30 June 2008

சுப்பிரமணியபுரம்- ஒரு ஃபிளாஷ்பேக்

|0 comments
காதுகளை மறைக்கும் ஹிப்பி கிராப், தரையைப் பெருக்கும் பெல்பாட்டம், இரண்டு வார தாடி மண்டிய முகம், கண்களில் எப்போதும் ஒரு மிதப்பு... இதைப் படிக்கும் பலருக்கும், ஒருதலை ராகம் படமும், எண்பதுகளில் தாங்கள் அனுபவித்த இளமைக் காலங்களும் நினைவுக்கு வந்து சிலிர்க்கச் செய்துவிட்டுப் போகும்.

அந்த சிலிர்ப்பை மீண்டும் ஒரு முறை அன்றைய இளைஞர்களுக்குத் தரும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ள படம் சுப்பிரமணியபுரம். இநதப் படம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்தே, படத்தைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் ஆரோக்கியமாகவே இருப்பதால், படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் இயக்குநர் சசிகுமார் எண்பதுகளில் தன் இளமையை அனுபவித்தவர். பாலாவின் உதவியாளர் என்பது கூடுதல் தகுதி.

அந்த நாட்களின் இனிமையை அப்படியே திரும்பத் திரையில் காட்ட வேண்டும், இன்றைய இளைஞர்களுக்கும் உணர்த்த வேண்டும். வெறுமனே அந்த காலத்தைப் படம் பிடித்தால் மட்டும் போதாது. எண்பதுகளில் காதலுக்கு இருந்த வலிமை என்ன, நட்புக்கு இருந்த மரியாதை என்ன என்பதையும் புரிய வைப்பதே என் லட்சியம், என்கிறார் சசிகுமார்.

சென்னை-28 புகழ் ஜெய், புதுமுகம் மாரி, கஞ்சா கருப்பு நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகி புதுமுகம் ஸ்வாதி. இயக்குநர் சமுத்திரக்கனி முதல் முறையாக வில்லன் வேடம் போட்டிருக்கிறார் இப்படத்தில்.

ஜூலை 4-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது சுப்பிரமணியாபுரம்.

ஒரு இனிய பிளாஷ்பேக்குக்கு தயாராகுங்க...

மன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை

|0 comments
இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்-லைன் மனோ சிகிச்சை அல்லது ஈ-தெரபி வழங்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிசைகளை விட சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வுகளில் கண்டுபிடித்த விவரங்களை ஜர்னல் ஆஃப் மெடிகல் இன்டர்நெட் ரிசர்ச் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது உலகெங்கும் வளரும் பொருளாதாரங்களால் ஏற்படும் வாழ்நிலை நெருக்கடிகளில் பலர் மனநோய்க்கு உள்ளாகின்றனர். ஆனால் இதற்கான சிகிச்சையை அளிக்க மருத்துவர்களுக்கு போதிய நேரம் இல்லை என்றும், குடும்ப மருத்துவர்களுக்கு நோயை தீர்ப்பதற்க்கான ஆதாரங்களும் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வில் பணியற்றிய கெர்ரி ஷான்ட்லி என்பவர் கூறியுள்ளார். உதாரணமாக மனஅழுத்தம், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் "பேனிக் ஆன்-லைன்" என்று அழைக்கப்படும் இ-தெரபி மூலம் வெகுவாக குணமடைந்து வருவதாக அந்த பத்திரிக்கை அறிக்கை ஆய்வை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 30% பேர் இத்தகைய மன நோயிலிருந்து முழுவதும் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதற்கட்ட மனநோயான மன அழுத்தம், மன உளைச்சல், மனப் பதட்டம், டென்ஷன் உள்ள ஒரு 96 பேரை ஆன்-லைன் பேனிக் தெரபிக்கு உட்படுத்தியது. இவர்கள் 12 வாரங்களில் குணமடைந்தனர்.

இந்த ஆன்-லைன் சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மனோவியல் நிபுணர் தொலைபேசி மூலம் பேசி பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். பிறகு தொடர்ச்சியான பல ஆன்-லைன் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு 6 மாத காலம் தொடர் மருத்துவ கண்காணிப்பும் நடத்தப்படுகிறது.

அதாவது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும், ஆன்-லைன் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், உட்கார்ந்த இடத்திலேயே சொற்ப செலவில் நோய்களுக்கு சிகிச்சை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த ஆன்-லைன் சிகிச்சை நிரூபித்துள்ளது.

28 June 2008

அந்த "வயிறு" யார் தெரியுமா?

|0 comments
ஒரு போட்டி நடந்தது. என்ன போட்டி தெரியுமா? ஒரே மூச்சில் நூறு இட்லிகளைச் சாப்பிட வேண்டும். பல பேர் பாதியிலேயே விலகிக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். இவன் சாப்பிடச் சாப்பிட... இன்னொருவன் ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் ஒரு இட்லிக்கு ஒரு கோடு வீதமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இடமில்லை. அதைப் பற்றி, சாப்பிடுகிறவனுக்குக் கவலை இல்லை. கோடு போடுகிறவனுக்குத்தான் கவலை! சாப்பிடுகிறவன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கோடு போடுகிறவன் கரும்பலகையைக் கவலையோடு பார்த்தான். 99 கோடுகள் போட்டாயிற்று. இன்னொரு கோட்டுக்கு இடமில்லை. யாருக்கும் தெரியாமல் ஏற்கெனவே போட்ட சில கோடுகளை அழித்துவிட்டு... மறுபடியும் தொடர்ந்து போட ஆரம்பித்தான். ‘நூறு இட்லிகள், சாப்பிடும் போட்டி என்பது நூறையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. சாப்பிடுகிறவனைப் பரிதாபமாகப் பார்த்தான் கோடு போடுகிறவன். சாப்பிடுகிறவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனுக்குக் கோடுகளைப் பற்றிக் கவலை இல்லை. ஆகவே, அவன் அண்ணாந்து பார்க்கவே இல்லை. இது கோடு போடுகிறவனுக்கு வசதியாகப் போயிற்று சாமர்த்தியமாக ஒரு கோட்டை அழிப்பது... மறுபடி அதன் மீதே இன்னொரு கோடு போடுவது... இப்படியே சமாளித்துக் கொண்டிருந்தான். அந்த சாப்பாட்டு ராமன், இது தெரியாமல் மதியம் வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கடைசியாக ஒரு கட்டத்தில் அவன் ஏதோ யோசிக்க ஆரம்பித்தான். கோடு போடுகிறவன் கேட்டான்: என்ன யோசிக்கிறே..? நீ செய்யறது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு! நான் ஒழுங்காத்தானே கோடு போட்டுக்கிட்டு வர்றேன்! சாப்பிடுகிறவன் சொன்னான்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... எல்லாக் கோட்டையும் அழிச்சுடு... மறுபடியும் முதல்லேயிருந்து வரலாம்!

நண்பர்களே... அதிர்ச்சியடையாதீர்கள்.


எல்லையில்லாமல் இட்லிகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிற அந்த வயிறு யார் தெரியுமா? அதன் பெயர்: பேராசை!


சா அதி சொல்கிறார்: பேராசைக்காரனுக்கு உலகமெல்லாம் தந்தாலும்கூட பசி தீராது. மனத் திருப்தியுள்ளவனுக்கு ஒரு துண்டு ரொட்டியே போதுமானது!

26 June 2008

அசெம்பிள்டு கணினி சந்தை ஆதிக்கம்

|0 comments
பொதுவாக கணினி வாங்க வேண்டுமென்றால் பிரபல பிராண்டுகளான டெல், லெனோவா போன்ற கம்பெனிகளை நாடுவதே வழக்கமாக இருந்த நிலையெல்லாம் தற்போது மாறிவிட்டது.

கைக்கு அடக்கமான மடிக்கணினிகள், ஏன் செல்பேசியே ஒரு சிறு கணினியாக மாறி வரும் இந்தக் காலக் கட்டத்தில், உதிரிபாகங்களை தனியாக வாங்கி அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அசெம்பிள்டு கணினிகளுக்கு இன்றும் சந்தையில் கிராக்கி இருக்கிறது என்று கூறினால் நம்பவா முடிகிறது. ஆம். நம்பித்தான் ஆகவேண்டும்!

2007-ம் ஆண்டில் பிராண்டட் கணினிகளின் விற்பனைகளே 15 முதல் 20 சதவீதம் வரை சரிவு கண்டிருக்கும்போது, இதே ஆண்டில் அசெம்பிள்டு கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் விற்பனை அதிகரித்துள்ளது என்று பிரபல ஆய்வு நிறுவனம் ஐ.டி.சி. தெரிவித்துள்ளது.

2007-ம் ஆண்டில் விற்றுள்ள 65 லட்சம் கணினிகளில் "ஒயிட்பாக்ஸ்" என்று அழைக்கப்படும் அசெம்பிள்டு கணினிகள் விற்பனை மட்டும் 25 லட்சம் என்று அது தெரிவித்துள்ளது.

பிராண்டட் கணினிகள் 60 சதவீதம் விற்கிறது என்றால், அசெம்பிள்டு கணினிகள் 40 சதவீதம் விற்கிறது. ஆனால் பிராண்டட் கணினிகள் 49 சதவீதமே விற்பதாக வேறு ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

குறிப்பாக தனி நபர்கள் அதிகமாக இந்த ஒயிட்பாக்ஸ்களையே நாடுகின்றனராம். ஆனால் வர்த்தக பயன்பாடுகளுக்காக வாங்குபவர்கள் பிராண்ட் கணினிகளையே வாங்கி வருவதாக ஐடிசி கூறுகிறது.

அசெம்பிள்டு கணினிகள் சந்தையை தற்போது ஐடிசி தனது ஆய்வில் நிரந்தரமாக சேர்த்துள்ளது.

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் மணிக்கு 4000 பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதே காலத்தில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட மொத்த கணினிகளின் எண்ணிக்கை 21 லட்சம் என்று கூறுகிறது ஐடிசி.

அதேபோல் 2007-08ம் நிதியாண்டில் வர்த்தக பயன்பாடுகளுக்காக விற்கப்பட்ட கணினிகளில் நான்கில் ஒன்று மடிக் கணினிகள் என்று தெரிவித்துள்ளது ஐ.டி.சி.

24 June 2008

அபாரமான விஷுவல் டிக்‌ஷனரி இணையதளம்

|3 comments
நாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரிய வராது. ஆனால் மெரியம் வெப்ஸ்டர் அகராதி, சமீபத்தில் அபாரமான விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது.

அதாவது பேன்யன் ட்ரீ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அதற்கான பொருளோ அல்லது விளக்கமோ இருக்குமே தவிர அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் புதிய விஷுவல் இணையதளத்தில் ஆலமரம் படம் வரும். அது மட்டுமல்லாது மரத்தின் பாகங்களை விளக்கும் படமும் கிடைக்கும்.

ஆரம்பக் கல்வி படித்து வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளவே இந்த ஆன்லைன் டிக்‌ஷனரி பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்று வாழ்வில் நாம் காணும் ஒரு 6000 பொருட்களுக்கான படங்கள் இந்த ஆன் லைன் அகராதியில் உள்ளன.

20,000 வார்த்தைகளுக்கு அது பயன்படுத்தப்படும் கான்டெக்ஸ்சுவல் அர்த்தங்களை, அருஞ்சொல் நிபுணர்களைக் கொண்டு த்யாரித்துள்ளது.

இணையதளத்தின் சைடு பாரில் வானியல், புவி, தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை, விலங்குகள், மனிதன், உணவு மற்றும் சமையலறை, வீடு, உடை மற்றும் பொருட்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், போக்குவரத்து மற்றும் எந்திரம், எனர்ஜி, விஞ்ஞானம், சமூகம், விளையாட்டு என்று 15 துறைகளாக பிரித்து அந்தந்த துறையைச் சேர்ந்த வார்த்தைகளுக்கான படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்கிறது இந்த ஆன் லைன் அகராதி.

பான்கிரியாஸ் என்றால் கணையம் என்று நமக்கு தெரியும், லிவர் தெரியும், பெருங்குடல், சிறுகுடல் போன்ற வார்த்தைகளெல்லாம் நமக்கு தெரியும் ஆனால் அது எப்படி இருக்கும்? விளக்கத்துடன் தெரிந்து கொள்ளவேண்டுமா உடனே செல்லுங்கள் http://visual.merriam-webster.com/ இணையதளத்திற்கு.

1996-ம் ஆண்டு தி விஷுவல் டிக்‌ஷனரி என்ற புதிய அகராதி சி.டி. ரோம்களில் வந்தது. இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் வெளியானது. அப்போது முதல் பல்வேறு விதத்தில் மேம்பட்ட சி.டி. ரோம் டிக்‌ஷனரிகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் ஆன்லைனில் அனைவரும் எளிதில் காணும் வண்ணம் இதனை கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளது மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம்.

22 June 2008

தேடும் கலை...

|0 comments
நம் எல்லொர் வழ்க்கையிலும் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒண்றை தேடியே தீருவோம். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி ஏதோ தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். இணையத்திலும் அதை நாம் விட்டுவைக்கவில்லை. இப்போது இணையத்தில் தேட மிகவும் பயன் படுத்தப்படும் தேடுதளம் google. இந்த தளத்தில் எப்படி தேடுவது என்று பலருக்கு தெரிவதில்லை அதனால் அவர்கள் வேண்டிய விடை கிடைக்காமல் வேறு எங்கேங்கோ சென்று கடைசியில் அவர்கள் தேட வந்ததையே மறந்து விடும் நிலமைக்கு தள்ளப்படுகின்றர். சரி... விஷயத்திற்கு வா என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

இதோ வந்துட்டேன்... google.com "தேடுவது எப்படி" என்று டைப் செய்து கிடைத்த சுட்டிகளின் இரண்டு உங்களுக்காக.

சுட்டி-1 சுட்டி-2

இவை தவிற பிற சுட்டிகளும் பிற நுனுக்கங்களும் உங்களுக்கு தெரிந்ததை கூறலாம். அதுவும் இந்த பதிவில் பதியப்படும்.

20 June 2008

உங்கள் திருமணத்தை பதிவு செய்திருக்கிறீர்களா?

|0 comments
‘‘அடக் கொடுமையே, அந்தப் பையனும் பொண்ணும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாமே!’’

ஏதோ, வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஜோடிகளுக்கான விஷயம் என்கிற இந்த தொனியில்தான் இன்னமும் நம் ஊரில் பதிவுத் திருமணங்கள் பற்றிய அபிப்ராயம் இருக்கிறது.

ஆன்றோரும் சான்றோரும் ஆசீர்வதிக்க, சுற்றமும் நட்பும் சூழ்ந்து நடக்கும் திருமணங்களும்கூட பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ‘திருமணங்களை பதிவு செய்வதுதான் பெண்களுக்கு பாதுகாப்பை தரும்!’ என்பது பல்வேறு குடும்ப வழக்குகளில் உணர்த்தப்பட்ட போதும், இங்கே அந்த பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை. விளைவு, முறையான திருமண ஆதாரம் இல்லாததால், பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இதற்கொரு தீர்வாக, ‘திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என்று சமீபத்தில் ஆணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சீமா என்ற பெண்மணி தொடர்ந்த வழக்கில், ‘‘திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் உத்தரவை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்துவதற்கு விதிமுறைகளில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்!

திருமணங்களை பதிவு செய்துகொள்ள வேண்டியது எந்த வகையில் அவசியம் என்பது பற்றி ஒரு அலசல்...

‘‘எந்த ஒரு உறவுமே சுமூகமாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதில் சிக்கல் முளைக்கும்போது உரிய ஆதாரங்கள் இருந்தால்தானே நிவாரணம் கிடைக்கும்!’’ என்று ஆரம்பித்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி.

‘‘என்னதான் ஊரார் முன்பு, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து கல்யாணம் செய்துகொண்டாலும், கணவன் ஏமாற்றிவிட்டுப் போகிறான் என்கிறபோது, சட்டத்தின் முன்பு அவனை நிறுத்த இந்த சாட்சிகள் போதாது. அவர்களின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம். நம் நாட்டை பொறுத்தவரை, ‘கல்யாணம் முடிந்ததும் அதைப் பதிவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என்பதாலேயே பெண்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகிறார்கள்!

கணவரால் ஏமாற்றப்படும் பெண்கள் கோர்ட் படியேறும் சமயங்களில், ‘இவர்தான் என் கணவர். இதோ, பாருங்க, இவர் எனக்கு கட்டின தாலி’ என்று எடுத்துக் காட்டுவார்கள். ஆனால், அவர்தான் மனைவி என்பதை நிரூபிக்க அந்த தாலி போதாது. ‘இவ என் மனைவியே இல்லை’ என்று அடித்துச் சொல்லிவிட்டு, அவன் தப்பித்து விடுவான். திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம் அல்லது அவர்களின் குழந்தையின் பர்த் சர்டிபிகேட்... இவற்றில் ஏதாவது ஒன்றை ஆதாரமாகக் காட்டினால்தான் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

நம்ம ஊரில் கோயில்களில் திருமணம் வைத்துக் கொள்வது வழக்கம். பெரும்பாலான கோயில்களில் நன்கொடை சீட்டு ஒன்றைத்தான் ரசீது போல தருவார்கள். ஒருபோதும் அது திருமணத்துக்கான ஆதாரமாக ஆகாது. முறைப்படி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல், கோயிலில் அம்மன் சிலைக்கு முன்னே நின்றபடி குங்குமம் வைப்பது, சும்மா ஒரு மஞ்சக் கயிறை கட்டி விடுவது... இவை எதுவுமே சட்டத்தின் முன்பு எடுபடாது.

நாளை உங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதென்றாலும், கல்யாண மண்டபத்துக்கு வாடகை கொடுக்கும்போது, மணப்பெண் மற்றும் மணமகன் பெயரில், கல்யாணத் தேதியைக் குறிப்பிட்டு தெளிவான ரசீதாக மண்டப உரிமையாளரிடமிருந்து வாங்கி கொள்ளுங்கள். கல்யாண பத்திரிக்கை முதல் அனைத்தை யும் பத்திரமாக வைத்திருங்கள்!’’ என்று சொன்ன சுமதி,

‘‘நம் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் என்றாலும், பாதுகாப்போடு இருப்பதில் தவறில்லை. பின்னாளில் கோர்ட் படியேறுவோம் என்று எதிர்பார்த்து யாரும் திருமணம் செய்துகொள்வதில்லையே’’ என்று முடித்தார்.


சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஷீலா ஜெயப்பிரகாஷிடம் பேசியபோது, ‘‘கடந்த 15 ஆண்டு களாகவே திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும் என்ற பிரசாரம் உள்ளது. ஆனால், ‘கல்வியறிவில் நம் மக்கள் பின்தங்கியுள்ளனர்’ என்ற காரணத்தைக் காட்டி, இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது நம் அரசு. கல்வியறிவில் பின்தங்கிய அதே மக்கள்தானே கையளவு நிலமோ, வீடோ வாங்கினால்கூட, அருகில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, சொத்தை கிரயம் செய்கின்றனர்? எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் கைநாட்டு போட்டாவது சொத்தை பதியமுடியும் என்கிறபோது, திருமணங் களைப் பதிவதும் சுலபம்தானே!’’ என்று சூடாகவே ஆரம்பித்தார்.

‘‘பதிவுத் திருமணங்களின் அவசியம் குறித்த அரசின் பிரசாரமும் விளம்பரங்களும் இன்னும் முடுக்கிவிடப் பட வேண்டும். போலியோ சொட்டு மருந்து பிரசாரம் எப்படி நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் பரவி, இன்று வெற்றியடைந்துள்ளதோ, அதே வழிமுறையில் இதையும் பரப்பவேண்டும். இப்போதிலிருந்தே தொடங்கினால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் பலன் கிடைக்கும். அதன் பிறகு, ‘பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது’ என்ற நிலைமை வந்தால், திருமணப் பதிவும் கட்டாயமாகிவிடும்’’ என்றவர், திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள முக்கியமான நன்மைகளை பட்டியலிட்டார்...

‘‘திருமணத்துக்கு என்று வயது வரம்பு இருப்பதால், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுப்பதும், குழந்தைத் திருமணங்களும் அறவே நின்றுவிடும் என்பது முதல் நன்மை.

முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பது அடுத்த நன்மை. இதனால், பெண்களின் மணவாழ்க்கை, அவர்கள் அறியாமலேயே பறிபோவதிலிருந்து காப்பாற்றப்படும். அதேபோல், மணவாழ்வில் பிரச்னை என்று வரும்போது, ‘எனக்கும் இவளுக் கும் திருமணமே நடக்கவில்லை’ என்று கணவன் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது.

மூன்றாவது, கணவன் இறந்தபிறகு, அவரது சொத்து மற்றும் உடைமைகள், பதிவு செய்யப் பட்ட மனைவிக்குத்தான் சட்டப்படி சேரும். எனவே, கட்டாயமாக திருமணத்தைப் பதிவு செய்திருந்தால், கணவருக்கு சட்டத்துக்குப் புறம்பான துணை இருந்தாலும், அவர்களிடம் சொத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்! எனவே, ஒவ்வொரு திருமணமும் பதிவு செய்யப்படுவது மிக மிக அவசியம்’’ என்றார் ஷீலா.

திருமணத்தைப் பதிவு செய்வதற்கு அடிப்படையில் என்ன தேவை, எப்படிப் பதிவு செய்வது, எங்கு செய்வது போன்ற கேள்விகளுடன் சென்னை பதிவுத்துறை தலைமை அலுவலகம் சென்றோம். அங்குள்ள பதிவு அதிகாரி கூறியதில் இருந்து...

‘‘திருமணப் பதிவில், இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் (ஷிஜீமீநீவீணீறீ னீணீக்ஷீக்ஷீவீணீரீமீ கிநீt) என இரண்டு வகை உண்டு.

இந்து திருமண சட்டம் என்பது, இந்து மதம் மட்டுமல்லாது புத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்தச் சட்டத்தில், திருமணம் வேறொரு இடத்தில் நடந்திருக்கும். அதன் பதிவு மட்டுமே அலுவலகத்தில் செய்யப்படும்.

இதற்கான தகுதிகள் என்னவென்றால், பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் முடிந்திருக்க வேண்டும். இருவருக்குமான உறவுமுறை திருமணத் துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது. இருவரில் எவருக்குமே முன்பே ஒரு திருமணம் முடிந்து, துணை இருக்கக் கூடாது.

இந்தத் தகுதிகள் இருக்கும்பட்சத்தில், மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியின் எல்லைக்கு உட்பட்ட அல்லது திருமணம் நடந்த இடத்தின் எல்லைக்கு உட்பட்ட சார்&பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக் கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே.

அவர்களது திருமணம், எங்காவது (கோயிலிலோ, வீட்டிலோ, மண்டபத்திலோ) எந்த முறையிலாவது (மரபு முறையிலோ, சீர்திருத்த முறையிலோ) நடந்ததற்கான ஆதாரம், பதிவுக்கு அவசியம் தேவை. அது திருமணப் பத்திரிகை, புகைப்படம் அல்லது கோயிலில் தந்த ரசீது போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பதிவுக்கான விண்ணப் பத்தில் மூன்று பேர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும். அதே மூவர், பதிவு அலுவலகத்துக்கும் நேரில் வந்து கையெழுத்திட வேண்டும். ‘இந்தத் திருமணத்தில் வரதட்சணை வாங்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை’ என்று இரு தரப்பிலிருந்தும் உறுதிமொழி தரவேண்டும். மணமக்களின் முகவரிக்கான ஆதாரமும் வயதுக்கான ஆதாரமும் அவசியம் தேவை.

பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, பதிவு செய்யாமல் விட்டவர்களும் இதே முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக, சிறப்பு திருமண சட்டம்... எப்படிப்பட்ட ஜோடியும் (அதாவது இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்) இந்தச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்படும். பிறகு, பதிவும் செய்யப்படும்.

இந்து திருமண சட்டத்துக்கு சொன்ன அனைத்துத் தகுதிகளும் இதற்கும் இருக்கவேண்டும். கூடுதலாக, இன்னொரு விஷயமும் உண்டு. அதாவது, ‘இந்த இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. ஆட்சேபணை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்’ என்ற அறிவிப்பு, மணமகன், மணமகள் இருவரின் எல்லைக்குட்பட்ட சார்&பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 30 நாட்களுக்குள் யாரிடமிருந்தாவது ஆட்சேபணை வரும்பட்சத்தில், திருமணம் நடத்தப்பட மாட்டாது. அப்படி எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், 31&ம் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் முடித்து, பதிவும் செய்து கொள்ளலாம். இந்த ஆதாரங்கள், சாட்சிகள், விதிமுறைகளின்படி பதிவு செய்வதற்கான கட்டணம் பத்து ரூபாய்!’’ என்று விரிவாக சொல்லி முடித்தார் அந்த அதிகாரி.

பதிவு தொடர்பான தகவல்கள் www.tnreginet.net என்ற இணையதள முகவரியிலும் கிடைக்கிறது. பதிவு பற்றிய சந்தேகங்களை igregn@tnreginet.net என்ற மினஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அனுப்பி வைக்கிறார்கள்.

கண்முன்னே கைமாறும் நிலத்தை வாங்குவதைகூட பதிவு செய்து வைக்கும் நாம், தலைமுறைகள் தாண்டி தொடரும் இந்த புனிதமான பந்தத்தை பதிவு செய்து வைக்க தயங்கலாமா?

18 June 2008

எந்த காதால் ஹலோ???

|0 comments
கடந்த மாதம் நண்பர் பிகேபி அவர்கள் இடது காதால் ஹலோ... என்கிற பதிவில் இடது காதால் மட்டுமே ஹலோ சொல்லுங்கள் என்று அவருக்கு வந்த மின் அஞ்சல் படத்தையும் வெளியிட்டு அதனால் எற்ப்படும் பாதிப்பையும் பற்றி எழுதியிருந்தார். அதை மறுத்து நண்பர் கார்திக்கேயன் அவர்கள் அப்படி எல்லாம் இல்லை எந்த காதால் ஹலோ சொன்னாலும் 10மணி நேரத்திற்க்கு மேல் பேசுபவர்களுக்கு தான் தான் அந்த பாதிப்பு வரும் என்றும் இந்தியாவி அதை பற்றிய அறிவு கம்மி என்றும் கூறியிருந்தார். இப்பேது தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இதற்க்குறிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. அதற்குறிய சுட்டிகள் சுட்டி1 சுட்டி2.

அதேபோல் இப்போதெல்லம் சிட்டுக்குருவிகளை பார்க்க முடிவதில்லை. (வேண்டுமென்றால் குருவி படம் பார்க்கலாம்). தேனீக்களும் குறைந்து வருவதாக தகவல். இவை அனைத்தும் செல்போன் கோபுரங்களின் மூலம் வரும் கதிர் வீச்சுகளினால் தான். தேன் கூட்டை கழைக்க முன்பெல்லாம் தீப்பந்தம் எடுத்துக்கொண்டு செல்வார்கள் இப்போது ஒரு செல்போனை எடுத்துக்கொண்டு சென்றால் அத்தனை தேனீக்களும் பறந்துவிடுமாம்...


எது எப்படி இருந்தாலும் செல்போன் பேசுபவர்களுக்கு பேசிக்கொண்டேதான் இருக்கப்போகிறர்கள். முன்பு குளிர் பானங்களில் பூச்சி கொல்லி மருந்து கலந்துள்ளதாக சொன்னார்கள் அதற்க்கா என்ன குளிர்பானங்கள் குடிப்பதையா விட்டுவிட்டர்கள்...

17 June 2008

பார்வையற்றவர்களுக்கான செல்போன்

|0 comments
செல்போன் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான ஸ்பைஸ், பார்வையற்றவர்கள் எளிதாகபயன்படுத்தும் வகையிலான புதிய செல்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதனைத் தெரிவித்த ஸ்பைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் கவுல், இதற்கான பணியில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறினார்.

பார்வையாற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், பிரெய்லி (braille) நம்பர் பேட் கொண்ட இந்த வகை செல்போன் அடுத்த 3 மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் லைப்டைம் ப்ரிபெய்டு இணைப்புடன் கூடிய ரூ.599 செல்போனை நவீன் கவுல் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 75 கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த புதிய செல்போனில் 3 மணி நேரம் தொடர்ந்து பேசும் அளவுக்கு பேட்டரி சக்தி உள்ளது. ஸ்பீக்கர் வசதியுள்ள இந்த போனில் 9 நம்பர்களை ஸ்பீட் டயல் வசதியில் வைத்துக் கொள்ள முடியும்.

16 June 2008

பெற்றோர் படிக்க வேண்டிய பாடம்

|1 comments
விகடன் பதிப்பாளர் திரு.பா.சீனிவாசன், அவர்கள் இந்த வார விகடனில் எழுதியது....

ஊர் மந்தையில் கிராமத்துப் பெரிசுகளும் இளவட்டங்களும் கூடியிருக்க... ''எலேய்! அக்கம்பக்கத்து ஊர் இஸ்கோல்ல எல்லாம் நூத்துக்கு நூறு பசங்க பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணிட்டாங்களாம். நம்ம ஊர் சர்க்காரு பள்ளிக்கோடத்துல மட்டும் நூத்துக்கு இருவது பசங்கதான் பாஸாகியிருக்கானுங்க..!'' என்று செய்தித்தாளோடு ஒருவர் உரக்கக் குரல் எழுப்ப... ''ஒளுங்கா பாடம் நடத்தாத நம்மூரு வாத்திங்களைச் சும்மா விடாக் கூடாதுலே!'' என்று இன்னொருத்தர் கொதிக்கிறார்.

பாரதிராஜா படத்துக் கிராமம் போலவே, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு திபுதிபுவெனக் கிளம்பியவர்கள், அந்தப் பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களைச் சூழ்ந்துகொண்டு பந்தாடியிருக்கிறார்கள்.

-இப்படியொரு செய்தியைப் படிக்க நேர்ந்தபோது, எனக்குள் எழுந்த முதல் எண்ணம்... 'ஹூம்! காலம்தான் எவ்வளவு மாறிப்போச்சு! பையன் ஃபெயிலானால் அவனைப் போட்டு அடிக்கிற காலம் போய், அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற வாத்தியாரை அடிக்கிற அளவுக்கு மக்க ளுக்குதான் எத்தனை விழிப்பு உணர்ச்சி(!) வந்துவிட்டது!'

''தப்பு எங்க மேல இல்லீங்க... ஒழுங்கா படிக்காத பசங்களை முதுகுல நாலு வெச்சாதான் வழிக்கு வருவாங்க. இப்பெல்லாம், சும்மா அவனைப் பார்த்துக் கையை ஓங்கினாலே, போலீஸ் வரைக்குமில்லே போயிடுறாங்க'' என்று 'பாதிக்கப்பட்ட' ஆசிரியர் ஒருத்தர் குமுறியது அடுத்த ஹைலைட்!

தாக்கப்பட்டது பற்றி போலீஸில் வாத்தியார்கள் ஏன் புகார் தரவில்லையாம்? அப்படித் தந்தால், பள்ளிக்கூட லட்சணம் வெளியில் பரவி, கல்வித் துறையும் தன் பங்குக்கு ஏதாவது 'சூடு' வைக்குமோ என்ற எச்சரிக்கை உணர்வுதானாம்!

மாணவர்கள் மீது அக்கறைகொண்டு, அவர்களை அடிக்காதபடி சட்டம் போட்ட அரசு, இனி ஆசிரியர்கள்பேரிலும் அக்கறைகொண்டு அவர்களை யாரும் அடிக்கக் கூடாது என்று அரசாணை போட வேண்டி வருமோ?

'வாத்தியாரையும் போலீஸையும் மதிக்காத சமூகம் உருப்படாது' என்பார்கள் ஊர்ப்பக்கம்.

பெற்றோரும் அக்கறையாகக் கற்க வேண்டிய பாடம் இது!

என்றும் உங்களுக்காக,
பா.சீனிவாசன்,
விகடன் பதிப்பாளர்

15 June 2008

மதுரை மிக விரைவில்...

|2 comments
எனது மதுரை மிக விரைவில் மெட்ரோ நகரம் ஆகும் என்ற பதிவையும் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-1 பதிவையும் படித்திருப்பீர்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பார்ட்-2வை வெளியிடும் முன்னால் அந்த இரண்டு பதிவில் உள்ள படி மதுரை மெட்ரே நகரமாக மாறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது!

கடந்த 10வருடங்களாக மதுரை தத்தனேரி பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த பாலம் கட்டி முடிக்க இரண்டு மூன்று வருடம் கூட ஆகலாம்.

கடந்த 5வருடங்களாக மதுரை பெரியார்நிலையத்திலிருந்து எல்லீஸ்நகர் செல்லும் பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் தான் ஒரு வழியாக ஒரு வழி மட்டும் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. மற்றொரு வழி கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மதுரை பெரியார்நிலையத்தில் அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலம் கடந்த 10வருடங்களாக பூட்டப்படுள்ளது.

மதுரை இராஜாஜி மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதை கீழ்பாலம்(Subway) கடந்த 6வருடங்களாக பூட்டப்படுள்ளது.

மதுரையில் காளவாசல் மற்றும் கோரிப்பளையம் சந்திப்பில் உள்ள Signalகளை தவிர வெறு எந்த சந்திப்பிலும் போக்குவரத்து விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை, விதி முறைகளை மீறுபவர்கள் (Signal Jumping) மீது அங்குள்ள காவல் துறையினர் கன்டிப்பதில்லை.

மதுரையில் வாகனங்களை நிறுத்தும் (Parking) வசதி சரியாக கடைப்பிடிக்கபடுவதில்லை.
இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடங்களில் நாண்கு மற்றும் மூண்று சக்கர வாகனங்கள் நிறுத்துவது.

மதுரை கீழ வாசல் பகுதியில் உள்ள சில கடைகள் காமராஜர் சாலையின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரத்மித்துள்ளனர். இது வரை அதை யாரும் கண்டுகொள்ளாவில்லை.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள தெருக்களை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

அரசியல் தலைவருக்கு பிறந்த நாள் என்றால் அவ்வளவுதான் மதுரை முழுவதும் கட் அவுட் வைத்து போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சல் தான். அரசியல் தலைவருக்கு மற்றும் இல்லாமல் தங்கள் வீட்டு விசேஷத்திற்கும் சில பணம் படைத்தவர்கள் சில முக்கிய சந்த்திப்புகளில் முழுவதும் கட் அவுட் வைத்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்கின்றனர். இதை தடுக்க யாரும் முன் வரவில்லை.

மேற்கூறிய அனைத்து பாலம் வேலைகளையும் துறிதப்படுத்தி சம்மந்த்ப்பட்டவர்களை முடுக்கி விட்டு நடவெடிக்கை எடுக்கலாம்.

பெரியார்நிலையத்தில் அருகே கட்டப்பட்டுள்ள நடைபாதையை உபயேகிக்க இப்போழுது சாலையை கடக்க பயன் படுத்தும் வழியை அடைத்து (சாலையை கடக்க அங்கு ஒரு காவல் துறையை வேறு நியமிக்கப்பட்டுள்ளார்) நடைபாதை மேம்பாலத்தை திறக்கலாம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கடுமையான (லஞ்சம் வாங்கமல்) தண்டனைகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

சாலை ஆக்கிரமிப்பை தடுக்க கோவையில் உள்ளது போல் வாகன நிறுத்ததை ஒவ்வொரு மாதமும் மாறி மாறி அமைக்கலாம்.

மேலும் இது போல் பல வித நடவெடிக்கைகள் மூலம் மதுரையை மெட்ரோ நகரமாக்க முதல் அடித்தளத்தளதை அமைக்கலாம் அப்போது தான் நம் மதுரை மெட்ரோ நகரமாக விரைவில் எதிர்பார்க்கலாம்.

13 June 2008

கணினி வைரஸை தடுக்க புதிய வழி

|0 comments
2001-ம் ஆண்டு கோட் ரெட் என்ற வைரஸ் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை 14 மணி நேரத்தில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது. தவிரவும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு உலகம் முழுதும் இழப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஓஹியோ மாகாண தொழில் நுட்ப வல்லுனர்கள் கோட் ரெட் வகை வைரஸ்களை தடுக்க புதிய உத்திகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரசை அதன் துவக்க இயக்கத்திலேயே கண்டுபிடித்து விடுவது, அது பல நெட்வொர்க்குகளுக்கு செல்வதற்கு முன்னரே கண்டுபிடித்து விடுவது என்பதே அந்த உத்திகள்.

இந்த வைரஸ்கள் மிக வேகமாக பரவக்கூடியது. ஜன்க் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நெட்வொர்க்கில் இவை வந்து குவியும் தன்மையுடையது. மேலும் கணினி நெட்வொர்க்கை நிரப்பி அதனை ஷட் டவுனும் செய்து விடும் ஆபத்து மிக்கவை இந்த வைரஸ்.

நெட்வொர்க்குகளில் உள்ள கணினியிலிருந்து எவ்வளவு எண்ணிக்கை ஸ்கேன்கள் வெளியில் செல்கின்றன என்பதை கண்காணிக்கும் மென்பொருளை ஓஹியோ பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு கணினி அளவுக்கதிகமாக ஸ்கேன்களை வெளியே அனுப்பினால் அந்த கண்னி வைரஸ் தாக்குதல் கண்டுள்ளது என்று அடையாளம் காணப்படும். உடனடியாக கணினி நிர்வாகிகள் அதனை ஆஃப் லைனிற்கு எடுத்துச் சென்று வைரசை கண்காணிக்கலாம்.

கூகிளில் நாம் தேடுதல் போல்தான் இந்த ஸ்கேனை கண்டுபிடிக்கும் முறையும் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

வித்தியாசம் என்னவெனில் ஒரு வைரஸ் தாக்கிய கணினியிலிருந்து குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான ஸ்கேன்கள் வெளியேறும். ஆனால் எவ்வளவு ஸ்கேன்கள் என்ற அளவை தீர்மானிப்பது கடினம்.

இதற்காக கணித மாதிரிகளையும் ஓஹியோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஒரு நேரத்தில் எவ்வளவு ஸ்கேன்கள் செல்லலாம் என்பதை இது வரையறுத்து விடும்.

இதுவரை வந்துள்ள வைரஸ் ஒழிப்பு தொழில் நுட்பங்களை விட இது திறம்பட வேலை செய்யும் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வலைப்பூ கற்றுக் கொடுத்த பாடம்...

|0 comments
நண்பர் பி.கே.பி. அவர்கள் கடந்த பதிவில் கூரியதுபோல் நானும் சிவில் மாணவன் தான். என்ணைப்போன்று பலரும் பல விதமான வலைப்பூக்களை உருவக்கி கொண்டிருக்கலாம். நான் இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்துள்ளாதால் பல விதமான தொழில்நுட்பத்தையும், பல நுனுக்கங்களையும், கற்றுக்கொள்ள ஆறம்பித்துள்ளேன். நண்பர் பி.கே.பி. அவர்களும் என்ணை உற்ச்சாகப்படுத்தியுள்ளார். இதுவரை நான் எந்த ஒரு கணிணி படிப்பயையும் முடிக்கவில்லை. இருந்தாலும் பலரது வலைப்பூக்களை பார்த்து பார்த்து எனது வலைப்பூவை அழகு படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது வலைப்பூவின் தலைப்பின் படி எனது வாழ்க்கயையும் எனது வலைப்பூவையும் இனி மிக அழகாக்க முயற்ச்சிக்கிறேன்.


"நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும் நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு."

12 June 2008

கணிணியில் தமிழ் படும் பாடு...

|2 comments
இப்போதெல்லாம் கணிணியில் தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் சுலபமாகிவிட்டதது. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் தமிழில் அம்மா என்று தட்டச்சப்படும் படி பல வித மென் பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்திதான் இந்த வலைபூவையும் தட்டச்சுகிறேன். இப்படி தட்டச்சு செய்ய வேண்டாம் என்று பல வலைபூ பதிவர்கள் வழியுருத்திவருகின்றனர்.

மின் அஞ்சல் வார்த்தையில் "ஞ்" எந்த கீயை அழுத்தவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் வழக்கம் போல் ஆங்கிலத்தி ஒரு வார்த்தைக்கு Spelling அரிய GOOGLE.COMல் எனக்கு தெரிந்த ஸ்பெல்லிங்கை அடித்து Search பட்டனை அழுத்தியதும் Did you mean என்று சரியான ஸ்பெல்லிங்குடன் அந்த வார்த்தை வரும். அது போல் எண்ணி "அங்சல்" டைப் செய்தேன் என்ன ஆச்சரியம்... என் போல "ஞ்" எந்த கீயை அழுத்தவேண்டும் என்று தெரியாமல் பலர் தவறுதலாகவே எழுதியுள்ளது தெரிந்தது. அதன் விளைவாகவே இந்த பதிவு.


தமிழ் எழுத்துக்களுக்கு சரியான ஆங்கில எழுத்து எனக்கு தெரிந்த சில...


ங் = ng
ஞ் = nj
ந் = w
ந்த் = nt
ஃ = q
ழ் = z
ஹ் = h
f ற்க்கு எந்த தமிழ் எழுத்தும் இல்லை.

11 June 2008

நீங்கள் வெற்றிகரமான மனிதரா???

|1 comments
ஒரு மிகப் பெரிய தொழிலதிபர். நிற்கக்கூட நேரம் இல்லாதவர். பறந்துகொண்டே இருப்பவர். பல்வேறு இடங்களில் தொழில்! பல தரப்பட்ட தொழில் சந்திப்புகள். வெற்றிகளைத் தவிர வேறு ஏதும் அறியாதவர். அவர் கை வைத்தவை எல்லாம் பொன்னாகும் காலகட்டம்.


இவரது கடல் போன்ற பங்களாவில் நுழைவாயிலை ஒட்டிய அறையில் வயதான அம்மா. உண்ணும் உணவைவிட மருந்து மாத்திரைகளின் அளவு அதிகம் என்கிற நிலையில் உடம்பு.


காலையில், ``அம்மா! போயிட்டு வர்றேன்!'' என்பதோடு சரி. இரவு திரும்ப வெகுநேரமாகிவிடும். அம்மாவுக்கு வாயிற்கதவு திறக்கப்படும் சத்தம்; கார் கதவு சாத்தப்படும் சத்தம் இந்த இரண்டையும் வைத்து மகன் எப்போது வந்தான் என்று அந்த இருட்டிலும் டார்ச்லைட் அடித்து கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வார்.


இந்தத் தொழிலதிபரின் மகன் மற்றும் மகளின் நிலை இன்னும் சுமார். ``ராத்திரிக்கு ராத்திரி ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்து தூங்கிட்டுப் போறாரே, அவரு யாரும்மா?'' என்கிற பிரபல நகைச்சுவைக்கு அடுத்தபடியான நிலை.


இவரை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஊர் வியக்கலாம். ஆனால் ஒரு வெற்றிகரமான மனிதராக எண்ணி வியக்க முடியவில்லை.


குடும்பம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடித்தளம். இது சரியாக அமையாவிட்டால், ஆகாயக்கோட்டைகளைக் கட்டி என்ன பயன்?


நடுத்தரக் குடும்பங்களில்கூட என்ன வாழ்கிறதாம்? உலக அளவிலான கிளைகள் கொண்ட வங்கி ஒன்று நம் நாட்டு வங்கி ஒன்றை சுவீகரித்துக் கொண்டது. இதில் பணிபுரியும் நம்மவர் ஒருவர், காலையில் ஏழரைக்குப் புறப்பட்டுப் போனால் இரவு பத்தரைக்கு வந்து உயிரற்ற உடலாய்ப் பொத்தென்று, பாண்ட்டைக் கூடக் கழற்றாமல் படுக்கையில் விழுவார். பசியைவிட அசதி அதிகம். பொண்டாட்டி பிள்ளைகளைக் கவனிக்க ஏது நேரம்?


இத்தகையவர்களுக்கு ஒரு யோசனை. இவர்களுக்கு நாம் Quantity time (அதிக நேரம்) ஒதுக்கமுடியாது. ஆனால் (தரமான நேரம்) Quality time கொடுக்கமுடியும்.


நேரமற்ற அந்தத் தொழிலதிபர்கூட ஒரு நிமிடமேனும் ஒதுக்கி, ``என்னம்மா! சாப்பிட்டியா? உடம்புக்கு என்ன பண்ணுது? மருமகள் நல்லா கவனிச்சிக்கிட்டாளா? உனக்கு வேறு என்ன தேவை?'' என்று வாஞ்சையான மொழிகளில் அன்பான தொனியில் நான்கு கேள்விகளை மாற்றிப் போட்டும் புரட்டிப்போட்டும் தினமும் கேட்டால் போதும். அம்மாவுக்குக் கொள்ளாது.


``நேரமே இல்லாத புள்ளை. ஆனாலும் பாசத்துக்குக் குறைவில்லை'' என்று, வருகிற போகிறவர்களிடமெல்லாம் மகன் புராணம் பாடுவார்.


``எவ்வளவு வேலையிருந்தாலும் என்கிட்ட நின்னு நாலு வார்த்தை பேசாமப் போகமாட்டான்'' என்றும் சேர்த்துக் கொள்ளத் தவறமாட்டார்.


மலேசியத் தமிழர்கள் பலரிடம் ஒரு நல்ல பழக்கம். பிள்ளைகள் காலையில் பள்ளி, கல்லூரிக்குக் கிளம்புவதற்கு எனச் சாப்பிட அமர்வார்கள் அல்லவா? அப்போது அப்பாவும் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவார். அதெப்படி இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவது என்று கேள்வி கேட்கமாட்டார். பிள்ளைகளிடம் பேசக் கிடைக்கிற நேரம், பிள்ளைகளுடன் செலவழிக்கிற நேரம் இதுமட்டும்தான்.


அம்மா என்றால் காலைத்தொட்டு ஆசீர்வாதம். பிள்ளை என்றால் நெற்றியின் உச்சியில் ஒரு முத்தம். இதற்கு ஆகும் ஒரு நிமிடத்தில் டன் டன்னாய் அன்பை வெளிப்படுத்திவிட முடியுமே!


ஒரு டை கட்டுகிற நேரம்; அதை அவிழ்க்கிற நேரம்; சாக்ஸ், ஷூ மாட்டும்; கழற்றும் நேரம் இருக்கிறதே, இதற்கு ஆகும் ஒரு நிமிடத்தில்கூட குடும்ப உறுப்பினர்களிடம் நம் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்த முடியும்!


இதற்குக்கூட நேரமில்லை என்பவர்களை எப்படி வெற்றிகரமான மனிதர்களாக ஏற்கமுடியும்?.


நன்றி, குமுதம்.

10 June 2008

எடிஎம்மில் கள்ள ரூபாய் நோட்டுகளாம்....

|0 comments
மக்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குடையது வங்கிகள் மட்டுமே. ஆனால் இப்போழுது அந்த நம்பிக்கையும் சிறிது சிறிதாக சில வங்கிகளின் மோசமான செயல் பாடுகளால் குறைந்துவருகிறது. பல தனியார் மற்றும் அரசுடமை வங்கிகளில் கூட இதுபோன்ற சில குறைபாடுகள் உள்ளன. இந்த மாதிரியான சில சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை போர்காள அடிப்படையில் தீர்க்கப்பவேண்டும். அப்போது தான் மக்களுக்கு வங்கிகளின் மீதான நம்பிக்கை குறையாமல் இருக்கும்...

என்ன கொடுமை இது...


துத்துக்குடில் ஒரு தனியார் வங்கி எடிஎம்மில் 500 ரூபாய் கள்ள நோட்டு ஒருவருக்கு வந்துள்ளது. மேலும் இதை பற்றி அறிய கிளிக்குங்கள்.

இதில் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக wiki.pkp.in மூலம் அறிந்தேன்...
அதை பற்றி மேலும் அறிய கிளிக்குங்கள்

9 June 2008

வேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்...

|1 comments
இணைய தளங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவும் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு இலவச வலைப்பதிவுத் தளங்களை பல இணையதள நிறுவனங்கள் உருவாக்கி அது இன்று மிகப்பெரிய ஒரு ஊடகமாகவே வளர்ந்து நிற்கிறது.

பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது. மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.

பிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

நாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.

ஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.

வலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.




நிறுவனங்களும், வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்களும் தற்போது தேடல் எந்திரம் மூலம் பிளாக்குகளுக்கு வலை விரிக்கிறது. வலைப்பதிவுகள் ஒருவர் குணாதிசயத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் ஒருவரது சிந்தனைகள் வெளிப்படும் வலைத்தளத்திலிருந்து ஒரு நிறுவனத்தின் பணிப் பண்பாட்டிற்கு அந்த நபர் சிறந்தவரா இல்லையா என்று கண்டு கொள்ளலாம் என்று ஒரு மேலை நாட்டு வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் சமீபமாக இரண்டு நபர்களை அவர்களது வலைப்பதிவுத் தளங்களை பார்த்தே பணித் தேர்வு செய்துள்ளது.

வேலை வாய்ப்பின் சிறந்த கருவியாக மாறும் வலைப்பதிவுத் தளங்கள் உங்களுக்கு பொருத்தமான நிறுவனத்தையும் அடையாளம் காட்டக்கூடியது. அதனால் வலைப்பதிவை நன்றாக பராமரிப்பது அவசியம். அனாவசியமான சச்சரவுகளையும் அக்கப்போர் பேச்சுக்களையும் பதிவு செய்வதை தவிர்த்து. ஆரோக்கியமான விஷயங்களை எழுதினால் வேலை வாய்ப்புக்கான ஒரு வாசலாகவே அது அமையும்.

தற்போது வேலைக்காகவே பிளாக் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் ஆங்காங்கே பெருகத் தொடங்கியுள்ளன.

8 June 2008

மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures பார்ட் 1

|5 comments
என்ன எனது போன மதுரை விரைவில் மெட்ரொ நகரமாக மாறும்... பதிவை படித்து மலைத்துவிட்டீர்களா??? இதையும் படியுங்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures...

விமான போக்குவரத்து...

சுமார் 18000 ச.அடி, ஐந்து தானியங்கி படிக்கட்டுகள் (Escalators), ஏழு லிப்ட், நவீன ஸ்கெனிங் வசதி, முற்றிலும் CCTV’s, முழுவதும் கண்ணாடியாலான வெளிபுற தோற்றம் இவை அனைதும் அடங்கிய முற்றிலும் நவீனமையமான கட்டிடம் ரூ.150 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம்.

1. ஓடுதளம் 6000 அடியிலிருந்து 7500 அடியாக விரிவாக்கப்படுகிறது அதற்கு அடுத்த படியாக 9000 அடி மற்றும் 12500 அடியாக விரிவாக்கப்பட உள்ளது.

2. Paking Bay 3லிருந்து 6ஆக விரிவாக்கப்பட உள்ளது. ஒரு புதிய parking bay கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

3. மதுரை விமான நிலையத்தில் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையம் ரிலையன்ஸ்-கிரின் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.

4. இந்தியன், ஸ்ரீலங்கன், மலெசியன் விமான நிறுவனங்கள் விரைவில் மதுரையிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கும், Gulf நாடுகளுக்கும், ஐரோப்பா நாடுகளுக்கும் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது. இந்த நிறுவனங்கள் திருச்சியை விட மதுரையில் போக்குவரத்தை தொடங்க ஆவலோடுள்ளன.

5. சின்ன ஒடைப்பு அருகே சுமார் 2கிமீ Ring Road மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கா அகற்றப்பட உள்ளது. அந்த வழி CIRAC மருத்துவமனையிலிருந்து குசவகுண்டு மற்றும் வளையன்குளத்திற்க்கு திருப்பி விடப்படுகிறது.

இதை போல் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructureல் சாலை போக்குவரத்து பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

7 June 2008

மெடிக்ளைம் பாலிசி

|0 comments
அவசர காலத்தில் மருத்துவச் செலவுகளுக்குக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோருமே மெடிக்ளைம் எடுக்கிறார்கள். ஆனால், இன்ஷ¨ரன்ஸ் நிறுவனங்கள் செய்யும் குழப்பங்கள் இந்த மெடிக்ளைம் பக்கம் மக்களை வரவிடாமல் செய்கின்றன. ஆனால், சமீபத்தில் உச்சநீதிமன்றம் மெடிக்ளைம் தொடர்பாகக் கொடுத்திருக்கும் தீர்ப்பு குழப்பங்களைத் தவிர்க்கும் சூழலை உருவாக்கி இருக்கிறது.


யுனைடெட் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தில் 1995-ம் ஆண்டு மெடிக்ளைம் எடுத்த ஒருவர், ஒழுங்காக பிரீமியம் செலுத்தி வந்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதயநோய் தொடர்பாக சிகிச்சை


எடுத்த அவர், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்துகொண்டிருக்கிறார். அதற்கான மருத்துவ க்ளைமை இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் கொடுத்திருக்கிறது. அதன்பிறகு 2001-02 காலகட்டத்தில் இந்த நோய் தொடர்பாக சிகிச்சை எடுத்ததோடு 2002-ல் பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். ஆனால், அதற்கான க்ளைமைத் தர மறுத்ததோடு, 2003-ல் அவர் பாலிசியை புதுப்பிக்கச் சென்றபோது மறுத்தும்விட்டது இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம்.


அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில்தான், 'மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டியது அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடமை. பாலிசி எடுப்பதற்கு முன் நோய் இருந்ததாகச் சொல்லி க்ளைம் கொடுக்க மறுப்பதோ, முந்தைய சிகிச்சைகளைக் காரணம் காட்டி பாலிசியைப் புதுப்பிக்க மறுப்பதோ கூடாது' என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது.


இந்தத் தீர்ப்பு பற்றியும் மெடிக்ளைம் பெறுவது பற்றியும் பொதுத்துறை இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற தியாகராஜனிடம் கேட்டோம். இப்போது எஸ்.பி.டி. இன்ஷ¨ரன்ஸ் பார்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.


''பாலிசி எடுப்பவர்கள் எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்கும் என்பதைக் கவனத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். எப்போதுமே புதிதாக பாலிசி எடுப்பவர்கள், அதை எடுப்பதற்கு முன் உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறும்போது க்ளைம் பெறமுடியாது.


பாலிசி எடுத்த பிறகும் கூட குறிப்பிட்ட காலத்துக்கு நோய்க்கான சிகிச்சைக்கு க்ளைம் பெறமுடியாது. இதற்கான அடிப்படைக் காரணமே, 'அந்த குறுகியகாலத்தில் நோயின் தாக்குதல் ஏற்பட்டிருக்க முடியாது. அது பாலிசி எடுக்கும் முன்பே உள்ள நோயின் தாக்கமாகத்தான் இருக்கும்' என்பதுதான்! பாலிசி எடுக்கும்போது ஒருவருக்கு ரத்தக்கொதிப்பு இருக்கிறது, இதனால் பாலிசிகாலத்தில் அது ஹார்ட் அட்டாக் வர வழி வகுக்கும் எனமுடிவு செய்து நிறுவனம் பாலிசி தர மறுக்கவோ அல்லது அதற்கு க்ளைம் தரவோ மறுக்கமுடியாது. ஏனென்றால் ஹார்ட் அட்டாக் ரத்தக்கொதிப்பினால்தான் வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.


ஏற்கெனவே பாலிசி எடுத்து அதை புதுப்பித்துக்கொண்டிருப்பவர் புதுப்பித்த அடுத்தநாளே சிகிச்சைக்குச் செல்லலாம். க்ளைம் உண்டு. இந்த வழக்கில் க்ளைம் மறுக்கப்பட்டவர் இந்த வகையைச் சேர்ந்தவர். அதனால், அவருக்கு பாலிசிக்கு முன்புள்ள நோய் என்பது செல்லுபடியாகாது.


ஆனால், நிறுவனம் அனுமதித்த சிகிச்சை பெறும் நோய்களுக்கான பட்டியலில் உள்ளவற்றுக்கு மட்டுமே மேலே சொன்னவை பொருந்தும். இதைத்தவிர, சிகிச்சை பெறமுடியாத நோய்கள் பட்டியல் எதுவென்றும் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் தியாகராஜன்.


நன்றி, விகடன்.

5 June 2008

புதிய யமஹா பைக்...

|3 comments
இப்போது பைக் பிரியர்கள் எங்கே சந்தித்து கொண்டாலும் முதலில் பேசுவது... யமஹா ஆர்15 பைக் பற்றித்தான். இளைஞர்களின் உற்சாகத்துக்கு மேலும் பலம் சேர்ப்பது போல, யமஹா நிறுவனம் சென்னையில் இந்த புதிய ஆர்15 பைக்கை காட்சிக்குவைத்திருக்கிறது. இந்தக் கனவு பைக்கில் 'அட' போட வைக்கும் சமாசாரங்கள் ஏராளம்!


சென்னையில் இருக்கும் யமஹா டீலர்கள் அத்தனை பேரும், இந்தக் கனவு


பைக்குக்கான முன்பதிவை ஆரம்பித்துவிட்டதை அடுத்து, ஷோரூம்களில் செம கூட்டம்!


இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வாகனத்தின் பவர் என்னவென்று தெரியாது. விலை எவ்வளவு எனத் தெரியாது. எப்போது விற்பனைக்கு வரும் என்றுகூட யாருக்கும் தெரியாது! இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க, களத்தில் இறங்கிச் சேகரித்த தகவல்கள் இதோ...


ஏரோடைனமிக் டிசைன், கிளிப் ஆன் ஹேண்டில்பார், ஸ்போர்ட்ஸ் பைக் ஃபேரிங், 150சிசி பைக்குகளில் முதன்முறையாக 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், பின்பக்கமும் டிஸ்க் பிரேக், ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், ஆயில் கூல்டு இன்ஜின் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, இந்த யமஹா ஆர்15. இவ்வளவு வசதிகள் இருப்பதால், இதன் விலை சென்னையில் ஒரு லட்ச ரூபாய் என்று யமஹா தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.


சென்னையில் இந்த ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் யமஹா ஆர்15 விற்பனைக்குக் கிடைக்கும். 'இந்த பைக்கின் சக்தி என்ன என்பதை இடியே விழுந்தாலும் இப்போதைக்குச் சொல்ல மாட்டோம்' என அடம்பிடிக்கிறார்கள் யமஹா நிறுவனத்தினர். இதன் சக்தி 20 - 22 bhp இருக்கும் என வெளியே பேச்சுகள் இருந்தாலும், நமக்குக் கிடைத்த தகவலின்படி இதன் சக்தி 16 bhp இருக்கும் எனத் தெரிகிறது.


இந்த பைக்கின் வருகையால், டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி 160 எஃப்ஐ பைக்கை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த பைக்குடன் போட்டிபோடுவதற்காக பஜாஜ் நிறுவனமும் பல அதிரடித் திட்டங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறது!

நன்றி, விகடன்.

3 June 2008

கோடீஸ்வரராக ஒரு மந்திரவார்த்தை!

|1 comments
ஒரு மந்திர வார்த்தை சொல்லித் தருகிறோம்... அதை ஒருமுறை உச்சரித்தால் போதும்... நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்! என்ன அந்த மந்திர வார்த்தை என்ற பரவசம் பொங்குகிறதா... இதோ குறித்துக்கொள்ளுங்கள்...
திட்டமிடல்!
'உங்கள் முதல் சம்பளத்தில் எத்தனை ரூபாயைச் சேமிப்புக்கு ஒதுக்கினீர்கள்?' என்று நாற்பதைக் கடந்த வயதில் இருக்கும் பலரிடம் கேட்டால், எத்தனை பேரிடம் உறுதியான, தெளிவான பதில் இருக்கும்? குத்துமதிப்பாகக் கூடச் சொல்லமுடியாமல் தடுமாறுபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.
போனது போகட்டும்... இனியாவது தெளிவாகத் திட்டமிடுவோம்.
வருமானம் எவ்வளவு... செலவு எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியும்
சூழ்நிலையில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் எவ்வளவு ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்தாக வேண்டும். இன்றைக்கு முப்பது வயதில் இருக்கும் ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது என்றால் அந்தக் குழந்தையைக் கல்லூரியில் சேர்க்கும்போது அவருக்கு ஐம்பதை நெருங்கும் வயதாகி இருக்கும். அன்றைக்கு லட்சங்கள் தேவைப்படும் என்றால் எங்கே போகமுடியும். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளலாம் அல்லவா!


அதற்கான முயற்சிதான் இது.


ஒற்றை வரியில் திட்டமிட வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லமுடியாது. ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமாக திட்டமிட வேண்டும். எந்த வயதுப் பிரிவினருக்கு எந்த அளவு ஒதுக்கீடு என்பதை வைத்துதான் அவருடைய எதிர்காலம் சுகமான பயணமாக அமைய வழிகாட்ட முடியும்.


உதாரணமாக, 25 வயதில் உள்ளவர் அதிக ரிஸ்க் எடுக்கமுடியும். அதனால், ரிஸ்க் உள்ள பங்குச் சந்தையில் அதிக முதலீடுகளைச் செய்யமுடியும். இப்போது இழந்தாலும் அதனை மீண்டும் சம்பாதிக்கும் திறனும், வயதும் உள்ளது. அதுவே 55 வயதுள்ளவர் இந்த ரிஸ்க்கை எடுக்கமுடியாது. இதுவரை சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பாகவும் அதேசமயம் ஓரளவு வருமானம் உள்ள திட்டமாகவும் தேர்வு செய்யவேண்டும்.


வெறுமே இந்தத் திட்டத்தில் இந்த அளவு பணத்தை போட்டு வையுங்கள் என்று பொத்தாம் பொதுவாக வழிகாட்டாமல், முதலீட்டில் உள்ள ரிஸ்க், அதில் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன், அது குறைந்தால் முதலீட்டுத் திட்டமிடலை மாற்றிஅமைக்க வேண்டிய விதம் என்று சகல திசைகளிலும் வழிகாட்டுகிறார் மகாதேவன்.
திட்டமிடுதலுக்கு முன்னரே சில விஷயங்களை நாம் செய்து முடித்திருக்க வேண்டும். அதில் முக்கியமானது இன்ஷ¨ரன்ஸ்.


அடிப்படைத் தேவையான டேர்ம் பாலிசிகளும் மெடிக்ளைம் பாலிசிகளும் எடுத்துக்கொண்ட பிறகு அதற்குச் செலவிடும் பிரீமியத் தொகை போக, மீதமுள்ள தொகைக்குத்தான் நிதித் திட்டமிடலைச் செய்யவேண்டும்.


இந்தத் திட்டமிடல் பட்டியலைப் படித்து முடிக்கும்போது, இருப்பதிலேயே அதிக ரிட்டர்ன் தரக்கூடிய முதலீடான ரியல் எஸ்டேட் பற்றிச் சொல்லப்படவே இல்லையே என்று தோன்றலாம். ஆனால், மாதாமாதம் முதலீடு செய்யும் வகையில் சொல்லப்படும் இந்த நிதித் திட்டமிடலில் ரியல் எஸ்டேட் முதலீட்டைச் சேர்க்க வழியில்லை. அது மொத்தமாகச் செய்யப்பட வேண்டிய முதலீடு. எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் மியூச்சுவல் ஃபண்ட் வரும்போது அதில் முதலீட்டைச் செய்து பயன் அடையலாம்.


ஒருவர் 25 வயதில் முதலீடுகளை ஆரம்பித்துவிடுவது நல்லது. அப்போதிலிருந்து சிறிய தொகையைச் சேமித்தாலே அதிக வருமானத்தைப் பெறமுடியும். அதுவே 35 வயதில் தொடங்கினால் ரிஸ்க் கொஞ்சம் அதிகரிக்கும். கிடைக்கும் தொகையும் குறைவாகவே இருக்கும். அதுவே 45 வயதில் தொடங்கினால் முதலீட்டுக்கலவையில் கடன் திட்டங்களே அதிக சதவிகிதம் இடம் பிடிக்கும். அதனால் அதிக வருமானம் கிடைப்பது அரிதாகிவிடும்.


அடுத்ததாக ஒரு முதலீட்டுக்கலவையைத் தேர்வு செய்துவிட்டு அதையே காலம் முழுவதும் வைத்திருக்கக்கூடாது. சிலசமயம் சில முதலீடுகள் எதிர்பார்த்த அளவு வருமானத்தைக் கொடுக்காமல் இருக்கலாம். அப்போது நிதி ஆலோசகர்களுடன் துணையுடன் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, இந்த முதலீட்டுப் பழக்கத்தை தொடரவேண்டும். மாதா மாதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது சந்தையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் முதலீட்டைப் பாதிக்காது. மேலும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு எளிதாகவும் இருக்கும்.


மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சேமிக்கமுடியும் என்பவருக்கான முதலீட்டு திட்டம் இது! பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடன் திட்டங்கள், கமாடிட்டி என கலந்து செய்வதால் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வருமானம் 25, 35, 45 வயதில் இருக்கவேண்டிய முதலீட்டுக் கலவை சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது. 8


ஈக்விட்டி முதலீடுகள்
அதிக வருமானம் தரும் ஈக்விட்டி முதலீடுகள். பங்குச் சந்தையில் நேரடியாக ஈடுபடுவதைவிட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. 300&க்கும் மேற்பட்ட பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சராசரியாக முப்பது சதவிகிதத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் கொடுக்கும் திட்டங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முதலீடு செய்யும் அளவை வயதுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.


25 வயதில் ஆரம்பிக்கும்போது 45 சதவிகிதமாகவும், அதுவே 35 வயது வரும்போது முதலீட்டை 40 சதவிகிதமாகவும் முதலீடு செய்ய வேண்டும். அதுவே 55 வயதாகும்போது 30 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்வது நல்லது.


கடன் திட்டங்கள்
கடன் திட்டங்களில் வங்கி டெபாசிட்கள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், அரசு கடன் பத்திரங்கள் என பல உள்ளன. இவை மிதமான ரிஸ்க் உள்ளவை. எனவே முதலீட்டில் ஒருபகுதியை இதுபோன்ற மிதமான ரிஸ்க் உள்ள திட்டங்களிலும் செய்வது நல்லது.


வயது குறைவாக இருக்கும்போது கடன் திட்டங்களில் குறைவான சதவிகிதமும், வயது அதிகமாகும்போது அதிக சதவிகிதமும் முதலீடு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


கமாடிட்டி
தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வதும் அவசியம். தங்கத்தை நகைகளாகவோ அல்லது நாணயங்களாகவோ முதலீடு செய்யலாம். இவற்றின் வருமானம் குறைவு என்றாலும் எளிதாக விற்று பணமாக்கும் வசதி இருக்கிறது. இதுதவிர, தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்தியாவில் வந்துவிட்டன. இவற்றிலும் முதலீடு செய்யலாம். இவை நேரடியாகத் தங்கத்தை வாங்குவதை விட பாதுகாப்பானது. இந்த வசதிகள் எல்லாம் இருந்தாலும் முதலீட்டை எப்போதும் பத்து சதவிகிதமாக வைத்துக்கொள்வது நல்லது.


கோடீஸ்வரர் ஆக வாழ்த்துக்கள்!


குறிப்பு: பங்கு சார்ந்த திட்டங்களின் எதிர்கால வருமானம் பற்றி உறுதியாகச் சொல்லமுடியாது. முந்தைய செயல்பாட்டின் அடிப்படையில் 15% என்ற பாதுகாப்பான அளவிலேயே கணக்கிடப்பட்டுள்ளது.
கடன் திட்டங்களில் வரி எடுத்துக்கொள்ளப்படவில்லை. வரிவிதிப்பு தனிநபர் வருமானத்துக்கு ஏற்ப மாறுபடும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் வருமானம் அனைத்தும் கடந்த காலத்தில் கொடுத்துள்ளவை. இதுவே வரும் காலத்திலும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே திட்டங்களைத் தேர்வு செய்யும் முன் நிதி ஆலோசகர்களைக் கலந்து உங்களுக்கு ஏற்ற முதலீடுகளாகத் தேர்வு செய்வது நல்லது.

நன்றி, விகடன்.

2 June 2008

மதுரைக்காரங்க எல்லாரும் மறக்காம படிங்க...

|10 comments
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகரமான மதுரை ஒரு மெட்ரோ நகரமாக மாறும் என்பதற்கு சில நம்பத்தகுந்த காரணங்கள்...


1.ரூபாய் 100 கோடி முதலீட்டில் மல்டிபிலேக்ஸ், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் ஆர்கேடுகள் ETL கான்வெண்ஸன் சென்டர் மற்றும் ஷாப்பிங்மால் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..


2. சுமார் 2500 ஏக்கர் நிலம் மதுரைக்கு அடுத்துள்ள இளியார்பதி கிராமத்தில் சிப்காட் கையகப்படுதியுள்ளது.


3. மதுரைக்கு தெற்குபகுதியில் உள்ள சோலங்குரினி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் நிலம் ஆர்.ஆர் இண்டஸ்டிரீஸ் மற்றும் ஐடி டவுன்ஷிப்ற்காக கையகப்படுதப்பட்டுள்ளது. முதல் கட்ட வேலைக்கா வரைபடம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வேலை தொடங்ப்பட உள்ளது. அதில் 18000 குடியிருப்புகள் கொண்ட அப்பார்மென்ட், ஒரு மருத்துவமனை, இரண்டு மல்டிபிலேக்ஸ் மற்றும் இரண்டு மிகப்பெறிய ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளன. மேலும் 8மாடிகள் கொண்ட ஐடி பார்க் ஒண்றும் கட்டப்பட உள்ளன. மொத்த மதிப்பீடு ரூபாய்.4500 கோடி.

4. ELCOT நிறுவனம் 2000-10000 ஏக்கரில் மதுரையில் இண்டஸ்டிரியல் சிட்டி தொடங்கப்பட உள்ளது.

5. ரேஸ் கோட் சாலையில் சுமார் 1,60,000 ச.அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமான G+3 ஷாப்பிங் மால் சுமார் 500அடி முன்பக்க காலி இடத்துடன் கட்டப்பட உள்ளது.


6. சுமார் 100ஏக்கரில் டெக்ஸ்டைல் பூங்கா மதுரையில் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூபாய்.35 கோடி.


7. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் Fortune ITC Welcome குரூப்ஸ் உடைய ரிசாட்ஸ் தொடங்கப்பட உள்ளது.


8. மதுரைக்கு வெளியே சினிமாக்ஸ் மற்றும் அட்லாப்ஸ் மல்டிபிளக்ஸ் அரங்குகள்.


9. பாரமெளன்ட் பைளட் பயிற்சிப்பள்ளி மதுரையில் தொடங்கப்பட உள்ளது.


10. புது நத்தம் சாலையில் பென்டாஸாப்ட்டுடைய விளையாட்டு தீம் பார்க் மற்றும் மாயாஜால் தீம் பார்க் மல்டிபிளக்ஸ் உடன் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.200 கோடி.


11.மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சிறுவர்களுக்கான அறிவியல் கோளரங்கம் தொடங்கப்பட உள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.25லட்சம்.


12. ஹேலிகாப்டர் போக்குவரத்து ராமேஸ்வரத்திலிருந்து கொடைக்கானலிற்க்கு முதல் கட்டமாக தொடங்கப்பட உள்ளது. பின்பு பழனி, கன்னியாகுமாரி, கோவை போன்ற இடங்களுக்கு தொடங்கப்பட உள்ளது.


13. மதுரைலிருந்த்து 20கி.மீ தொலைவில் வடமலையான் மருத்துவமனை டிரஸ்ட் மற்றும் கமூதி நாடார் சங்கம் இனைந்து காமராஜ் நினைவு மருத்துவ கல்லூரி சுமார் 150 ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது. 300 படுக்கை வசதியுடன் முதல் தர மருத்துவமனை மற்றும் 150 M.B.B.S. இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு வருடத்தில் அனைத்து வேலைகளும் முடிவடையும். 2009ல் அட்மிஷன் தொடங்கப்பட உள்ளது.


14.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கம் பழைய அன்னா பேருந்துந்துநிலையத்தில் தொடங்கப்பட உள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட G+6 கட்டிடம். ரூ.35கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


15. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு எதிற்புறம் சுமார் 260 ஏக்கரில் ஐடி தொழில்நுட்ப பூங்கா அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட உள்ளது.


16. அவனியாபுரம் ரிங் ரோடு அருகில் சுமார் 125 ஏக்கரில் 15000 குடியிருப்புகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட் 9மாடிகளுடன் மிகப் பிரமாண்டமான கட்டிடத்துடன் ஷஹாரா சிட்டி ஹோம்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளது.


17. அரிஹாந்த் பவுன்டேஷன் மதுரையில் குடியிருப்பு டவுன்ஷப்பிக்கா 21ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளது.


18. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்திய ஆஸ்திரேலியா சூரிய ஆற்றல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


19.ரிலயன்ஸ் பிரஷ் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 11பழைய திரையரங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவை அனைதும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட காய்கரி மற்றும் இரைச்சி மார்கட் ஆக தொடங்கப்பட உள்ளது.


20. COGNIZANT, IBM, DLF , INFOSYS ஐடி பார்க் தொடங்கப்பட உள்ளது. மேலும் இவை தமிழ் நாட்டில் தென்பகுதியில் உள்ள கல்லூரிகளுடன் டைஅப் வைத்து கொள்வதற்க்காக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.


21. மாட்டுதாவனி அருகே சுமார் 1,00,000 ச.அடியில் ஐடி பார்க் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.


22. அரவிந்த் கண் மருத்துவமனை கண் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் (Ophthalmic university) தொடங்கப்பட உள்ளது.


23. கூடல் நகர் அருகில் மிகப்பிரமாண்டமான வெர்ஹவுசிங் காம்பிளக்ஸ் 5ஏக்கரில் தொடங்கப்பட உள்ளது.


24. இரண்டு தனியார் நிறுவனங்கள் மதுரையில் இடங்களை வாங்கி குவித்துள்ளனர். 1. சென்னையை சேர்ந்த CEEDEEYES நிறுவனம். 2. துபாய்யை சேர்ந்த ETA ஸ்டார் நிறுவனம்.


25. நவ2007 முதல் பாஸ்போர்ட் அலுவலகம் மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது.


26. ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் திரையரங்கம் GV நிறுவனம் வாங்கி மிக விரைவில் GV ஸ்டுடியோ சிட்டி தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், இரண்டு 3 நட்ஷத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், சென்னயை சில்க் மற்றும் ஹோட்டல் சரவணா பவன் தொடங்கப்பட்டு உள்ளது.


27. ரூ.3கோடி மதிப்பீட்டில் YMCA இன்டர்னேஷனல் சென்டர் தொடங்கப்பட்டு உள்ளது.


28. மதுரை விமானநிலையத்திற்கு அருகில் 80 அறைகளுடன் AITKER SPENCE ஹோட்டல் தொடங்கப்பட்டு உள்ளது.


29. சுமார் 30ஏக்கர் நிலம் கோச்சடையில் டைடல் பார்க்கிற்ககா ஒதுக்கப்படுள்ளது.


30. மாடகுலத்தில் சிறுநீரக டையாலசிஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்பட்டு உள்ளது.


31. அப்போலோ மருத்துவமனை, மதுரை மற்றும் BASKERSFIELD , கலிபோர்னியா இணைந்து சகல வசதிகளுடன் கூடிய இரத்தம் மற்றும் புற்றுநோய் மையம் தொடங்கப்பட உள்ளது.


32. உலக தரத்துடன் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் கேர் சென்டர் தொடங்கப்பட உள்ளது.


33. சுமார் 10கோடி செலவில் வண்டியூரில் உள் சறுக்கு விளையாட்டரங்கம் மற்றும் பார்க் தொடங்கப்பட உள்ளது.


33. மதுரையில் பூக்கள் ஏற்றுமதிக்காக அக்ரி ஏற்றுமதி ஜோன் தொடங்கப்பட உள்ளது.


34. ஹ்ச் சி எல் நிறுவனம் டிஜிட்டல் லைப் ஸ்டைல் வளாகத்தை தொடங்க உள்ளது.


35. சுமார் 120கோடி மதிப்பீட்டில் தோப்பூரில் AIIMS மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.


36. மதுரை மாநகராட்சியால் விலங்கியல் பூங்கா அழகர்கோவில் அருகில் தொடங்கப்பட உள்ளது.


37. இந்தியாவில் உள்ள அனைத்து முன்னனி நகை கடைகளும் மதுரையில் தன் கிளைகளை ஏற்கனவே தொடங்கி உள்ளது.


மேலும் இதில் சொல்லப்படாத சில விரிவாக்கங்களும் சில தொழில் நுட்ப பூங்காக்களும் சில மருத்துவமனைகளும் அமைக்கப்படலாம்.


இதை போல் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructure பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...

1 June 2008

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

|2 comments
செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.

அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.

அதாவது வாடிக்கையாளர்கள் பேக்-அப் தேவையான தரவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுபிறகு ஜிபிஆர்எஸ் வழி சர்வரை அடையும் அதன் பிறகு ஒரு டிஜிட்டல் அறையில் சேமிக்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும்.


இது பாதுகாபானதே. ஏனெனில் பயனர் அடையாளம் மற்றும் பாஸ்வேர்டு இருந்தால் மட்டுமே இந்த தகவலை அணுக முடியும். ஒவ்வொருவரும் இந்த சேவையை தங்கள் செல்பேசியிலேயே ஏற்படுத்தி கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அல்லது செல்பேசி இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் மூல்மாகவோ கோரிக்கை அனுப்பி இந்த சேவையை செல்பேசியில் உருவாக்கிக் கொள்ளலாம்.

சிம் கார்டிலிருந்து தரவுகளைப் பெறும் மென்பொருளைக் காட்டிலும் இந்த மென்பொருள் அதிக பயனுள்ளது. அதாவது இதில் அழிக்கப்பட்ட தரவுகளை கூட வாடிக்கையாளர்கள் செல்பேசி தொலையும் பட்சத்தில் திரும்பப் பெறலாம். தங்கள் தொலைந்த செல்பேசியில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்கள், அழித்த தகவல்கள் என்று அனைத்தையும் செல்பேசி தொலைந்தாலும் ஒரு நெட்வொர்க் வசதி மூலம் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் ஒரு செல்பேசி சாதனத்திலிருந்து வேறு செல்பேசி சாதனத்திற்கு மாறினால் கூட தகவல்களை எந்தவித சிரமமும், தடையும் இன்றி புதிய செல்பேசிகளில் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த தரவு மீட்பு பயன்பாட்டுச் சேவையை பயன்படுத்தும் 3வது நிறுவனம் பார்தி ஏர்டெல் ஆகும். மலேசியாவின் மேக்சிஸ், இந்தோனேஷியாவின் இந்தோஸாட் ஆகிய 2 நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.