சரி நீங்கள் பிளாக்யை கைப்பேசி பதிவை செய்துவிட்டீர்கள்!!!. நான் எப்படி செய்வது என்று கேட்பது புரிகிறது. இதோ வழி.
உலகின் பிரபலமான நாளிதழ்கள் PC Magazine, MIT Technology Review, Popular Mechanics, MacWorld, Lonely Planet, Reader’s Digest, etc போன்றவற்றை எப்படி இலவசமாக படிப்பது என்று உங்களுக்கு சொல்கிறேன். மேலும் இதில் உள்ள High-resolution படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கலாம்.
எப்படி???
சஃபாரி பிரொளசரை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு go to Edit -> Preferences -> Advanced and check the option that says "Show Develop menu in menu bar."
பிறகு Developயை கிளிக் செய்து User Agentல் Mobile Safari 1.1.3 - iPhoneயை செலெக்ட் செய்யவும்.
அவ்வளவுதான் உங்கள் சஃபாரியிலிரு்ந்து zinio.com/iphone திறக்கவும். பிறகு உங்களுக்கு பிடித்த நாளிதழ்களை இலவசமாக படிக்கலாம்
டிஜிட்டல் கேமிராவால் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும் போது அந்த கோப்பின் பெயர் Image048.jpg, Image049 etc., இப்படிததான் இருக்கும் அதனால் அந்த கோப்பின் பெயரை வைத்துக்கொண்டு எந்த ஒரு உருப்படியான தகவலையும் நம்மால் பெறமுடியாது.
ஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய அந்த கோப்பினை செலக்ட் செய்துகொண்டு F2 கீயை அழுத்தி அல்லது Right கிளிக் Renameயை செலக்ட் செய்து அந்த கோப்பின் பெயரை எடிட் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கோப்பாக F2 அழுத்தி பெயர் மாற்றா வேண்டுமானால் அது எவருக்குமே பிடிக்காத காரியம்.
அதனால் தான் அந்த கோப்புகள் அனைத்தயும் உங்களின் அர்த்தமுள்ள பெயர்களாக மாற்ற இதோ ஒரு எழிய வழி.
இந்த சுலபமான வழி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.
முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான அகராதி OXFORD Dictionary தான். பிறகு சில மென்பொருட்கள் வந்தன... அனால் அந்த மென்பொருட்களை நிறுவினால் தேவையில்லாத RAM மற்றும் கணினியின் பயன்பாட்டு வேகம் குறைவதால் சிலருக்கு பிடிப்பதில்லை.
அப்படி பட்டவர்களுக்காத்தான் Definr அறிமுகப்படுத்துகிறது நம்பமுடியாத அதிவேக ஆன்லைன் அகராதி. இதில் ஒரு வார்த்தைக்கான அர்த்தம் சராசரியாக 14மைக்ரோசெகன்ட்ஸ் வருகிறது என்று இவர்கள் வாக்குறுதியும் அளிக்கிறார்கள். இவர்கள் Ruby powered by Rails with MySQL செர்வரை பேக்எண்டாக பயன் படுத்துகிறார்கள். மேலும் சராசரியாக அந்த செர்வரில் 10000 வார்த்தைகள் cache மெமரியில் இருப்பதால் உடனுக்குடன் பதில்கள் வருவதாக கூறுகிறார்கள்.
இப்படி அதிவேக ஆன்லைன் அகராதி இருக்க நீங்கள் ஏன் Dictionary.com or Google Search define keywordயை பயன் படுத்தவேண்டும். நான் சொல்வது உண்மையா இல்லையா நீங்களே ஒரு முறை இந்த தளத்தை பார்வையிடயும்.
>> Visit Definr
உலகம் போகும் வேகத்தில் அதற்க்கு இணையாக நாமும் மாறித்தான் ஆகவேண்டும். மாற்றம் ஒன்றே என்றும் மாறாமல் இருப்பது.
உங்களது வலைப்பகத்தில் Googleலின் AdSense போன்று வேறு சில வருமானம் தரும் விளம்பரங்களை தர விருப்பமா???
இதோ உங்களுக்காகத்தான் இந்த பதிவு….
Google AdSense என்பது உலகின் மிகப்பெரிய விளம்பர நெட்வொர்க் ஆகும். அதை நமது வலைப்பக்கத்தில் நிறுவினால் நமது வலைப்பக்கத்தில் உள்ள வார்த்தைகளின் மூலம் அது சம்மந்தமாக விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் காட்டும். நமது வலைப்பத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும் கிளிக்கின் எண்ணிக்கையை பொறுத்து அந்த வலைப்பதிவர்க்கு வருமானம் கிடைக்கும்.
இப்போது இது போல வேறு சில விளம்பர நெட்வொர்க் நிறுவனங்கள்.
மேலும் இந்த நிறுவங்கள் மூன்று வகையாக வருமானத்தை தருகின்றனர். அவை CPA, CPC மற்றும் CPM.
Cost Per Action Ad Networks (CPA)
Cost Per Click Ad Networks (CPN)
Cost Per 1000 Impression Ad Networks (CPM)
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.
உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!
பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.
உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.
எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.
உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.
காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.
வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.
வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.
உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோ ரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.
DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,
உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது. 'இந்த பைக்குக்கு, இளம் பெண்களின் லிஃப்ட் தொந்தரவு நிச்சயம் இருக்கும்' என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.
ஸ்டார்ட் பட்டனைத் தட்டியவுடன், கொஞ்சம் தாமதித்துதான் ஸ்டார்ட் ஆகிறது. காரணம், பைக்கினுள் இருக்கும் சென்ஸார்கள், இன்ஜினில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்த பிறகுதான் ஸ்டார்ட்டர் மோட்டாரைச் சுழல அனுமதிக்கிறது. பைக் ஸ்டார்ட் ஆனவுடன் 'கீச்' சத்தம் காதைக் கிழிக்கிறது. சத்ததைக் கேட்டவுடன் தெருநாய்கள் தெறித்து ஓடிவிடும்.
முதல் கியரைத் தட்டியதும் தலையில் 'நங்'கென்று கொட்டியது போல வெறிகொண்டு பறக்கிறது. இந்த பைக்கை, பயபக்தியுடன் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. கிளட்ச்சைப் பிடித்து ஓட்ட உடம்பில் எக்ஸ்ட்ரா சக்தி வேண்டும். 160தீலீஜீ சக்திகொண்ட இந்த வேகப் பிசாசை ஓட்ட 'தில்' நிறைய வேண்டும். 6 ஸ்பீட் கியர் பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.
பிரேக்குகள் பிடித்த நொடியில் நிற்கின்றன. ஆனால், நீண்ட நேரம் ஓட்டினால், இன்ஜின் சூடு கால்களின் தொடை வரை ஏறுகிறது. 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை, வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் பைக் ரசிகர்களின் தீராத ஆசை!
நன்றி, விகடன்.
அதை எப்படி உருவாக்குவது?
''பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்க குறைந்தபட்சம் 2 முதல் 4 லட்சம் ரூபாய் போதுமானது. இந்தப் பங்கு முதலீட்டுக் கலவையில் குறைந்தபட்சம் 20 முதல் 25 பங்குகளாவது இருக்கவேண்டும். பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்க துறைகளின் அடிப்படையிலே முதலீடுகளை அமைத்துக்கொள்வது நல்லது. துறைகளைப் பொறுத்தவரை நீண்டகாலத்தில் வளர்ச்சி கொண்டவை. ஆனால், எப்போதும் எல்லாத் துறையும் வளர்ச்சியில் இருக்காது. இவை ஒரு சுழற்சியின் அடிப்படையில் மாறிமாறி வரும். முதலீடு செய்யும்போது தற்போது எந்தத் துறைகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது எனப் பார்க்கவேண்டும். அதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யவேண்டும். இது எளிமையாக இருக்கும்.
உதாரணமாக, இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு என்றால், அதனை பத்து துறைகளில் கலந்து முதலீடு செய்யலாம். ஒரு நிறுவனப் பங்கில் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு என இருபது பங்குகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்யும் நிறுவனங்கள் அத்துறையில் மிகச்சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களாக இருக்கவேண்டும். சந்தை சரிவின்போது இவற்றின் விலைகளும் சரிந்தாலும், மற்ற பங்குகளைவிட விரைவில் மீண்டும் அதிகரிக்கும்.
அல்லது நிறுவனங்களின் அடிப்படையில் சந்தையில் உள்ள பத்து பெரிய நிறுவனப் பங்குகளில் 50 சதவிகிதம் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 50 சதவிகிதத்தை பி.எஸ்.இ-500 பிரிவில் உள்ள சிறந்த 10 பங்குகள் என பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்கலாம்.
தேர்வு செய்துள்ள நிறுவனப் பங்கு-களின் விலை எப்போது குறைவாக உள்ளதோ, அப்போதுதான் முதலீட்டை துவக்கவேண்டும். கையில் பணம் இருப்பதற்காக அவசரப்பட்டு ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது. பொறுமை அவசியம் தேவை. குறிப்பாக சரியும் சந்தையில் நம்மால் சிறந்த பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்தவகையில் இப்போதுள்ள சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.
ஒரு நிறுவனப் பங்குக்கு பத்தாயிரம் ரூபாய் என்று முடிவாகிவிட்ட நிலையில், அவற்றை ஒரே தவணையில் முதலீடு செய்யக்கூடாது. இந்தத் தொகையை நான்காகப் பிரித்து முதலீடு செய்யவேண்டும். விலை குறைந்து இருக்கும்போது முதலில் 2,500 ரூபாய்க்கு பங்குகளை வாங்கவேண்டும். அதற்கு அடுத்து விலை குறையும்போது அதே நிறுவனப் பங்கில் இரண்டாவது முறையாக 2,500 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்த முறையிலேயே மீதமுள்ள பணத்தையும் 2,500 ரூபாய் ஆகப் பிரித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்துவர வேண்டும். இது ஒரு நிறுவனப் பங்குக்கான முதலீட்டு முறை. இது போலவே மொத்தம் இருபது பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் பங்குக் கலவை ஒன்றை உருவாக்க ஆறு மாதம் முதல் பன்னிரண்டு மாதம் வரை பிடிக்கும்.
இவ்வாறு உருவாக்கிய பங்குக் கலவையை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது கிடைக்கும் லாபத்தை அதிகப்படுத்துவதற்கான காலம். இதற்கிடையில் சந்தையின் புள்ளிகள் சரியலாம், உயரலாம். பங்குக் கலவை மூலம் ஆண்-டுக்கு சராசரியாக 25 முதல் 30% வருமானத்தை எதிர்பார்க்கலாம்'' என்ற பிரபாகர் பங்குகளை விற்பதற்கான தருணம் பற்றியும் சொன்னார்.
''முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள் என்றாலும் விற்பதற்காக அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வருமானம் இடைப்பட்ட காலத்தில் கூட கிடைக்கலாம். அப்போது எந்தப் பங்கு லாபம் கொடுக்குமோ அதில் ஐம்பது சதவிகிதப் பங்குகளை விற்று லாபம் எடுத்து வெளியேறலாம். மீதமுள்ள பங்கை பங்குக் கலவையில் தொடர்ந்து வைத்திருக்கலாம். லாபத் தொகையைக் குறைந்த விலைக்கு வரும் வேறு நல்ல வளர்ச்சியுள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு முறையானது விற்க, வாங்க என தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். நம் இலக்கு மூன்று வருடங்கள். அந்தச் சமயத்தில் எவ்வாறு முதலீடு செய்தோமோ அதே முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கவேண்டும்.
செய்த முதலீடுகளை வருடத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து பார்க்கவேண்டும். வளர்ச்சி உள்ள துறைகளாக இருந்தவை இப்போது தலைகீழாக மாறியிருக்கலாம். அந்தத் துறைக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ விஷயங்கள் நடந்திருக்கலாம். அந்த நிறுவனப் பங்குகளை வேறு நிறுவனம் அல்லது வேறு துறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றும்போது நஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல முதலீட்டு ஆலோசகர்கள் உதவியுடன் இதைச் செய்வது நல்லது. அதேபோல் வெளியில் எடுக்கும் பணத்தையும் திட்டமிடாமல் ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது'' என்றவர், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.
ஒரு துறையில் இரண்டு பங்குகளுக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது.
நிறுவனம் தொடர்ந்து டிவிடெண்ட் கொடுத்து வந்துள்ளதா, குறிப்பாக ஒரு பங்கின் சந்தை விலைக்கு எத்தனை சதவிகிதம் டிவிடெண்ட் கொடுத்துள்ளது என்று கவனிக்கவேண்டும்.
சந்தையில் அதிகமாக வர்த்தகமாகும் பங்குகளாகத் தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்குத் தெரியாத அதே சமயம் சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.
உற்பத்தியைத் தொடங்காத நிறுவனங்களை இந்தக் கலவையில் சேர்க்காதீர்கள்.
இதர வருமானத்தால் அதிக லாபம் பெறும் நிறுவனப் பங்குகளைத் தவிர்த்து விடுங்கள்.
விற்பனை (நெட் சேல்ஸ்) அதிகம் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யுங்கள்.''
நன்றி, விகடன்.
இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please contact the content providers to delete copyright