27 May 2008

பாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிடம்

நாட்டின் பங்கு சந்தையில், சிறந்த சேமிப்பு முறைகளில், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் முன்னணியில் இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜேபிமார்கன் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி தலைவர் கோஷ் கூறுகையில், பங்குச் சந்தை முதலீட்டு நடைமுறைகள் பற்றி விபரங்கள் தெரிவதில்லை என்று கூறினார். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற பலரும் விரும்புவதாகவும், ஆனால், அவர்களுக்கு பங்குசந்தை முதலீட்டில் ஏற்படும் பாதிப்புகளில் அனுபவம் இல்லாததால். நஷ்டத்தை அடைவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே, சேமிப்பு என்ற வகையில், பணத்தைப் பாதுகாக்க விரும்புவோர், வங்கி டெபாசிட், தங்கம் போன்றவற்றைவிட, அதிக லாபம் தரும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.. குறைந்த கட்டணத்தில், மியூச்சுவல் பண்ட் நிறுவன திட்ட மேலாளர்களின் முதலீடு அறிவு, மற்றும் அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறலாம் என்றும் நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

1 comments:

  • Anonymous says:
    27 May 2008 at 7:08 pm

    இவ்ளோ குறிகிய காலத்துல இத்தன பயனுள்ள blogs எங்களுக்கு குடுத்திரிகீங்க. உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். நன்றி.