25 May 2008

அரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது

நாட்டின் முன்னணி கண் மருத்துவமனையான மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 'பில்கேட்ஸ் விருது' சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பவுன்டேஷன் இந்த விருதை வழங்குகிறது.

கண் பார்வை இழப்புத் தடுப்பில் அரவிந்த் மருத்துவமனை ஆற்றி வரும் உன்னத சேவையை பாராட்டி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் சிறந்த சேவை செய்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை பில்கேட்ஸ் பவுன்டேசன் வழங்குகிறது.

கண்பார்வை இழப்புத் தடுப்பு, குறைந்த விலையில் லென்ஸ் தயாரிப்பு, மருத்துவமனை நிர்வாகம் குறித்த பயிற்சி ஆகியவற்றி்ல் அரவிந்த் மருத்துவமனையின் செயல்பாட்டை பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுடன் 10 லட்சம் டாலர் நிதியும் பரிசாக வழங்கப்படும். வரும் 29ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் விழாவில், பில்கேட்ஸின் தந்தை இந்த விருதை அரவிந்த் மருத்துவமனை தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமியிடம் வழங்கவுள்ளார்.

1 comments:

  • shinemadurai says:
    20 April 2009 at 3:05 pm

    சிறந்த பதிவு.
    மேலும் மெருகூட்டுங்கள் கிரிகன்ஸ்.
    மதுரையில் எஙகே உங்கள் வாசம்?
    என்ன பணி?