
நண்பர் தமிழ் பையன் கடந்த பதிவில் பின்னூட்டத்தில் "உங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய
Tamilish.com-ல் பகிரவும்" என்று கூறியிருந்தார். நல்ல விஷயங்கள் பலருக்கும் பயன்படட்டுமே என்ற கூறினார் போலும்.
உடனே அந்த முகவரிக்கு சென்று எனக்கான கணக்கை தொடங்கி எனது வலைப்பக்க முகவரியை அங்கு பகிர்ந்தேன். பகிர்ந்த மறு நொடி உங்கள் பதிவு மாற்றப்பட்டது என்ற தலைப்பில் ஒரு மின் அஞ்சல் வந்தது அதில்
"KRICONS அவர்களுக்கு, வணக்கம்! தங்களின் பதிவுகளை Tamilish-il பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. தாங்கள் Tamilish-க்கு புதியவர் என்பதால் சில தகவல்கள் தர விரும்புகிறேன். 1. தாங்கள் Submit செய்யும் போதும் தங்கள் தளத்தின் Home Page Url (
http://www.kricons.co.cc/) submit செய்கிறீர்கள். அதற்கு மாறாக எந்த தலைப்பை submit செய்கிறிர்களோ அந்த URL கொடுக்கவும். உதாரணத்திற்கு \"Firefoxல் Mouseன் விளையாட்டுகள்\" இந்த பதிவு Sumbit செய்யும் போது, இந்த
http://www.kricons.co.cc/ URL Submit செய்ய வேண்டாம். அந்த பதிவுக்குரிய பிரத்யேக URL
http://kricons.blogspot.com/2008/08/firefox-mouse.html Submit செய்யவும்.அப்போதுதான் tamilish வாசகர்களுக்கு உங்கள் பக்கத்தை படித்து அதை பற்றி விமர்சிக்க வசதியாக இருக்கும். இந்த விளக்கம் தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். Submit சம்பந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு இந்த
http://www.tamilish.com/about/en பக்கத்தில் பதில்கள் உள்ளன. அதை பார்க்கவும். மற்றும் Tamilish தளத்தில் அடுத்தவர் பதிவுகளை வாசித்து, வாக்களித்து, உங்கள் கருத்துக்களையும் தெரியபடுத்தவும். மேலும் சந்தேகங்கள் இருந்தால், இந்த mail-க்கு பதில் அனுப்பவும். அல்லது
service@tamilish.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும். நன்றியுடன், அருண், Tamilish.com"
என்ன ஒரு அக்கறையுடன் இந்த பதில். ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே நான் கடைசியாக எழுதிய மூன்று பதிவுகளை மட்டும் அந்த வலைத்த்ளத்தில் பகிர்ந்தேன்.
என்ன ஒரு ஆச்சரியம் கடந்த இரு வாரங்களாக எந்த ஒரு புதிய பதிவையும் எழுத முடியவில்லை. அனாலும் எனது பக்கத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 200 பேர். முன்பெல்லாம் சராசரியாக 50 பேர் மட்டுமே. இது எனக்கு உற்ச்சாகமாக உள்ளது.
இதை பார்க்கும் போது நண்பர் பிகேபி ஒரு முறை " உங்கள் வலைப்பக்கத்தில் வருபவர்களுக்கு சரியான தீனி கிடைத்து விட்டால் நிச்சயம் மறுபடியும் வருவார்கள்" எவ்வளவு உன்மை உள்ளது இதில்.
நீங்கள் எதிர் பார்க்கும் தீனியை விட நிச்சயம் கொஞ்சம் அதிகமாகவும் அதே சமயம் ஜீரணிக்கும் படியும் தொடர்ந்து எழுதுவேன்