18 June 2008

எந்த காதால் ஹலோ???

கடந்த மாதம் நண்பர் பிகேபி அவர்கள் இடது காதால் ஹலோ... என்கிற பதிவில் இடது காதால் மட்டுமே ஹலோ சொல்லுங்கள் என்று அவருக்கு வந்த மின் அஞ்சல் படத்தையும் வெளியிட்டு அதனால் எற்ப்படும் பாதிப்பையும் பற்றி எழுதியிருந்தார். அதை மறுத்து நண்பர் கார்திக்கேயன் அவர்கள் அப்படி எல்லாம் இல்லை எந்த காதால் ஹலோ சொன்னாலும் 10மணி நேரத்திற்க்கு மேல் பேசுபவர்களுக்கு தான் தான் அந்த பாதிப்பு வரும் என்றும் இந்தியாவி அதை பற்றிய அறிவு கம்மி என்றும் கூறியிருந்தார். இப்பேது தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இதற்க்குறிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. அதற்குறிய சுட்டிகள் சுட்டி1 சுட்டி2.

அதேபோல் இப்போதெல்லம் சிட்டுக்குருவிகளை பார்க்க முடிவதில்லை. (வேண்டுமென்றால் குருவி படம் பார்க்கலாம்). தேனீக்களும் குறைந்து வருவதாக தகவல். இவை அனைத்தும் செல்போன் கோபுரங்களின் மூலம் வரும் கதிர் வீச்சுகளினால் தான். தேன் கூட்டை கழைக்க முன்பெல்லாம் தீப்பந்தம் எடுத்துக்கொண்டு செல்வார்கள் இப்போது ஒரு செல்போனை எடுத்துக்கொண்டு சென்றால் அத்தனை தேனீக்களும் பறந்துவிடுமாம்...


எது எப்படி இருந்தாலும் செல்போன் பேசுபவர்களுக்கு பேசிக்கொண்டேதான் இருக்கப்போகிறர்கள். முன்பு குளிர் பானங்களில் பூச்சி கொல்லி மருந்து கலந்துள்ளதாக சொன்னார்கள் அதற்க்கா என்ன குளிர்பானங்கள் குடிப்பதையா விட்டுவிட்டர்கள்...

0 comments: