19 January 2009

மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில்

இதை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கைபேசியில் காதல் டிப்ஸ்களுக்கு LOVE என டைப் செய்து ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பசொல்லி SMS வரலாம் அதற்கு வெறும் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். இவை காதலுக்கு மட்டும் இல்லை இது போல தினசரி உங்களுக்கு SMS மூலம் உங்கள் கைபேசிக்கு வரும் தகவல்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு வகை செய்திக்கும் நீங்கள் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கைபேசி பில் ஏகிறிவிடும்.


இந்த அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக www.mytoday.com என்ற முகவரியில் உங்களுது கைபேசி எண்ணை பதிந்துவிட்டால் போதும். நீங்கள் விரும்பும் சேவையை இலவசமாக பெறலாம்.


என்னடா தலைப்பை பற்றி எழுதாமல் என்னமோ சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறான் என்று நினைக்கிறீர்களா??? இது ஒரு இலவச சேவை அதனால் இந்த தலைப்பில் இந்த செய்தி இலவசமாக.


மேலே சொன்ன அதே www.mytoday.com வலைத்தளம் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்களை உடனுக்குடன் உங்கள் கைபேசிக்கு SMS மூலம் தகவல் அனுப்புகிறது. இந்த சேவையை www.m3m.in வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது.


அப்பாடா இனிமேல் நீங்கள் எதிர்பார்க்கும் மின் அஞ்சல் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வந்துள்ளதா என்று இணைய வசதி இல்லாதோர் பிரௌசிங் சென்டர் தேடி உங்கள் பணத்தை செலவிட அவசியம் இல்லை.


இதற்கு www.m3m.in என்ற முகவரியில் உங்களை மின் அஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் பதிவு செய்யவும். உடனே உங்கள் கைப்பேசி எண்ணிற்கு கடவு சொல் அனுப்பிவைக்கப்படும். உடனடியாக உங்கள் கைப்பேசிற்கு ஒரு மின் அஞ்சல் முகவரி தரப்படும். அது உங்கள் கைப்பேசி எண்ணை ஒட்டியே இருக்கும். உதாரணமாக உங்கள் கைப்பேசி எண் 9842112345 என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் மின் அஞ்சல் முகவரி 919842112345@m3m.in என்று இருக்கும்.


இந்த மின் அஞ்சல் முகவரிக்கு(919842112345@m3m.in) உங்கள் மின் அஞ்சல்களின் பிரதிகளை (Copy) Forward செய்யுமாறு உங்கள் மின் அஞ்சலில்(name@gmail.com) செட் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கைப்பேசியில் உடனுக்குடன் வந்துவிடும்.


ஆனால் இந்த சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக. ஒரு வருடம் கழித்து வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். பிறகு பார்த்துக்கொல்லாம்.


மேலே உள்ள இரண்டு சேவைகளும் இந்தியாவில் உள்ள கைப்பேசி எண்ணிற்கு மட்டுமே. NRIகள் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்த நீங்கள் இந்தியா வரும் போது ஒரு Lifetime கார்டையும் ஒரு Second hand or குறைந்த விலை கைப்பேசியையும் வாங்கிகொண்டு சென்றால் உங்களுக்கு பயன் தரும். (ரோமிங்க்கில் இன்கம்மிங் SMS இலவசம்)

4 comments:

  • வேலன். says:
    19 January 2009 at 11:30 pm

    அட, நல்ல விஷயமாக இருக்கே...

    உங்கள் தலைப்பு பட்டியில் உள்ளது.

    நான் பார்த்து படித்து ரசித்த சில பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...
    ஏனென்றால்??? தேடலும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதுமே வாழ்க்கை! நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு.//
    உங்கள் கருத்தே எனதும்.பிறக்கும் போதும் கொண்டு வந்ததில்லை-இறக்கும் போதும் கொண்டுசெல்லபோவதில்லை. இடையில் வாழும் காலம் மட்டும் ஏன்? இருப்பதை கொடுத்துதவுவோம்.

    வாழ்க வளமுடன்:,
    வேலன்.

  • Anonymous says:
    2 February 2009 at 4:09 pm

    Hi,

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

    Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Thanks

  • This comment has been removed by the author.
    Anand says:
    2 April 2009 at 5:56 pm

    This comment has been removed by the author.

  • Anand says:
    2 April 2009 at 5:57 pm

    Now m3m sends only 5 mail alerts per day for free. If you want more, you need to pay.

    There is an alternative. We can use way2sms.com