17 May 2008

மலிவு விலையில் மடிக்கணினி

சென்னை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரத்திற்கு மடிக் கணினிகள் வழங்கத் தமிழக அரசு நிறுவனமான எல்காட் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் உமா சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு குறைந்த விலையில் தரமான மடிக்கணினி (லேப்-டாப் கம்ப்யூட்டர்) சப்ளை செய்ய 'எல்காட்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள ஏழை-பணக்காரர் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
இதற்காக வெளிப்படையான டெண்டர் மூலம் ஒரு லட்சம் மடிக்கணினிகள் வாங்கப்பட்டு மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படும். மாணவர்களின் படிப்புக்கு தேவையான வசதிகள் கொண்ட இந்த மடிக்கணினிகள் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கும். 3 ஆண்டு வாரண்டி கொடுக்கப்படும்

0 comments: