and install the plug-ins


1. Download IETab
2. Download Autocopy
3. Download GMailManager
4. Download Fireuploader
5. Download Piclens

14 July 2008

விரைவாக அதிக கோப்புகளை பெயர் மாற்றம் செய்ய சுலபமான வழி

|2 comments

டிஜிட்டல் கேமிராவால் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும் போது அந்த கோப்பின் பெயர் Image048.jpg, Image049 etc., இப்படிததான் இருக்கும் அதனால் அந்த கோப்பின் பெயரை வைத்துக்கொண்டு எந்த ஒரு உருப்படியான தகவலையும் நம்மால் பெறமுடியாது.


ஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய அந்த கோப்பினை செலக்ட் செய்துகொண்டு F2 கீயை அழுத்தி அல்லது Right கிளிக் Renameயை செலக்ட் செய்து அந்த கோப்பின் பெயரை எடிட் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கோப்பாக F2 அழுத்தி பெயர் மாற்றா வேண்டுமானால் அது எவருக்குமே பிடிக்காத காரியம்.


அதனால் தான் அந்த கோப்புகள் அனைத்தயும் உங்களின் அர்த்தமுள்ள பெயர்களாக மாற்ற இதோ ஒரு எழிய வழி.


  1. முதலில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய கோப்புகளை அனைத்தயும் செலக்ட் செய்யவும்.
  2. F2 கீயை அழுத்தவும். உடனே அனைத்து கோப்புகளின் செலக்சனும் மறைந்து முதலில் உள்ள கோப்பு மட்டுமே எடிட் செய்ய முடியும்.
  3. இப்போது உங்களின் விருப்பமான பெயரை அதில் எழுதி (Delhi Visit) Enter பட்டனை தட்டவும்.
  4. அவ்வளவுதான் அந்த முதல் கோப்பு Delhi Visit.jpg என்ற பெயர் மற்றம் செய்யப்பட்டிருக்கும் அதற்க்கு அடுத்தடுத்த கோப்புகள் Delhi Visit(1).jpg, Delhi Visit(3).jpg இப்படியாக மாற்றப்பட்டிருக்கும்.

இந்த சுலபமான வழி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.

12 July 2008

நம்பமுடியாத அதிவேக ஆன்லைன் அகராதி

|0 comments

முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான அகராதி OXFORD Dictionary தான். பிறகு சில மென்பொருட்கள் வந்தன... அனால் அந்த மென்பொருட்களை நிறுவினால் தேவையில்லாத RAM மற்றும் கணினியின் பயன்பாட்டு வேகம் குறைவதால் சிலருக்கு பிடிப்பதில்லை.


அப்படி பட்டவர்களுக்காத்தான் Definr அறிமுகப்படுத்துகிறது நம்பமுடியாத அதிவேக ஆன்லைன் அகராதி. இதில் ஒரு வார்த்தைக்கான அர்த்தம் சராசரியாக 14மைக்ரோசெகன்ட்ஸ் வருகிறது என்று இவர்கள் வாக்குறுதியும் அளிக்கிறார்கள். இவர்கள் Ruby powered by Rails with MySQL செர்வரை பேக்எண்டாக பயன் படுத்துகிறார்கள். மேலும் சராசரியாக அந்த செர்வரில் 10000 வார்த்தைகள் cache மெமரியில் இருப்பதால் உடனுக்குடன் பதில்கள் வருவதாக கூறுகிறார்கள்.


இப்படி அதிவேக ஆன்லைன் அகராதி இருக்க நீங்கள் ஏன் Dictionary.com or Google Search define keywordயை பயன் படுத்தவேண்டும். நான் சொல்வது உண்மையா இல்லையா நீங்களே ஒரு முறை இந்த தளத்தை பார்வையிடயும்.


>> Visit Definr


உலகம் போகும் வேகத்தில் அதற்க்கு இணையாக நாமும் மாறித்தான் ஆகவேண்டும். மாற்றம் ஒன்றே என்றும் மாறாமல் இருப்பது.

10 July 2008

வலைப்பதிவில் வருமானம்

|4 comments

உங்களது வலைப்பகத்தில் Googleலின் AdSense போன்று வேறு சில வருமானம் தரும் விளம்பரங்களை தர விருப்பமா???


இதோ உங்களுக்காகத்தான் இந்த பதிவு
.



Google AdSense என்பது உலகின் மிகப்பெரிய விளம்பர நெட்வொர்க் ஆகும். அதை நமது வலைப்பக்கத்தில் நிறுவினால் நமது வலைப்பக்கத்தில் உள்ள வார்த்தைகளின் மூலம் அது சம்மந்தமாக விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் காட்டும். நமது வலைப்பத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும் கிளிக்கின் எண்ணிக்கையை பொறுத்து அந்த வலைப்பதிவர்க்கு வருமானம் கிடைக்கும்.

இப்போது இது போல வேறு சில விளம்பர நெட்வொர்க் நிறுவனங்கள்.


மேலும் இந்த நிறுவங்கள் மூன்று வகையாக வருமானத்தை தருகின்றனர். அவை
CPA, CPC மற்றும் CPM.

Cost Per Action Ad Networks (CPA)

Cost Per Click Ad Networks (CPN)

Cost Per 1000 Impression Ad Networks (CPM)

8 July 2008

செல்பேசி பயனர்களை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

|0 comments
நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.

தற்போது இந்த எஸ்.எம்.எஸ் பயன்படுத்தி ஹேக்கர்கள் (Hackers), செல்போன் பயனாளர்களை சொந்த நிதி விவரங்களை திரட்டுவது உள்ளிட்ட மோசடி வேலைகளில் கவனம் செலுத்தக் கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளது.

சமீபத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு செல்பேசி பயனாளருக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ல் பிரபல நிறுவனத்தின் மொபைல் பரிசுப் போட்டியில் தங்களுக்கு சுமார் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகையைப் பெற ஒரு சர்வதேச தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு அந்த எஸ்.எம்.எஸ். தெரிவித்தது. முதலில் உற்சாகமடைந்த அந்த நபர், பிறகு யோசித்துப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் எந்தப் பொருளையும் தாம் பயன்படுத்தாத போது எதற்கு இதுபோன்று எஸ்.எம்.எஸ். வருகிறது என்று சந்தேகம் கொண்டார்.

இச்சம்பவம் தற்போது செல்போன் பயனாளர்களை எச்சரிக்க உதவி புரிந்துள்ளது. அதாவது இதுபோன்ற நம்பிக்கையூட்டி செல்போன் வாடிக்கையாளர்களை ஏதாவது எண்ணை தொடர்பு கொள்ளச் செய்து தகவல்களைப் பெற்று கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு மோசடிகளில் ஈடுபடலாம் என்று செக்யூரிட்டி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கார்ட்னர் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுபோன்ற மோசடிகளால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட ஒரு தனி நபர் 1,244 டாலர்கள் வரை நஷ்டமடைகிறார் என்று தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகபட்ச எல்லைகளை தொடவுள்ள நிலையில் இந்த மோசடிகள் கணினித் துறையிலிருந்து செல்போன்களுக்கு மாறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட வடஇந்தியருக்கு வந்த அந்த ஏமாற்று எஸ்.எம்.எஸ். இதற்கு முன்னோடி என்று ஏஷியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லா தலைவர் ரோஹாஸ் நாக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு எண்ணின் தரவுகளை மற்றொரு நபருக்கு தெரிவிப்பது பற்றிய விதிமுறைகள் இந்யாவில் மிக பலவீனமாக இருக்கிறது என்றும் இந்த துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

வரும் காலங்களில் புதுவகை செல்பேசிகள் ஒரு முழு அளவிலான கணினிப் பயன்பாடுகளாகவே மாறும் சூழ்நிலையில் இது போன்ற அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சேவை வழங்குவோரின் உதவியுடன், புதிய விதிமுறைகளையும், கண்டுபிடிப்புத் தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

7 July 2008

ஐடிகாரர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

|5 comments
நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோ ரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.


நன்றி, விகடன்.

6 July 2008

'எங்கே தேடுவேன்?'

|0 comments
அது ஒரு தேசத்தின் தலைநகரம்.அங்கே ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்தது. வரிசையாகப் பல ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு பகுதியில், கொஞ்சம் வித்தியாசமான ஓவியங்கள் இரண்டு அருகருகே தொங்கின.


வேறொரு தேசத்தில் இருந்து வந்திருந்த பெரிய மனிதர் ஒருவர் அந்த ஓவியங்களைப் பார்த்தார்.

அதில் ஓர் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தார்.

‘‘இது யார்?’’

‘‘இவர்தான் கோரோசோவ்!’’

பெரிய மனிதருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘‘கோரோசோவ்... வா... அப்படின்னா?’’

‘‘இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா... இதுவரை கேள்விப்பட்டதில்லையா?’’ ‘‘இல்லையே...!’’

‘‘இவர் ஒரு பெரிய மேதை!’’

‘‘அப்படியா...?’’

‘‘ஆமாம்... நீராவி எந்திரம், ரயில் இன்ஜின், ரேடியோ, விமானம் எல்லாம் கண்டுபிடித்தவர் இந்த கோரோசோவ்!’’

‘‘ஓ... அப்படியா? சரி... அடுத்த படத்தில் இருப்பவர்?’’ & பெரிய மனிதர் கேட்டார்.

‘‘மஞ்சு கௌங்கி!’’

‘‘இவரது பெருமை என்னவோ?’’

‘‘கோரோசோவைக் கற்பனை செய்து படைத்தவரே இவர்தான்!’’ கேட்டவர் குழம்பிப் போய் வெளியே வந்து விட்டார்.


நண்பர்களே... நம் பெரியவர்கள் ஆண்டவனையும் இப்படித்தான் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். ஓர் உருவத்தைக் காட்டி, ‘இவர்தான் கடவுள். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்தவர் இவரே!’ என்கிறார்கள்.
‘சரி! இவரைப் படைத்தவர் யார்?’ என்று ஒரு கணம் யோசித்தால், அவர் ஒரு சிற்பியாக இருப்பார் அல்லது ஓவியராக இருப்பார். சரி... அப்படியானால் கடவுளை எப்படிப் பார்ப்பது? எங்கே பார்ப்பது?


இந்தக் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் தெளிவாக பதில் சொல்கிறார்:

‘‘ஆலயத்தில் உள்ள சிலைகளில் கடவுளைப் பார்ப்பவன் பக்தியின் அடிமட்டத்திலேயே நிற்கிறான். அடுத்தவரது துன்பத்தைப் போக்குவதில் கடவுளைப் பார்ப்பவன், ஆகாயம் அளவுக்கு உயர்ந்து நிற்கிறான்!’’


நன்றி, விகடன்.

4 July 2008

வேகப் பிசாசு!

|0 comments
இந்தியாவில், சூப்பர் பைக்குகளின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. யமஹாவுக்கு அடுத்தபடியாக, இப்போது DUCATIம் சூப்பர் பைக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. DUCATI சூப்பர் பைக்குகளில் பெயர் பெற்றது, 1000 சிசி திறன்கொண்ட 'DUCATI 1098' பைக். இதுவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து இருக்கிறது.


DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,
உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது. 'இந்த பைக்குக்கு, இளம் பெண்களின் லிஃப்ட் தொந்தரவு நிச்சயம் இருக்கும்' என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.



ஸ்டார்ட் பட்டனைத் தட்டியவுடன், கொஞ்சம் தாமதித்துதான் ஸ்டார்ட் ஆகிறது. காரணம், பைக்கினுள் இருக்கும் சென்ஸார்கள், இன்ஜினில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்த பிறகுதான் ஸ்டார்ட்டர் மோட்டாரைச் சுழல அனுமதிக்கிறது. பைக் ஸ்டார்ட் ஆனவுடன் 'கீச்' சத்தம் காதைக் கிழிக்கிறது. சத்ததைக் கேட்டவுடன் தெருநாய்கள் தெறித்து ஓடிவிடும்.



முதல் கியரைத் தட்டியதும் தலையில் 'நங்'கென்று கொட்டியது போல வெறிகொண்டு பறக்கிறது. இந்த பைக்கை, பயபக்தியுடன் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. கிளட்ச்சைப் பிடித்து ஓட்ட உடம்பில் எக்ஸ்ட்ரா சக்தி வேண்டும். 160தீலீஜீ சக்திகொண்ட இந்த வேகப் பிசாசை ஓட்ட 'தில்' நிறைய வேண்டும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.



பிரேக்குகள் பிடித்த நொடியில் நிற்கின்றன. ஆனால், நீண்ட நேரம் ஓட்டினால், இன்ஜின் சூடு கால்களின் தொடை வரை ஏறுகிறது. 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை, வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பைக் ரசிகர்களின் தீராத ஆசை!


நன்றி, விகடன்.

2 July 2008

சுழலும் கட்டடம் - துபாயில் இன்னொரு அதிசயம்!

|3 comments
மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க முடியும்.

உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமான துபாயில், கட்டடக் கலையில் பல்வேறு அற்புதங்கள், சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சாதனையாக சுழலக் கூடிய கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்த கட்டடத்தில் ஒரு சதுர அடி இடம், குறைந்தபட்சம் 6000 திர்ஹாம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தத் திட்டத்திற்கான இயக்குநர் தவ் சிங் கூறுகையில், இக்கடட்டத்திற்கு டைம் பீஸ் பில்டிங் என பெயரிட்டுள்ளோம். சூரியனை அடிப்படையாக வைத்தும், அறிவியல் பூர்வமான கற்பனையின் அடிப்படையிலும் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 நாட்களில் 360 டிகிரி அளவுக்கு இந்த கட்டடம் சுழலும் வகையில் அமையும். இதன் மூலம் இந்த கட்டடத்தில் இடம் பெறும் அனைத்து அலுவலங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் இருக்கும்.

கட்டடம் சுழல்வதை அதில் குடியிருப்போர் உணர முடியாத அளவுக்கு மிக மிக மெதுவான சூழற்சியாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் இதன் கட்டுமானப் பணி தொடங்கி 2010ம் ஆண்டில் முடிவடையும்.

இந்தக் கட்டடத்திற்கான விற்பனை பிரசாரம் டெல்லி, நியூயார்க், பிராக், மாஸ்கோ, ஹாங்காங்கில் நடைபெறும்.

மொத்தம் 80 மாடிகளைக் கொண்ட இந்த சுழலும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் ரூ. 3000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு கட்டடக் கலை நிபுணர் டேவிட் பிஷர் இதை வடிவமைத்துள்ளார் என்றார்.

1 July 2008

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பது எப்படி???

|0 comments
முதலீட்டில் லாபம் கிடைக்க வேண்டுமானால், மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் போடாமல் சரியான துறைகளைத் தேர்வுசெய்து பிரித்துச் செய்யவேண்டும். அப்போதுதான் ஒன்று சரிந்தாலும் மற்றொன்று கைகொடுக்கும். அவ்வாறு ஒரு கலவையாக முதலீடு செய்வதுதான் முதலீட்டுக்கலவை.

அதை எப்படி உருவாக்குவது?

''பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்க குறைந்தபட்சம் 2 முதல் 4 லட்சம் ரூபாய் போதுமானது. இந்தப் பங்கு முதலீட்டுக் கலவையில் குறைந்தபட்சம் 20 முதல் 25 பங்குகளாவது இருக்கவேண்டும். பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்க துறைகளின் அடிப்படையிலே முதலீடுகளை அமைத்துக்கொள்வது நல்லது. துறைகளைப் பொறுத்தவரை நீண்டகாலத்தில் வளர்ச்சி கொண்டவை. ஆனால், எப்போதும் எல்லாத் துறையும் வளர்ச்சியில் இருக்காது. இவை ஒரு சுழற்சியின் அடிப்படையில் மாறிமாறி வரும். முதலீடு செய்யும்போது தற்போது எந்தத் துறைகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது எனப் பார்க்கவேண்டும். அதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யவேண்டும். இது எளிமையாக இருக்கும்.

உதாரணமாக, இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு என்றால், அதனை பத்து துறைகளில் கலந்து முதலீடு செய்யலாம். ஒரு நிறுவனப் பங்கில் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு என இருபது பங்குகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்யும் நிறுவனங்கள் அத்துறையில் மிகச்சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களாக இருக்கவேண்டும். சந்தை சரிவின்போது இவற்றின் விலைகளும் சரிந்தாலும், மற்ற பங்குகளைவிட விரைவில் மீண்டும் அதிகரிக்கும்.

அல்லது நிறுவனங்களின் அடிப்படையில் சந்தையில் உள்ள பத்து பெரிய நிறுவனப் பங்குகளில் 50 சதவிகிதம் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 50 சதவிகிதத்தை பி.எஸ்.இ-500 பிரிவில் உள்ள சிறந்த 10 பங்குகள் என பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்கலாம்.

தேர்வு செய்துள்ள நிறுவனப் பங்கு-களின் விலை எப்போது குறைவாக உள்ளதோ, அப்போதுதான் முதலீட்டை துவக்கவேண்டும். கையில் பணம் இருப்பதற்காக அவசரப்பட்டு ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது. பொறுமை அவசியம் தேவை. குறிப்பாக சரியும் சந்தையில் நம்மால் சிறந்த பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்தவகையில் இப்போதுள்ள சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.

ஒரு நிறுவனப் பங்குக்கு பத்தாயிரம் ரூபாய் என்று முடிவாகிவிட்ட நிலையில், அவற்றை ஒரே தவணையில் முதலீடு செய்யக்கூடாது. இந்தத் தொகையை நான்காகப் பிரித்து முதலீடு செய்யவேண்டும். விலை குறைந்து இருக்கும்போது முதலில் 2,500 ரூபாய்க்கு பங்குகளை வாங்கவேண்டும். அதற்கு அடுத்து விலை குறையும்போது அதே நிறுவனப் பங்கில் இரண்டாவது முறையாக 2,500 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்த முறையிலேயே மீதமுள்ள பணத்தையும் 2,500 ரூபாய் ஆகப் பிரித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்துவர வேண்டும். இது ஒரு நிறுவனப் பங்குக்கான முதலீட்டு முறை. இது போலவே மொத்தம் இருபது பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் பங்குக் கலவை ஒன்றை உருவாக்க ஆறு மாதம் முதல் பன்னிரண்டு மாதம் வரை பிடிக்கும்.

இவ்வாறு உருவாக்கிய பங்குக் கலவையை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது கிடைக்கும் லாபத்தை அதிகப்படுத்துவதற்கான காலம். இதற்கிடையில் சந்தையின் புள்ளிகள் சரியலாம், உயரலாம். பங்குக் கலவை மூலம் ஆண்-டுக்கு சராசரியாக 25 முதல் 30% வருமானத்தை எதிர்பார்க்கலாம்'' என்ற பிரபாகர் பங்குகளை விற்பதற்கான தருணம் பற்றியும் சொன்னார்.

''முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள் என்றாலும் விற்பதற்காக அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வருமானம் இடைப்பட்ட காலத்தில் கூட கிடைக்கலாம். அப்போது எந்தப் பங்கு லாபம் கொடுக்குமோ அதில் ஐம்பது சதவிகிதப் பங்குகளை விற்று லாபம் எடுத்து வெளியேறலாம். மீதமுள்ள பங்கை பங்குக் கலவையில் தொடர்ந்து வைத்திருக்கலாம். லாபத் தொகையைக் குறைந்த விலைக்கு வரும் வேறு நல்ல வளர்ச்சியுள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு முறையானது விற்க, வாங்க என தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். நம் இலக்கு மூன்று வருடங்கள். அந்தச் சமயத்தில் எவ்வாறு முதலீடு செய்தோமோ அதே முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கவேண்டும்.

செய்த முதலீடுகளை வருடத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து பார்க்கவேண்டும். வளர்ச்சி உள்ள துறைகளாக இருந்தவை இப்போது தலைகீழாக மாறியிருக்கலாம். அந்தத் துறைக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ விஷயங்கள் நடந்திருக்கலாம். அந்த நிறுவனப் பங்குகளை வேறு நிறுவனம் அல்லது வேறு துறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றும்போது நஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல முதலீட்டு ஆலோசகர்கள் உதவியுடன் இதைச் செய்வது நல்லது. அதேபோல் வெளியில் எடுக்கும் பணத்தையும் திட்டமிடாமல் ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது'' என்றவர், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

ஒரு துறையில் இரண்டு பங்குகளுக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது.

நிறுவனம் தொடர்ந்து டிவிடெண்ட் கொடுத்து வந்துள்ளதா, குறிப்பாக ஒரு பங்கின் சந்தை விலைக்கு எத்தனை சதவிகிதம் டிவிடெண்ட் கொடுத்துள்ளது என்று கவனிக்கவேண்டும்.

சந்தையில் அதிகமாக வர்த்தகமாகும் பங்குகளாகத் தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்குத் தெரியாத அதே சமயம் சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.

உற்பத்தியைத் தொடங்காத நிறுவனங்களை இந்தக் கலவையில் சேர்க்காதீர்கள்.

இதர வருமானத்தால் அதிக லாபம் பெறும் நிறுவனப் பங்குகளைத் தவிர்த்து விடுங்கள்.

விற்பனை (நெட் சேல்ஸ்) அதிகம் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யுங்கள்.''

நன்றி, விகடன்.